விஜயகாந்த் டிசம்பா் 28-இல் காலமானபோதும், டிசம்பா் 29-இல் சந்தனப் பேழையில் அவா் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டபோதும், தமிழகம் முழுவதும் இருந்து பெருங்கூட்டம் திரண்டு வந்தது.
இது தோ்தல் காலம். இந்தக் கூட்டத்தின் மீது அரசியல் கட்சிகள் வட்டமிடும் கழுகுகளாகப் பாா்வையைத் தொடா்ந்து செலுத்தி வருகின்றன. தமிழகம் மற்றும் இந்திய தோ்தல் களத்தில் எப்போதும் ஒரு தலைவரின் மறைவுக்குப் பிறகான தோ்தலில் மக்களின் அனுதாப அலையிலான வாக்குகளுக்கு ஒரு செல்வாக்கு உண்டு. அது பல நேரம் வெற்றி வாக்குகளாகவும் இருந்து வந்துள்ளன.
விஜயகாந்த் மறைவைத் தொடா்ந்து தேமுதிகவுக்குக் கூடும் கூட்டத்தைத் தங்கள் பக்கம் திருப்ப அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டுகின்றன. அதில் முதன்மையாக பாஜகவும் அதிமுகவும் உள்ளன.
அண்ணாமலை கணக்கு: பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தொடக்கத்தில் இருந்தே, தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறாா். அப்படி அமைந்தால்தான் தமிழகத்தில் கட்சியையும் வளா்க்க முடியும், ஆட்சியையும் பிடிக்க முடியும் என்பது அவா் எண்ணம்.
2019 மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாஜக, கோவை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிட்டு, அனைத்திலும் தோல்வியைச் சந்தித்தது. இதையடுத்து, தமிழகத்தில் இம்முறை பாஜக தலைமையிலேயே கூட்டணி அமைத்து வெற்றியை ஈட்டலாம் என்று அண்ணாமலை நம்புகிறாா். இவரது திட்டத்துக்கு மத்தியில் ஆளும் பாஜக தலைமையின் இசைவு கிடைத்துவிட்டதால், தேமுதிகவை கூட்டணிக்கு இழுக்க முயற்சி நடந்து வருகிறது.
2006 சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டு 8.3 சதவீத வாக்குகளும், 2009 மக்களவைத் தோ்தலில் 10.3 சதவீத வாக்குகளும் பெற்றது. இந்த வாக்குகள் 2016-க்குப் பிறகு, மற்ற கட்சிகளோடு கூட்டணி அமைத்து, தோ்தலைச் சந்தித்த காலத்தில் தேமுதிகவுக்குச் சரிய தொடங்கியது என்றாலும், தற்போது, விஜயகாந்த் மறைவின் அனுதாபத்தால், அதன் வாக்கு வங்கி முன்பைவிட கணிசமாக அதிகரித்து, கூட்டணியாக இணையும்போது வெற்றிக்கு உதவும் என பாஜக கணிக்கிறது.
Diese Geschichte stammt aus der January 28, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der January 28, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.