தமிழ்நாடு விஜய் ரசிகர்கள் இந்த அமைப்பு மூலம் மக்கள் நலப்பணிகளை செய்து வந்தனர். இந்த இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற அவர் முடிவு செய்தார்.
கடந்த சில மாதங்களாக இதற்காக அவர் பல்வேறு பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தினார். தமிழக அரசியல் கள நிலவரம் பற்றிய ஆய்வு ஒன்றையும் அவர் மேற்கொண்டார். பிறகு தனது விஜய் மக்கள் இயக்கத்தை பலப்படுத்தினார்.
அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து நேற்று அவர் புதிய அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார். அவர் தொடங்கிய கட்சிக்கு "தமிழக வெற்றி கழகம்" என்று பெயரிட்டுள்ளார். நேற்று மதியம் தேர்தல் ஆணையத்திலும் இந்த புதிய கட்சியை பதிவு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின.
பாராளுமன்றத்துக்கு வருகிற ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. நடிகர் விஜய் தொடங்கி உள்ள கட்சி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவது இல்லை என்று நடிகர் விஜய் தனது திட்டத்தை வெளியிட்டுள்ளார்.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலே தனது இலக்கு என்றும் அவர் தெளிவுப்படுத்தி உள்ளார். பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு புதிய கட்சியின் நடவடிக்கைகள் செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் விஜய் சுட்டிக்காட்டி உள்ளார்.
Bu hikaye Maalai Express dergisinin February 03, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Maalai Express dergisinin February 03, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
வைகை அணையில் இருந்து மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது.
சோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 7 பேர் பலி
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு சோமாலியா.
7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது.
கவரப்பேட்டை ரெயில் விபத்து மேலும் 20 பேருக்கு சம்மன்
சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் கடந்த பந்தேதி இரவு சரக்கு ரெயில் மீது பாகுமதி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது.
அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை உயர்வு 21ம் தேதி ரேஷன் கடைகள் மூலம் தீபாவளி அரிசி, சர்க்கரை
முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
குறுக்குவில் சுடுதல் போட்டியில் கம்பைநல்லூர் ஸ்ரீராம் பப்ளிக் பள்ளி மாணவர் சாதனை
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான சினெர்ஜி ஷாட் துப்பாக்கி சுடுதல் மன்றம் மற்றும் கிராஸ்போ சூட்டிங் அசோசியேஷன் இணைந்து நடத்திய 13 வது தேசிய அளவிலான குறுக்குவில் சுடுதல் போட்டி உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் ஆர்.கே.ஜி. குளோபல் பள்ளியில் நடைபெற்றது.
3% அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்: முதல்வருக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை
மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கடந்த ஜூலை 2024 முதல் 3சதவிகித அகவிலைப்படியினை முன் தேதியிட்டு ரொக்கமாக வழங்கியிருக்கிறது.
மழையால் பாதிக்கப்பட்டவர்களில் 15 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது: தமிழக அரசு
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது