வரலாறு காணாத மழை காரணமாக திரு நெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தொடங்கிய கனமழை இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் நீடித்தது. இதன் காரணமாக, 4 மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.
கடந்த 1992-இல் புயல் காரணமாக பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டது. அதன்பிறகு இப்போதுதான் மிகப்பெரிய வெள் ளத்தை திருநெல்வேலி மாவட்டம் சந்திக்கிறது.
தாமிரவருணியில் வெள்ளம்: திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகள் முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளன. அணைகளிலிருந்து தாமிரவருணி ஆற்றில் சுமார் 40,000 கனஅடி தண் ணீர் திறந்துவிடப்பட்டது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் தாமிரவருணி ஆற்றில் கலந்ததால், 50,000 கன அடி தண்ணீருக்கு மேல் தாமிரவருணியில் சென்றது. வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு காரணமாக ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது.
திருநெல்வேலி மாநகரில் குறுக்குத்துறை முருகன் கோயில் மூழ்கியது. திருநெல்வேலி சந்திப்பு
பேருந்து நிலையம், ரயில் நிலையம், காவல் நிலையம், ஆட்சியர் அலுவலகம், வண்ணார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்குள் தாமிரவருணி வெள்ளம் புகுந்தது.
கொக்கிரகுளம், வண்ணார் மணிமூர்த்தீஸ்வரம், மேகலிங்கபுரம், பேட்டை, சிந்துபூந்துறை, மீனாட்சிபுரம், திருநெல்வேலி நக ரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்தது. திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட் டிருந்த பேருந்துகள், கார்கள் மூழ்கின.
هذه القصة مأخوذة من طبعة December 19, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 19, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
சமூக நீதி இந்தியாவை உருவாக்க பாடுபட்டவர் சீதாராம் யெச்சூரி
முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
இலங்கை அதிபராகப் பதவியேற்றார் அநுர குமார திசாநாயக
இலங்கையின் புதிய அதிபராக ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அநுர குமாரதிசாநாயக திங்கள் கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
சாதனைப் பட்டியலில் இந்தியா
செஸ் ஒலிம் பியாட் போட்டி வரலாற்றில், ஒரே எடிஷனில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கம் வென்ற 3-ஆவது நாடாகியிருக் கிறது இந்தியா.
தலித் விரோத கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு
தலித் மக்களுக்கு எதிரான கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.
ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு வலியுறுத்தப்படும்: ராகுல் உறுதி
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை அளிக்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
வெற்றி பெறுமா தமிழக வெற்றிக் கழகம்?
அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எந்த அளவுக்கு பரிணமிக்கும் என்ற விவாதம் பரவலாகி உள்ளது.
பாரதியார் எனும் நித்தியசூரி !
மகாகவி பாரதி யாா்? நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருந்த தமிழனுக்குப் பாட்டுப் பாடி உயிா் கொடுத்தவா்; பண்டிதா்கள் மடியிலே கட்டி வைத்திருந்த தமிழைப் பாமரனும் உண்ணும்படி பந்தியிலே பரிமாறியவா்; கடந்த காலத்தின் தவம்; நிகழ்காலத்தின் வரம், நேற்றைய தமிழனின் ஒற்றையடிப் பாதை; இன்றைய மானிடரின் இராஜபாட்டை. பழமையின் எதிரி; புதுமையின் நீதிபதி மகாகவி பாரதியாா்.
தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஹெச்.பைலோரி கிருமியால் ஏற்படும் இரைப்பை புண்கள் கண்டறிய புதிய ஆய்வு
நோபல் விருதாளர் டாக்டர் பேரி ஜெ.மார்ஷல்
'தமிழகத்தில் 16 ஆண்டுகளில் 7,207 உறுப்புகள் தானம்'
தமிழகத்தில் கடந்த 16 ஆண்டுகளில் மூளைச் சாவு அடைந்த 1,998 பேரிடம் இருந்து 7,207 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு தகுதியானவா்களுக்கு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.