பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வையும் பெண்ணடிமைத்தனத்தையும் நியாயப்படுத்தும் பழமைவாத வர்ணாஸ்ரம மனுவாத சனாதன் சிந்தனைகளுக்கு எதிராக. இந்திய துணைக்கண்டத்தில் தந்தை பெரியார். அண்ணல் அம்பேத்கர், ஜோதிபா பூலே நாராயணகுரு, வள்ளலார், வைகுண்டர் என பல பெரியோர்கள் குரல் கொடுத்து வந்துள்ளனர். அந்த மரபின் நீட்சியாக, சாதியின் பெயராலும் சாஸ்திரங்களின் பெயராலும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை பெண்களின் சமத்துவ வேட்கையை மறுத்து சுரண்டலை நியாயப்படுத்துவதற்கு எதிரான கருத்தியல் ரீதியான வாதங்கள் இந்திய தேசத்தின் பல முனைகளில் இருந்தும் தொடர்ந்து ஒலிப்பதை சமூகவியல் ஆய்வாளர்கள் அறிவார்கள்.
நிலவுக்குச் சந்திராயன் விடும் இந்தக் காலத்திலும் சாதி வேற்றுமைகள் கற்பித்தும் வர்ணாசிரமக் கருத்துகளைச் சொல்லி பாகுபாடுகளை வலியுறுத்தியும் இந்தப் பிளவுபடுத்தும் எண்ணங்களுக்கு ஆதரவாக சாஸ்திரங்களையும், சில பழைய நூல்களையும் மேற்கோள் காட்டியும் சிலர் பிரச்சாரம் செய்து வரத்தான் செய்கிறார்கள்.
குழந்தைத் திருமணத்தை ஆதரித்து மாநிலத்தின் ஆளுநரே பேசுகிறார். குழந்தைத் திருமணம் செய்தவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்தால், அதற்கும் தடை போடுகிறார். நானே குழந்தைத் திருமணம் செய்து கொண்டவன்தான்' என்றும், அந்த எண்ணங்களை நியாயப்படுத்திப் பேசி வருகிறார். பெண்களை இழிவுபடுத்தியும் அவர்கள் வேலைக்குப் போகக் கூடாது என்றும் கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்ளக் கூடாது என்றும், மறுமணத்துக்கு மந்திரமே கிடையாது என்றும் இன்னமும் சிலர் ஆன்மீக மேடைகளில் பேசி வருகிறார்கள்.
Bu hikaye Maalai Express dergisinin September 07, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Maalai Express dergisinin September 07, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
வைகை அணையில் இருந்து மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது.
சோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 7 பேர் பலி
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு சோமாலியா.
7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது.
கவரப்பேட்டை ரெயில் விபத்து மேலும் 20 பேருக்கு சம்மன்
சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் கடந்த பந்தேதி இரவு சரக்கு ரெயில் மீது பாகுமதி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது.
அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை உயர்வு 21ம் தேதி ரேஷன் கடைகள் மூலம் தீபாவளி அரிசி, சர்க்கரை
முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
குறுக்குவில் சுடுதல் போட்டியில் கம்பைநல்லூர் ஸ்ரீராம் பப்ளிக் பள்ளி மாணவர் சாதனை
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான சினெர்ஜி ஷாட் துப்பாக்கி சுடுதல் மன்றம் மற்றும் கிராஸ்போ சூட்டிங் அசோசியேஷன் இணைந்து நடத்திய 13 வது தேசிய அளவிலான குறுக்குவில் சுடுதல் போட்டி உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் ஆர்.கே.ஜி. குளோபல் பள்ளியில் நடைபெற்றது.
3% அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்: முதல்வருக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை
மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கடந்த ஜூலை 2024 முதல் 3சதவிகித அகவிலைப்படியினை முன் தேதியிட்டு ரொக்கமாக வழங்கியிருக்கிறது.
மழையால் பாதிக்கப்பட்டவர்களில் 15 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது: தமிழக அரசு
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது