நடிகர் முத்துராமன் அவர்களை வைத்து பல படங்களை நான் எழுதி, தயாரித்திருக்கிறேன். அவரும் ஜெயலலிதாவும் ஜோடியாக பல படங்களில் நடித்திருந்தாலும் அவருக்குப் பிடித்த படம் 'சூரியகாந்தி'. இந்தப் படம் பற்றி அடிக்கடி என்னிடம் சிலாகித்துப் பேசுவார். தனக்கு ஜோடியாக கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா நடித்த படங்கள் நல்ல வெற்றியைத் தந்ததால், அவர்களை தனது ராசியான ஜோடியாக நினைத்தார் முத்துராமன்.
அவர் என் கம்பெனி தயாரிப்பில் நடித்த மூன்றாவது படம் ‘பெத்த மனம் பித்து'. இந்தக் கதையை நான் அவரிடம் சொன்னதும், 'அருமையான கதையை எழுதியிருக்கீங்க' என என்னை ரொம்பவே பாராட்டிவிட்டு, 'கதாநாயகியாக சாரதா இல்லேன்னா கே.ஆர்.விஜயாவை ஒப்பந்தம் செய்தா நல்லா இருக்கும்... கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கும்' என்றார். அதை பலமுறை வலியுறுத்திச் சொன்னார்.
நானோ... ஜெயாதான் (ஜெயா குகநாதன்) கதாநாயகி என்பதில் பிடிவாதமாக இருந்தேன். மிக அழுத்தமான பாத்திரத்தில் ஜெயாவால் சோபிக்க முடியுமா? என்கிற சந்தேகம் அவருக்கு. 'எனக்கோ... ஜெயாவால் அந்த பாத்திரத்தில் மிளிர முடியும்' என்கிற அசைக்கமுடியாத நம்பிக்கை.
அதனால் ஜெயாவே நடித்தார். படம் செம ஹிட்டடித்தது. பல ஊர்களில் நூறு நாட்கள் ஓடியதுடன், வசூலையும் வாரிக்குவித்தது.
'பெத்த மனம் பித்து' படத்தின் நூறாவது நாள் வெற்றிவிழா இரண்டு முறை கொண்டாடப்பட்டது ரொம்ப விசஷமாக இருந்தது. தயாரிப்பாளர் என்கிற முறையில் நான் நடத்திய வெற்றிவிழாவில் அன்றைய முதல்வர் கலைஞர் கலந்துகொண்டு, கேடயங்களை சிறப்பித்தார். இரண்டாவது வெற்றிவிழாவை முத்துராமன் ரசிகர் மன்றத்தினர் நடத்தினர்.
நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் நடந்த இந்த விழாவில் பெரும்பாலும் பெண் பிரபலங்களே கலந்துகொண்டது ஹைலைட்டாக அமைந்தது. ஜெயலலிதா கேடயங்களை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பெண்களே கலந்துகொண்டனர். (இந்த புகைப்படத்தில் இருப்பது ஜெயசுதா, ஜெயா, மேடம் சௌந்தரா கைலாசம் (காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரத்தின் மாமியார்), ஜெயலலிதா, பானுமதி, சாவித்திரி, மனோரமா மற்றும் கேடயத்துடன் நான்.) பெண்களைப் பெருமைப்படுத்தும் ஒரு கலைவிழா போல் அந்த விழா அமைந்தது.
هذه القصة مأخوذة من طبعة October 19-22, 2024 من Nakkheeran.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة October 19-22, 2024 من Nakkheeran.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
அமைச்சர் Vs எம்.பி.முற்றும் மோதல்!
தி.மு.க. கூட்டணியிலிருக்கும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தைத் தீவிரமாகக் கையிலெடுத்தபோதே கூட்டணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுகிறதோ என்ற ஐயப்பாடு எழுந்தது.
சைபர் குற்றவாளிகளின் புதிய அவதாரம்! உஷார் மக்களே!
முன்பெல்லாம் நமது செல்போனுக்கோ, தொலைபேசிக்கோ அழைத்து துல்லியமான வடஇந்திய சாயலுடனான தமிழில், 'உங்க ஏ.டி.எம்.கார்டுமேல இருக்கும் பதினாறு நம்பர் சொல்லுங்கோ' என ஆரம்பிப்பார்கள். இதற்கே ஆயிரக்கணக்கான பேர் ஏமாந்தபோதும், பலரும் சுதாரித்துக்கொண்டு இவர்களிடமிருந்து நழுவிவிடுவோம்.
செருப்பு வீச்சு, பிரம்படி! திருநெல்வேலி நீட் கோச்சிங் கொடூரம்!
நீடாக்டராக முடியாது, உனக்குத் தகுதியில்லை\" எனத் தடுப்புச் சுவர் எழுப்பும் நீட் நமக்கு வேண்டாமென நீட்டிற்கு எதிராகக் குரல் கொடுக்கிறது தி.மு.க. அரசு. எனினும், \"செருப்பு வீச்சும், பிரம்பு அடியும் வாங்கிப் படித்தால் நீட்டில் பாஸ் செய்ய முடியும்.
பர்தா அணிந்து வந்து படம் பார்த்த ஜெயலலிதா
போயஸ் கார்டன் வீட்டுக்கு என்னை அழைத்து, 'என் வீட்டை சினிமா ஷூட்டிங்கிற்கு விடப்போறேன்' என்று சொன்னதுடன், மாற்றங்கள் செய்யப்பட்ட வீட்டை சுற்றிக்காட்டினார் ஜெய லலிதா.
மோசடிக் கல்லூரி! பரிதவிக்கும் மாணவ-மாணவிகள்!
கல்லூரி மாணவ -மாணவி கள் பரிதவித்து வருகிறார்கள்.
கிழியும் ஐக்கியின் முகத்திரை!
பாலியல் வல்லுறவு... | வன்கொடுமையில் சிறுவர் சிறுமிகள் | சித்ரவதைக் களமான ஈஷா!
திருவண்ணாமலை! துணை முதல்வர் முன்னுள்ள சவால்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா தென்னிந்தியாவில் புகழ்பெற்றது.
அ.தி.மு.க வைத்த வெடி! பார்வை பறிபோன காவல் அதிகாரி!
திருச்சி திருவெறும்பூர் அருகே அ.தி.மு.க.வின் 53வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின்போது பற்றவைத்த வெடியால் திருவெறும்பூர் சிறப்பு உதவி ஆய்வாளர் கண் பார்வை பறிபோன சோகம் நிகழ்ந்துள்ளது!
பா.ஜ.க.மிரட்டல்...அ.தி.மு.கவில் கலகக்குரல்!
அதை அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற ஆளுமைமிக்க தலைமை இல்லாமல் திணறுகிறது.
தூத்துக்குடி மதகுரு மீது தாக்குதல்! அ.தி.மு.க.மாஜிக்கள் அட்ராசிட்டி!
அ.தி.மு.க. மாஜிக்களின் அடிப்படிகள், கிறிஸ்தவ சேகர குரு நடத்திய தாக்குதல், தூத்துக்குடி பகுதியை பரபரப்பாக்கியுள்ளது.