يحاول ذهب - حر
ராஜா வேடம்...விரட்டிய நாய்!
May 29, 2024
|Kanmani
சிவாஜி உசரத்துக்கு அந்த மைக் சரியாக இருந்தாலும் கூட, நம்ம தம்பி பாஸ்கருக்கு மைக்க அட்ஜஸ் பண்ணியே தீரணுங்கிற ஒரு பெரிய ஆர்வம் ஏற்பட்டுடுச்சு.

சிவாஜி இருக்கிற இடத்துக்குப் போய்ச் சேருகிற வரைக்கும் பாஸ்கருக்கு பல மைல் தூரம் நடக்கிற மாதிரி வேர்த்து வேர்த்து ஊத்திக்கிட்டு இருந்திச்சு!
தம்பி பாஸ்கர் வந்து மைக் அட்ஜஸ் பண்ணப் போறத தெரிஞ்சிக்கிட்ட சிவாஜி, "வேண்டாம் தம்பி! சரியா இருக்கு”ன்னு சொல்லி பாஸ்கரோட கையப்புடிச்சிட்டாரு. அப்போதிருந்து உடம்பில் 108 டிகிரியில் ஜூரம் அடிச்சுது. அதுக்கப்புறம் ஒரு வாரம் பாஸ்கருக்கு ரெஸ்ட். அன்னிக்கு சிவாஜிக்குப் போட்ட மால எல்லாத்தையும் தம்பி அமரு எடுத்துக்கிட்டு ஊரச் சுத்திக்கிட்டு பின்னால வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
அந்தக் கிராமத்துக்குப் பக்கத்தில 'கோம்பை'ன்னு ஒரு ஊரு இருக்கு. கிராமத்திலேருந்து படிக்கப் போறவங்க எல்லாமே ஆறாம் கிளாசுக்கு மேல படிக்கணும்னா அங்க இருக்கிற ஹைஸ்கூல்ல தான் படிக்கணும்.
காலையில 8.30 மணிக்கும், சாயங்காலம் 5.00 மணிக்கும் பாத்தா பண்ணைப்புரத்தில் இருந்து கோம்பைக்குப் போற ரோட்டில வெத வெதமா பல பொண்ணுங்களும் ஆம்பளப் பசங்களும் போயிக்கிட்டே இருப்பாங்க. அந்த இன்ஸ்பெக்டர் தம்பி மெட்ராசுக்கு போனதிலேருந்து நம்ப தம்பிகளுக்கு ஊரில பொழுதே போகல.
பாஸ்கரும் ராசாவும் சாயங்கால நேரத்தில் ஊருக்கு முன்னால் இருக்கிற பாலத்துல போயி உக்காருற வழக்கமிருந்திச்சு! அதுக்கு முன்னால அந்த இன்ஸ்பெக்டரும் இவங்களோட சேர்ந்துக்கிடறதுண்டு.
அந்த ஹைஸ்கூலில் படிக்கிற ஒரு பொண்ணுக்கும் ராசாவுக்கும் ஒரு இது! இதுன்னா தப்பா ஒண்ணும் இல்ல. அந்தப் பொண்ணு ஹைஸ்கூலு போகும் போதும் வரும் போதும் ரெண்டு பேரும் சும்மா பார்த்துக்குவாங்க. நாளுக்கு நாள் இவங்களோட பார்வ காதலா மாறிடுச்சு!
இந்த விஷயம் பாஸ்கருக்கும் இன்ஸ்பெக்டருக்கும் அப்பவே தெரியும். ஆனா, ராசாவும் அந்தப் பொண்ணும் நேருக்கு நேராக பார்த்து பேசிக்கிட்டதே கெடையாது. ராசாத் தம்பிக்கு அப்பவே பொண்ணுங்கன்னா ஒரு பயம் இருந்திச்சு. அந்த ஹைஸ்கூலில நடக்கிற விழா எதுவானாலும் -ஏன் அங்க நிகழ்ச்சி என்ன நடந்தாலும் நம்ம தம்பிகளோட ஆர்மோனியம், தபேலா சத்தம் தான் கேட்கும். கூடவே அமரோட பாட்டும் இருக்கும்!
هذه القصة من طبعة May 29, 2024 من Kanmani.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Kanmani

