![ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வெளுத்து வாங்கும் மழை டெல்டாவில் 52,500 ஏக்கர் சம்பா மூழ்கியது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வெளுத்து வாங்கும் மழை டெல்டாவில் 52,500 ஏக்கர் சம்பா மூழ்கியது](https://cdn.magzter.com/1711436984/1732755093/articles/JTu4R1fRt1732773425532/1732773507506.jpg)
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வெளுத்து வாங்கும் மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் 52,500 ஏக்கர் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கியது. 2 லட்சம் மீனவர்கள் 2ம் நாளாக முடங்கினர். மண்டபம் மீன்பிடி இறங்குதளம் கடலில் மூழ்கியது. வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு பெற்றதை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் (26ம்தேதி) தொடங்கிய கனமழை நேற்று 2ம் நாளாக விடாமல் பெய்து வருகிறது. டெல்டா பகுதிகளான நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் மதியம் முதல் நேற்று காலை வரை இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. குறிப்பாக நாகப்பட்டிம் மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கியது. கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் விட்டு விட்டு மிதமான மழை பொழிந்தது.
நேற்றும் மழை நீடித்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பணைகளின் கதவுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 1500 ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள், திருவாரூர் மாவட்டத்தில் 1000 ஏக்கரில் ஒரு மாதமான இளம் சம்பா பயிர்கள், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கரில் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளது. கடல் சீற்றத்தால் டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 2 லட்சம் மீனவர்கள் நேற்றும் கடலுக்கு செல்லவில்லை. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்களாச்சேரி ஊராட்சி பாலூர் தெற்கு தெருவில் 150 ஆண்டு பழமையான வீட்டின் முன்பகுதி மழையால் இடிந்து விழுந்தது.
Bu hikaye Dinakaran Chennai dergisinin November 28, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinakaran Chennai dergisinin November 28, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
![திருவொற்றியூர் பகுதியில் மின் புதைவட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் வாரியத்தில் மனு திருவொற்றியூர் பகுதியில் மின் புதைவட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் வாரியத்தில் மனு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1997250/BF3Uc5jZY1739772170097/1739772289925.jpg)
திருவொற்றியூர் பகுதியில் மின் புதைவட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் வாரியத்தில் மனு
திருவொற்றியூர், மணலி பகுதிகளில் மின் கம்பிகளை புதைவடமாக மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு இடங்களில் மின் கம்பிகள் புதைவடமாக மாற்றப்பட்டுள்ளது.
பாமாயில் விலை உயர்வு
விருதுநகர் மார்க்கெட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வாரந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, பாமாயில் கடந்த வாரம் ரூ.2,130க்கு விற்கப்பட்டது.
![மீண்டும் மொழிப்போரை உருவாக்க வேண்டாம் வேல்முருகன் எச்சரிக்கை மீண்டும் மொழிப்போரை உருவாக்க வேண்டாம் வேல்முருகன் எச்சரிக்கை](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1997250/-y3OhSx6F1739770918825/1739770946543.jpg)
மீண்டும் மொழிப்போரை உருவாக்க வேண்டாம் வேல்முருகன் எச்சரிக்கை
திருச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மும்மொழி கொள்கை மோசடி, ஏமாற்றும் கொள்கை. தாய்மொழி கொள்கை தான் உலகத்தில் தலை சிறந்த கொள்கை.
பட்டியல் சமூக மாணவியை காலில் விழ வைத்து கொடுமை
கோவில்பட்டியில் மாணவியை சக மாணவி காலில் விழ வைத்த தனியார் கல்வி நிறுவன கண்காணிப்பாளர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஓ காட் பியூட்டிஃபுல் டைட்டில் டீசர் ரிலீஸ்
பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் தயாரித்து இருக்கும் படம், ‘ஓ காட் பியூட்டிஃபுல்’.
![புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்காதது வரவேற்கத்தக்கது வரியை வாங்கிட்டு நிதி கொடுக்க மறுப்பதா? - ஒன்றிய அரசுக்கு சீமான் சரமாரி கேள்வி புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்காதது வரவேற்கத்தக்கது வரியை வாங்கிட்டு நிதி கொடுக்க மறுப்பதா? - ஒன்றிய அரசுக்கு சீமான் சரமாரி கேள்வி](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1997250/iGI6kOxpH1739770946913/1739770999397.jpg)
புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்காதது வரவேற்கத்தக்கது வரியை வாங்கிட்டு நிதி கொடுக்க மறுப்பதா? - ஒன்றிய அரசுக்கு சீமான் சரமாரி கேள்வி
நாம் தமிழர் கட்சியின் ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர் மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று அவிநாசியில் நடைபெற்றது.
![விலங்குகள் பாதுகாப்பு குறித்து செல்லப்பிராணியுடன் நாடு முழுவதும் பாதயாத்திரை பெங்களூரு வாலிபருக்கு குவியும் பாராட்டு விலங்குகள் பாதுகாப்பு குறித்து செல்லப்பிராணியுடன் நாடு முழுவதும் பாதயாத்திரை பெங்களூரு வாலிபருக்கு குவியும் பாராட்டு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1997250/Hdc6FaK5U1739772488764/1739772530968.jpg)
விலங்குகள் பாதுகாப்பு குறித்து செல்லப்பிராணியுடன் நாடு முழுவதும் பாதயாத்திரை பெங்களூரு வாலிபருக்கு குவியும் பாராட்டு
கர்நாடக மாநிலம் பெருங்களூருவைச் சேர்ந்தவர் சுமன் அஸ்வின் (22). இவர், 3ம் ஆண்டு பொறியியல் பட்டய கல்வி படித்து வருகிறார்.
திருவள்ளூர் அடுத்த தொழுவூரில் இலவச மருத்துவ முகாம்
திருவள்ளூரில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த தொழுநோயாளிகளுக்கு கால் புண்ணுக்கு சிகிச்சை அளித்ததுடன், 40 பேருக்கு கட்டு கட்டும் வகையில் சுய பாதுகாப்பு மருந்து பெட்டகமும் வழங்கப்பட்டன.
![துபாய் நீச்சல் குளத்தில் மூழ்கி நெல்லை தந்தை - மகன் பலி துபாய் நீச்சல் குளத்தில் மூழ்கி நெல்லை தந்தை - மகன் பலி](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1997250/kFJ0F9DTn1739773072916/1739773119643.jpg)
துபாய் நீச்சல் குளத்தில் மூழ்கி நெல்லை தந்தை - மகன் பலி
துபாயில் நீச்சல் குளத்தில் மூழ்கி நெல்லையைச் சேர்ந்த தந்தை – மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நிதி கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்பதா? தமிழ்நாட்டை சீண்டுவது தீயை தீண்டுவதற்கு சமம் - ஒன்றிய அரசுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை
நிதி உரிமையை கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்பதா? என்றும், தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம் என்றும் ஒன்றிய அரசை உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.