விண்ணில் நீண்ட நாள் தவித்த சுனிதாவில்லியம்ஸ் பூமிக்குதிரும்பினார்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஸ்டார்லைனர் விண்கலம் பழுதாகி சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த 9 மாதங்களாக சிக்கித் தவித்த விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் டிராகன் விண்கலம் மூலம் இன்று பத்திரமாக பூமிக்கு திரும்பினர். புளோரிடா கடல் பகுதியில் சுனிதா வில்லியம்ஸ் வந்த விண்கலம் பாதுகாப்பாக இறங்கியது. இதன் மூலம் சுனிதா வில்லியம்ஸ் நீண்ட காலம் விண்வெளியில் வசித்த பெண்மணி என்ற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாகக் கூறியுள்ள நாசா, அடுத்த சில மாதங்கள் அவர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சார்பில், போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் விண்வெளி சென்ற சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் புட்ச் வில்மோர் (வயது 61) இருவரும் கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி சர்வதேச மையத்திற்கு புறப்பட்டுச் சென்றனர். ஸ்டார்லைனர் விண்கலம் கடந்த ஜூன் 7ஆம் தேதி பூமியில் இருந்து 400 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தது.
அங்கு ஆய்வுப்பணிகளை முடித்து விட்டு ஒரு வாரத்தில் பூமிக்கு திரும்ப வேண்டிய சுனிதா, வில்மோர் இருவரும் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விண்வெளியிலேயே சிக்கிக் கொண்டனர். விண்கலத்தில் லியம் வாயு கசிவு மற்றும் உந்துவிசை கருவியில் ஏற்பட்ட கோளாறால் இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் உண்டானது. இதனால் 8 நாள் பயணம் 8 மாதமாக நீட்டிக்கப்பட்டது.
நீண்ட போராட்டத்திற்கு பிறகும் போயிங் நிறுவனத்தால் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்ய முடியவில்லை. இதனால் கடந்த 9 மாத காலமாக சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் விண்வெளி மையத்தில் தவித்து வந்தனர்.
இதையடுத்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் க்ரூ விண்கலம் மூலம் சுனிதா, வில்மோர் இருவரையும் பூமிக்கு அழைத்து வர நாசா ஏற்பாடுகளை செய்தது. அதற்கு முன்பாக சிலமுறை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயணம் தடைபட்டு தாமதமானது.
Bu hikaye Malai Murasu dergisinin March 19, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Malai Murasu dergisinin March 19, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
முதல்வர் ஸ்டாலினுக்கு எர்ணாவூர் நாராயணன் பாராட்டு!
திருச்சியில் 290 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயர் சூட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக எர்ணாவூர் நாராயணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கை: இந்தியா மீதான 100 சதவீத வரி இன்று முதல் அமலுக்கு வருகிறது!
இந்தியாவிற்கு போட்டியாக பரஸ்பர வரி விதிக்கும் அமெரிக்காவின் நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
மதுரவாயலில் 2 ஜே.சி.பி. எந்திரங்களின் பேட்டரிகள் திருட்டு!
மதுரவாயலில் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே நிறுத்தப்பட்ட 2 ஜே.சி.பி. எந்திரங்களின் பேட்டரிகள் இரவில் திருடப்பட்டது.
காஷ்மீருக்குள் ஊடுருவிய 5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொலை!
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவ படையினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மீண்டும் இந்திய நிலைகளை நோக்கி தாக்குதல் நடத்தினர்.
அண்ணாமலை வேண்டும்; அ.தி.மு.க. வேண்டாம்!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அண்ணாமலைக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கச்சத்தீவை தாரை வார்த்த தி.மு.க.வே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது வேடிக்கையானது! டி.டி.வி. தினகரன் அறிக்கை!!
கச்சத்தீவை தாரைவார்த்த திமுகவே, அதனை மீட்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது வேடிக்கையானது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா : 35 பெண்களுக்கு சூரிய மகள் விருது! துர்கா ஸ்டாலின், நடிகர்கள் பிரபு, சத்தியராஜ் வழங்கினர்!!
முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு சாதனை புரிந்த மகளிர் 35 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

பல்லாவரம் அருகே பெண்ணை கல்லால் அடித்துக் கொன்ற கள்ளக்காதலன்!
பல்லாவரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணை கல்லால் அடித்துக் கொன்ற தாம்பரம் மாநகராட்சி லாரி ஓட்டுநர், தானாகவே சென்று காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

திருப்போரூர் அருகே பைக் மீது கார் மோதி 3 பேர் பரிதாப சாவு!
திருப்போரூர் அருகே மோட்டார்சைக்கிள்மீது கார் மோதியது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகிவிட்டார்கள்.

கச்சத்தீவை மத்திய அரசுமீட்கவேண்டும்!
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!!