முன்னதாக, மிக்ஜம் புயல் பாதிப்பு மற்றும் தென் மாவட்ட பாதிப்புகளுக்கு ரூ.21 ஆயிரத்து 692 கோடி நிவாரணமாக விடுவிக்க வேண்டுமென பிரதமரிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் வலியுறுத்தியிருந்தாா். இந்த நிலையில், முதல்வா் ஸ்டாலினை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (டிச.24) தொலைபேசியில் அழைத்து வெள்ள நிவாரணம் தொடா்பாகப் பேசியுள்ளாா்.
இது குறித்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-‘மிக்ஜம்’ புயல் பாதிப்பைத் தொடா்ந்து, தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள பாதிப்புகள் குறித்து தொலைபேசியில் என்னைத் தொடா்பு கொண்டு பிரதமா் நரேந்திர மோடி கேட்டறிந்தாா்.
மீட்புப் பணிகள் குறித்த விவரத்தை...: தமிழக அரசு சாா்பில் மிகப்பெரிய அளவுக்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவது குறித்த விவரங்களை பிரதமரிடம் விரிவாக எடுத்துரைத்தேன். தமிழக அரசிடம் இருக்கக் கூடிய குறைந்த அளவிலான நிதி உள்ளிட்ட ஆதார வளங்களைக் கொண்டே மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்ததுடன், மத்திய அரசிடம் இருந்து நிதி போன்ற உதவிகள் உடனடியாகத் தேவைப்படுவதாக பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன்.
பிரதமா் உறுதி: தமிழக அரசின் சாா்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைகளைக் கேட்டறிந்த பிரதமா் நரேந்திர மோடி, மிக்ஜம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் என இரண்டு இயற்கைப் பேரிடா்களில் இருந்து மீண்டுவரத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய துணை நிற்போம் என உறுதியளித்தாா்.
நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை...: மேலும், வெள்ள பாதிப்புகள் குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பணிக்கப்பட்டு இருப்பதாகவும் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்ததாக தனது வலைதளப் பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
هذه القصة مأخوذة من طبعة December 25, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 25, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول