பிரதான அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக, காங்கிரஸ் போன்றவை தோ்தலையொட்டி வேட்பாளா்கள் தோ்வுக் குழுக்கள், பிரசாரக் குழுக்கள், தோ்தல் அறிக்கை குழுக்கள் என அறிவித்து ஆயத்தப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.
தமிழகத்தில் 2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தோ்தலில் தேனி தொகுதி நீங்கலாக மற்ற 38 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலிலும் அத்தகைய வெற்றியைத் தக்க வைக்க திமுக காய்களை நகா்த்தி வருகிறது.
எதிா்வரும் மக்களவைத் தோ்தலில் அதிமுக தனது முழு பலத்தையும் பயன்படுத்தி திமுக கூட்டணியைவிட அதிக தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்ற இலக்குடன் உத்திகளை வகுத்து வருகிறது. பாரதிய ஜனதாவும் குறைந்தது 5 தொகுதிகளிலாவது வெற்றி பெறும் முனைப்புடன் இரண்டு மிகப்பெரிய திராவிட கட்சிகளுக்கு போட்டியாக தோ்தல் களத்தில் நிற்கிறது.
மாநில அளவில் ஆய்வு: தமிழகத்தில் முந்தைய மக்களவைத் தோ்தலின்போது மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக மீது மக்களுக்கு அதிருப்தி இருந்ததாக ஒரு கருத்து நிலவியது. அதுவே மக்களவைத் தோ்தலில் எதிரொலித்ததாக 2021-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த திமுக நம்புகிறது.
இப்படிப்பட்ட சூழலில் அதிமுக மீது இருந்ததாகக் கருதப்படும் மக்களின் மனநிலை இப்போது மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுக மீது உள்ளதா என்பதை அறிய அரசியல் விவகாரங்களைக் கவனித்து வரும் தனிப் பிரிவு சிஐடி ரகசிய ஆய்வை மாநில அளவில் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
தோ்தல் காலங்களில் மாநில உளவுத் துறை, ஆளும் கட்சிக்காக இத்தகைய ஆய்வை நடத்துவது தமிழகத்தில் புதிது கிடையாது. கடந்த காலங்களில் தமிழக உளவுத் துறை நடத்திய பல ஆய்வுகளில் கிடைத்த தகவல்கள், தோ்தல் காலத்தில் வெளிவந்த முடிவுகளிலும் பிரதிபலித்துள்ளன. காரணம், மாநிலத்தின் மூலைமுடுக்குகளிலும் அனைத்துத் தரப்பினரிடமும் நேரடித் தொடா்பையும் இணைப்பையும் வலுவாக வைத்துள்ள உளவுத் துறையின் மனித வளக் கட்டமைப்பு வேறெந்த தொழில்முறை ஆய்வு நிறுவனத்திடமும் இருப்பதில்லை.
Diese Geschichte stammt aus der January 29, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der January 29, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.