பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையில் தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் சமூகங்களை ஒன்றிணைத்து தேசிய நல்லிணக்கம் உறுதி செய்யப்பட்டால் தான் தேசியப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். இனவாத கருத்துக்களின் வெளிப்பாடுகளினால் தான் 30 வருட கால யுத்தம் நடந்தது.
ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு கட்டவிழ்த்து விட்ட இனவாதங்களினால் தான் இந்த நாடு 30 வருட கால யுத்தத்தை எதிர்கொண்டது.
யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் இனங்களுக்குகிடையில் தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படவில்லை. வடக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று கூச்சலிடும் அரச தரப்பு எம்.பி.யான சரத் வீரசேகரவின் மூளையை பரிசோதனை செய்ய வேண்டும்.
இவர்கள் ஒருபோதும் தேசிய நல்லிணக்கத்தை எதிர்பார்க்கவில்லை. இனவாதம் தோற்றம் பெறும் வகையில் தான் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். இனவாதத்தை பரப்பி அதன் ஊடாக தமது இருப்பை தக்கவைத்துக் கொள்ளவே தொடர்ந்து முயற்சிக்கிறார்கள். வடக்கு மற்றும் தெற்கில் அரசியல் தீர்வுகளுக்கு முன்னர் தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் என்றார்.
Bu hikaye Tamil Mirror dergisinin November 24, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Tamil Mirror dergisinin November 24, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
“வாய்ப்பை பெண்களுக்கு வழங்கவும்”
பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பை பெண்களுக்கு வழங்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கஃபே அமைப்பு கேட்டுக்கொள்கிறது.
தென்னாபிரிக்காவை வென்றது அயர்லாந்து
தென்னாபிரிக்காவுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் திங்கட்கிழமை (07) நடைபெற்ற மூன்றாவது போட்டியில் அயர்லாந்து வென்றது.
ஜனாதிபதித் தேர்தலில் கையிஸ் சையத் வெற்றி
வடக்கு ஆபிரிக்க நாடான துனீஷியாவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கையிஸ் சையத் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இன்று இரண்டாவது போட்டி: இந்தியாவுக்கு சவர்லளிக்குமா பங்களாதேஷ்?
இந்திய, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியானது டெல்லியில் புதன்கிழமை (09) 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் மீண்டும் மிரட்டல்
கொரியயாவில் போர் பதற்றத்தை ஏற்படுத்தும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.
பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் இங்கிலாந்து இந்திய, பங்களாதேஷ்
அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியானது டெல்லியில் புதன்கிழமை (09) 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் எச்.ஐ.வி அதிகரிப்பு
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இவ்வருடம் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானவர்களின் துரித அதிகரிப்பு குறித்து சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
2028 இல் கடனை அடைக்க வேண்டுமானால் “அரசியல் ஸ்திரத்தன்மை வேண்டும்”
2028ஆம் ஆண்டிற்கான கடனை அடைப்பதற்கு எமது நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைய வேண்டும். அந்நிய நேரடி முதலீடுகள் வலுப்படுத்தப்பட வேண்டும். இங்கு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையும் அரசியல் ஸ்திரத்தன்மையும் பாதுகாக்கப்பட வேண்டும். புதிய முதலீடுகளுக்கு இங்குக் காணப்படும் சம்பிரதாய சட்ட திட்டங்கள் மாற்றியமைக்கப் பட வேண்டும்.
சட்டத்தரணிக்கு எட்டு வருட கடூழிய சிறை
காணி உறுதிகளை தயாரித்து மோசடி செய்த குற்றச்சாட்டில் குற்றம் சுமத்தப்பட்ட சட்டத்தரணி ஒருவரை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே, அவருக்கு செவ்வாய்க்கிழமை (08) அன்று 08 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
“மாயமான பக்கங்கள் குறித்து விசாரணை”
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பக்கங்கள் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத், தெரிவித்துள்ளார்.