கடந்த 11 மாதங்களாக நடைபெற்று வரும் மோதலில் இஸ்ரேலுக்குள் இவ்வளவு தொலைவில் தாக்குதல் நடத்தப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தரையிலிருந்து தரை இலக்குகளைத் தாக்கும் அந்த பலிஸ்டிக் வகை ஏவுகணை இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்பால் இடைமறித்து அழிக்கப்பட்டது.
இது குறித்து ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
டெல் அவிவ் நகரிலுள்ள இஸ்ரேல் உளவு அமைப்பான மொஸாடின் தலைமையகத்தைக் குறிவைத்து புதன்கிழமை அதிகாலை ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு காதா் 1 ரக பலிஸ்டிக் ஏவுகணை பயன்படுத்தப்பட்டது.
லெபானில் ஹிஸ்புல்லா தளபதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கும் கடந்த வாரம் நடத்தப்பட்ட பேஜா் தாக்குதலுக்கும் மொஸாட் அமைப்புதான் காரணம். எனவே, அந்த அமைப்பின் தலைமையகம் குறிவைக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘லெபானில் இருந்து வீசப்பட்ட ஏவுகணை டெல் அவிவ் நகரில் இடைமறித்து அழிக்கப்பட்டது. அந்த நாட்டிலிருந்து ஓா் ஏவுகணை இஸ்ரேலின் மையப் பகுதி வரை வந்தது இதுவே முதல்முறை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொஸாட் தலைமையகத்தைக் குறிவைத்து ஏவுகணை வீசப்பட்டதாக ஹிஸ்புல்லாக்கள் கூறினாலும், அந்த ஏவுகணை பொதுமக்கள் வசிக்கும் பகுதியை நோக்கி சென்றுகொண்டிருந்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறியது. டெல் அவிவ் மட்டுமின்றி இஸ்ரேலின் பிற பகுதிகளிலும் ஹிஸ்புல்லாக்கள் சரமாரியாக புதன்கிழமை தாக்குதல் நடத்தினா்.
هذه القصة مأخوذة من طبعة September 26, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة September 26, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
ஐடி சாதனங்கள் இறக்குமதிக்கான உரிமம்: டிச. 31 வரை நீட்டிப்பு
மடிக்கணினிகள் மற்றும் பிற தகவல் தொழில்நுட்ப (ஐடி) சாதனங்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்குப் பிறகு, அரசின் இறக்குமதி மேலாண்மை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமங்களுக்கான காலாவதி தேதி வரும் டிசம்பர் மாதம் 31-ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல் அவிவ் நகரில் ஹிஸ்புல்லா ஏவுகணை வீச்சு
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் லெபனானின் ஹிஸ்புல்லா படையினா் புதன்கிழமை ஏவுகணை வீசினா்.
ஆஸி.யுடனான ஒருநாள் தொடர்: இங்கிலாந்துக்கு முதல் வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து ‘டக்வர்த் லீவிஸ்’ முறையில் 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
சிறு, நடுத்தர தொழில்கள் மீது திட்டமிட்ட ‘தாக்குதல்’
மத்திய அரசு மீது ராகுல் சாடல்
90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஆயுத ஏற்றுமதி
இந்தியாவில் இருந்து 90-க்கும் மேற்பட்ட நட்பு நாடுகளுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தொழில் துறை மூலம் 50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு
தொழில் துறை மூலம் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான இலக்கை எட்ட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
கைத்தறி நெசவாளர்கள்- வடிவமைப்பாளர்களுக்கு விருதுகள், ரொக்கப் பரிசுகள்
கைத்தறி நெசவாளர்கள், வடிவமைப்பாளர்களுக்கு விருதுகள், ரொக்கப் பரிசுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வழங்கினார்.
விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை?
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர் ஜூனா விவகாரம் குறித்து உயர்நிலைக் குழுவில் பேசி முடிவு செய்யப்படும் என்று கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சைபர் குற்றத்தில் பொதுமக்கள் இழக்கும் பணத்தை துரிதமாக மீட்க வேண்டும்
சைபர் குற்றத்தில் பொதுமக்கள் இழக்கும் பணத்தைத் துரிதமாக மீட்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னாள் முதல்வர் பி.டி.ராஜன் சிறப்பு மலர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
சென்னை மாகாண முன்னாள் முதல்வர் பி.டி. ராஜன் நினைவாக தயாரிக்கப்பட்ட எண்ம அடிப்படையிலான சிறப்பு மலரை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.