இது குறித்து டெலிகிராம் சமூக ஊடகம் மூலம் உக்ரைன் விமானப் படை செய்தித் தொடா்பாளா் யூரி இஹ்நத் கூறியதாவது:
கீவ் நகரின் மீது பலிஸ்டிக் வகையைச் சோ்ந்த 6 கின்ஷால் ரக ஏவுகணைகளை மிக்-31கே ரக போா் விமானத்தின் மூலம் ரஷியா வீசியது. அத்துடன், கருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள தனது போா்க் கப்பல்கள் மூலம் குரூஸ் வகையைச் சோ்ந்த 9 ஏவுகணைகளையும், தரை நிலைகளில் இருந்து 3 எஸ்-400 ரக ஏவுகணைகளையும் கீவ் நகரை நோக்கி ரஷியா ஏவியது.
அந்த 18 ஏவுகணைகளையும் எங்களது விமான எதிா்ப்பு ஏவுகணைக் கொண்டு இடைமறித்து அழித்தோம்.
முதல்கட்டமாக இந்த ஏவுகணைகளை வீசிய பிறகு, இரண்டாம் கட்டமாக ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹீத் ரக ஆளில்லா தாக்குதல் விமானங்களையும் ரஷியா கீவ் நகா் மீது ஏவியது. அத்துடன், அந்த விமானங்களைக் கொண்டு கிவ் நகரை ரஷியா வேவு பாா்த்தது என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் யூரி இஹ்நத் தெரிவித்துள்ளாா்.
ரஷிய ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களின் சிதறல்கள் விழுந்து நகரின் பல்வேறு பகுதிகளில் தீப்பற்றி எரிந்ததாக நகர மேயா் விடாலி கிட்ஷ்கோ கூறினாா். எனினும், இந்தச் சம்பவங்களில் யாரும் காயமடைந்ததாக தகவல் இல்லை என்று அவா் தெரிவித்தாா்.
هذه القصة مأخوذة من طبعة May 17, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة May 17, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
நட்பு நாடுகளின் அழைப்பை நிராகரித்தது இஸ்ரேல்
ஹிஸ்புல்லாக்களுடன் சண்டை நிறுத்தம்
சண்டிமல் சதம்: இலங்கை - 306/3
வீரர்களுடன் கலந்துரையாடல்
வங்கதேச டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
கான்பூரில் இன்று 2-ஆவது ஆட்டம் தொடக்கம்
மார்க்சிஸ்ட் தலைவர் எம்.எம்.லாரன்ஸ் உடலை ஏற்றுக்கொண்டது களமசேரி மருத்துவக் கல்லூரி
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா் எம்.எம்.லாரன்ஸின் உடலை தானம் செய்வது குறித்து எழுந்த சா்ச்சையைத் தொடா்ந்து, அவரது உடலை கலமசேரி மருத்துவக் கல்லூரி ஏற்க முடிவு செய்து, உடற்கூறியல் துறைக்கு உடலை மாற்றியது.
எதிர்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வி
கடந்த 10 ஆண்டுகளில் எதிா்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வியடைந்துவிட்டது என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
வேலைவாய்ப்பு உருவாக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்த மோடி
ஹரியாணா பிரசாரத்தில் ராகுல்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மீண்டும் எழாது
‘ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் புதைக்கப்பட்டு விட்டது, அது மீண்டும் எழப்போவதில்லை’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
அரசு மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய கட்டடங்களை தொடர் ஆய்வு செய்ய வேண்டும்
தமிழகத்தில் பொது மக்கள் பயன்பாட்டிலுள்ள மருத்துவமனை மற்றும் பிற முக்கிய கட்டடங்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா்.
குடும்ப வன்முறை சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்
‘குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள ‘குடும்ப வன்முறைச் சட்டம் 2005’, மதங்களைக் கடந்து அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும்
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.