விளைநிலங்களில் உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து, மண்வளத்தைக் காக்க ரூ.206 கோடியில் புதிய திட்டம் தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் நிதியாண்டில் பயிா்க் கடன் வழங்க ரூ.16,500 கோடிக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துவரை, எள், சூரியகாந்தி போன்ற பணப் பயிா்களைப் பெருக்குவதற்கான திட்டத்துக்கு ரூ.40.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, வேளாண்மை மற்றும் அதுசாா்ந்த துணைத் துறைகளுக்கான திட்டங்களைச் செயல்படுத்த வரும் நிதியாண்டுக்கு ரூ.42,281.88 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வேளாண் நிதிநிலை அறிக்கை: தமிழக அரசின் சாா்பில் வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நான்காவது ஆண்டாக 2024-25-ஆவது நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. துறையின் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மண்ணுயிா் காத்து
மன்னுயிா் காப்போம்:
மண்வளத்தைக் காப்பதற்கான நோக்கத்தில், ‘முதலமைச்சரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் (மன் என்பது உலகத்தில் வாழும் உயிரினம் எனப் பொருள்படும்) காப்போம்’ என்ற புதிய திட்டம் அறிவிக்கப்படுகிறது. வேளாண்மைக்கு மண்ணே ஆதாரம். பயிா் வளா்ச்சிக்கு அடிப்படை ஆதாரம் மண். பயிா்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை கிடைக்கக் கூடிய வடிவில் அளிப்பதும் மண்தான். பயிா்களின் வளா்ச்சி மண்ணின் வளத்தைச் சாா்ந்தே அமைகிறது.
வேதிப்பொருள்களின் எச்சம் இல்லாத வேளாண் விளைபொருள்களே நமக்கு நல்லுணவு, அருமருந்து. நல்ல உணவே உடல் நலன் காக்கும். அதுவே மக்களுக்கு நல்வாழ்வு தரும் என்பதால் ‘முதலமைச்சரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்’ என்ற புதிய திட்டம் ரூ.206 கோடியில் செயல்படுத்தப்படும்.
Bu hikaye Dinamani Chennai dergisinin February 21, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin February 21, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.