ஆதிதிராவிடர் மக்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு வழங்கப்படும். இலவச வேட்டி சேலைக்கான பணம் இரட்டிப்பாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். புதுவையின் 69வது விடுதலை நாள் விழா கடற்கரை சாலை காந்தி திடலில் நேற்று நடந்தது. விழாவையொட்டி கடற்கரை சாலை வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்கு கொடி கம்பத்துடன் மேடை அமைக்கப்பட்டு இருந்தது. காலை சரியாக 9 மணிக்கு முதலமைச்சர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றினார்.
தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ரங்கசாமி பார்வையிட்டார். பின்னர் மேடைக்கு திரும்பிய முதலமைச்சர் ரங்கசாமி விடுதலை நாள் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தடயவியல் மருத்துவம், பொது மருத்துவம், மருந்தியல், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல், கண் மருத்துவம், குழந்தை மருத்துவம் மனநல மருத்துவம் ஆகிய துறைகளில் 8 புதிய மேற்படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
இது தவிர கல்வியாண்டு இந்த முதல் புதிதாக செவிலியர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 60 புதிய மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். காரைக்கால் அன்னை தெரசா முதுநிலை பட்ட மேற்படிப்பு மையத்தில் தற்போதுள்ள செவிலியர் பள்ளி நடப்பு கல்வி ஆண்டில் இருந்து 40 மாணவர் சேர்க்கை இடங்களுடன் செவிலியர் கல்லூரியில் தரம் உயர்த்தப் பட்டுள்ளது.
Bu hikaye Maalai Express dergisinin November 02, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Maalai Express dergisinin November 02, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
வைகை அணையில் இருந்து மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது.
சோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 7 பேர் பலி
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு சோமாலியா.
7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது.
கவரப்பேட்டை ரெயில் விபத்து மேலும் 20 பேருக்கு சம்மன்
சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் கடந்த பந்தேதி இரவு சரக்கு ரெயில் மீது பாகுமதி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது.
அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை உயர்வு 21ம் தேதி ரேஷன் கடைகள் மூலம் தீபாவளி அரிசி, சர்க்கரை
முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
குறுக்குவில் சுடுதல் போட்டியில் கம்பைநல்லூர் ஸ்ரீராம் பப்ளிக் பள்ளி மாணவர் சாதனை
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான சினெர்ஜி ஷாட் துப்பாக்கி சுடுதல் மன்றம் மற்றும் கிராஸ்போ சூட்டிங் அசோசியேஷன் இணைந்து நடத்திய 13 வது தேசிய அளவிலான குறுக்குவில் சுடுதல் போட்டி உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் ஆர்.கே.ஜி. குளோபல் பள்ளியில் நடைபெற்றது.
3% அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்: முதல்வருக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை
மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கடந்த ஜூலை 2024 முதல் 3சதவிகித அகவிலைப்படியினை முன் தேதியிட்டு ரொக்கமாக வழங்கியிருக்கிறது.
மழையால் பாதிக்கப்பட்டவர்களில் 15 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது: தமிழக அரசு
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது