திசைகாட்டி அரசாங்கம் “திக்குத் தெரியாது தடுமாறுகிறது”

ஆனால், முதலாளித்துவ வர்க்கம் என்று சொல்லப்பட்ட அரசாங்கங்கள் மக்களுக்கு நல்லதையே செய்துள்ளன. அவ்வாறு செய்த நல்லனவற்றைக் கூட இவர்கள் குறை கூறித் திரிகின்றனர். தெளிவான அதிகாரம் கிடைத்தும் இன்று இவர்களால் எதையுமே செய்ய முடியாது புலம்பிக் கொண்டிருக்கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
முதலாளித்துவ வர்க்க அரசு நியாயமான விலையில் அரிசியைப் பெற்றுக் கொடுக்கும் போது, உழைக்கும் வகுப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திசைகாட்டி அரசு 100 ரூபாய்க்கு மேலான விலையில் இன்று அரிசியை விற்பனை செய்து வருகிறது.
நாட்டை அழித்ததாக சொல்லப்படும் அரசாங்கங்கள் நியாயமான விலையில் தேங்காயை விற்கும் போது, உழைக்கும் வகுப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக சொல்லப்படும் திசைகாட்டி இன்று 100 ரூபாய்க்கும் அதிகமான விலையில் தேங்காயை விற்பனை செய்து வருகிறது. முதலாளித்துவ வர்க்க அரசாங்கங்கள் அவ்வப்போது உரிய நேரத்துக்கு உர மானியங்களை வழங்கி வந்தன. ஆனால், அறுவடை முடிந்ததுமே இந்த திசைகாட்டி அரசாங்கம் உர மானியத்தை வழங்கி வருகிறது. இந்த அரசாங்கத்தால் உரிய நேரத்துக்கு உரத்தைக் கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர்களுடன் ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
Bu hikaye Tamil Mirror dergisinin March 24, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Tamil Mirror dergisinin March 24, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap

ஹலான்டுக்கு கணுக்கால் காயம்
இங்கிலாந்து கால்பந்தாட்ட சங்க சவால் கிண்ணத் தொடரின் போர்ண்மெத்துக்கெதிரான காலிறுதிப் போட்டியின்போது மன்செஸ்டர் சிற்றியின் முன்களவீரர் எர்லிங்க் ஹலான்ட் கணுக்கால் காயத்துக்குள்ளானதாக அக்கழகம் திங்கட்கிழமை (31) தெரிவித்துள்ளது.

நித்தியானந்தா இறந்து விட்டார்?
நித்தியானந்தா இறந்து விட்டார் என ஆன்மிக சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தபோது, அவருடைய சகோதரியின் மகன் கூறினார்.

மியன்மார், தாய்லாந்துக்காக எமது கடமையைச் செய்வோம்
மியன்மாரில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் அணு உலைகளை அமைப்பதற்கு ட்ரம்ப் அனுமதி
அமெ இந்தியாவில், அணு உலைகளை அமைப்பதற்கு, ஹோல்டெக் என்ற அமெரிக்கா நிறுவனத்திற்கு ட்ரம்ப் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இருவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு
புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் ஆகிய இருவரின் விளக்கமறியல் உத்தரவுகள், செவ்வாய்க்கிழமை (01) அன்று நீடிக்கப்பட்டன.

யானைகளால் பாதிக்கும் பிள்ளைகளுக்கு நிதியுதவி
காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைந்து அன்றாட செயற்பாடுகளுக்கு பாதிப்பை எதிர்கொண்டிருக்கும் குடும்பங்களிலுள்ள பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கான ஊக்குவிப்பாக நிதியுதவியை வழங்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடிய ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகச் சபை தீர்மானித்துள்ளது.

இம்ரான் கானுக்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஐ.பி.எல்: கொல்கத்தாவை வீழ்த்திய மும்பை
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), மும்பையில் திங்கட்கிழமை (31) நடைபெற்ற கொல்கத்தா நைட் றைடர்ஸுடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வென்றது.

“எங்கும் செல்லேன்" 99
நடப்புப் பருவகால முடிவில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டிலிருந்து வெளியேற புரூனோ பெர்ணாண்டஸை அனுமதிக்க மாட்டேன் என அவருக்கு கூறியதாக அக்கழகத்தின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இத்தாலிய சீரி ஏ தொடர்: சமநிலையில் லேஸியோடொரினோ போட்டி
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (01) அதிகாலை நடைபெற்ற டொரினோவுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் லேஸியோ சமப்படுத்தியது.