Kanmani
இயக்குனர்களிடம் சரண்டர்.ஆகிடுவேன்!
இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் வித்யா பாலன், தமிழில் நேர்கொண்ட பார்வையில் நடித்தார்.
2 mins
August 20, 2025

Kanmani
களைக்கொல்லி: நச்சாகிறதா நிலத்தடி நீர்!.
விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு. ஆனால் இன்று பல்வேறு பிரச்னைகளால் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். பயிர்களை சாகுபடி செய்து மகசூல் எடுக்கும் வரை போராட்டம்தான்.
1 mins
August 20, 2025

Kanmani
மலையை ஆக்கிரமிக்கும் காங்கிரீட்காடுகள்... சரிக்கும் இயற்கை!
மனிதர்களின் நாசவேலை வகைவகையாய் தொடர்வதால் இயற்கையின் சீற்றம் பலவிதமாக வெளிப்படுகிறது.
2 mins
August 20, 2025

Kanmani
என்னவாகும் தமிழ்நாடு?
2000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் ஆறே ஆறு சமுதாய மக்களே முக்கியமானவர்கள்.
4 mins
August 20, 2025

Kanmani
SQR தெரியுமா?
படிச்சது நல்லா நினைவில் இருக்கணும்னா என்ன செய்யணும்? உங்க கேள்வியிலேயே பாதி பதில் ஒளிஞ்சிருக்கு. 'படிச்சாலே' போதும், அது தன்னால நினைவில் இருக்கும்.
4 mins
August 20, 2025

Kanmani
புரிஞ்சிக்க முடியாத கேரக்டரில் நடிக்கணும்!
முழுக்க முழுக்க பாலிவுட்டிலேயே செட்டில் ஆகி கவர்ச்சி சோலோ டான்ஸ், கன்டன்ட் உள்ள வெப் சீரிஸ் என பிஸியாக இருக்கிறார் தமன்னா. லவ் பிரேக் ஆன பிறகு இன்னும் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் தமன்னா, கிளாமர் புகைப்படங்களை ட்வீட்டி ரசிகர்களை கிக்கேற்றி வருகிறார். அவருடன் ஒரு அழகான சிட்சாட்.
2 mins
August 20, 2025

Kanmani
இருமனம் இணைந்திடும்...
அந்தத் திருமண மண்டபம் சட்டென நிசப்தமானது. சற்று முன்பு வரை மேளதாளத்தோடும் உறவினர்களின் கலகலப்பான உபசரிப்போடும் தடபுடல் விருந்தோடும்பரபரப்பாய் இருந்த மண்டபம் சில நிமிட கலவரத்தில் கப்சிப்பானது.
4 mins
August 20, 2025

Kanmani
சிவன் கோவிலுக்கு சண்டை போடும் தாய்லாந்து - கம்போடியா?
ரஷ்யா-உக்ரைன், இஸ்ரேல்-பாலஸ்தீனம், இந்தியா-பாகிஸ்தான் போர்களைத் தொடர்ந்து தற்போது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருப்பது தாய்லாந்து-கம்போடியா இடையிலான மோதல்தான்.
4 mins
August 20, 2025

Kanmani
பாலியல் குற்றங்கள் பெருகுவது ஏன்?
பா.ஜ.க. ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில், காவல்துறை சார்பில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி மூலம்... \"பெண்களே நள்ளிரவு விருந்துகளில் கலந்து கொள்ளாதீர்கள்.
3 mins
August 20, 2025

Kanmani
தக்காளியிலிருந்து உருவானதா உருளைக்கிழங்கு?
இந்தியாவில், 19 ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட உருளைக்கிழங்கு, சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது, மேலும் இது கார்போ ஹைட்ரேட்டுகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் ஆதாரமாக உள்ளது.
1 mins
August 20, 2025
Translate
Change font size