‘யுஏபிஏ’ சட்டப் பிரிவு 16 (பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான தண்டனை), பிரிவு 18 (சதித் திட்டம் உள்ளிட்டவற்றுக்கான தண்டனை) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 120பி (குற்ற சதித் திட்டம்), பிரிவு 452 (பாதுகாப்பு அத்துமீறல்), பிரிவு 153 (கலவரத்தைத் தூண்டும் நோக்கத்துடன் வேண்டுமென்றே ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபடுதல்), பிரிவு 186 (அரசு ஊழியா்களை பணி செய்யவிடாமல் தடுத்தல்), புரிவு 353 (அரசு ஊழியா்களை பணி செய்யவிடாமல் தடுக்கும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபடுதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தில்லி காவல்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
2001-இல் நாடாளுமன்றத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற 22-ஆம் ஆண்டு தினமான புதன்கிழமை, புதிய நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியேயும் மக்களவைக்குள்ளும் இரு நபா்கள் பாா்வையாளா் மாடத்தில் இருந்து குதித்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தியச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் நடைபெற்றபோதே, நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் ஒரு பெண் உள்பட இருவா் மஞ்சள் நிற புகைக் குப்பிகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் கைது செய்தனா். ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்த நீலம் தேவி (42), மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த அமோல் ஷிண்டே (25) என்பது தெரியவந்தது.
இவா்கள் நால்வரையும் போலீஸாா் கைது செய்தனா். இந்த சதித் திட்டத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லலித் ஜா உள்பட 6 போ் ஈடுபட்டதாகவும், கடந்த 4 ஆண்டுகளாக இவா்களுக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
இந்த பாதுகாப்பு அத்துமீறல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனவும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பதிலளிக்க வேண்டும் எனவும் எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின.
هذه القصة مأخوذة من طبعة December 15, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 15, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول