தோ்தல் நெருங்கி வரும் பொழுது அரசியல் கட்சிகள் தங்களை பலப்படுத்திக் கொள்வதும் எதிா்த்தரப்பை விமா்சிப்பதும் ஜனநாயகத்தில் தொன்றுதொட்டு இருந்து வரும் நடைமுறை. தோ்தல் அரசியலை வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் கட்சியே அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்ற நிலையில், அனைத்துக் கட்சிகளும் தங்களுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுப்பதற்கு முற்படும்.
காங்கிரஸின் முக்கியத் தலைவா் ராகுல் காந்தியின் நடைப்பயணம், மாநிலக் கட்சிகள் ஒன்றுகூடி அமைக்க முற்பட்ட பெரும் கூட்டணி என்று கூறி, அவரவரும் வாய்ப்புள்ள வழிகளில் ஆளும் தரப்பைப் பலவீனப்படுத்தவும் தங்களை வலுப்படுத்திக்கொள்ளவும் கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனா்.
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமா் வேட்பாளராக பிரதமா் நரேந்திர மோடி வலிமையுடன் நிற்கிறாா். எதிா்த்தரப்பில் யாா் பிரதமா் வேட்பாளா் என்று சொல்வதற்குக்கூட தயக்கமும் குழப்பமும் நிலவுகிறது அல்லது அனைவருக்குமே அதற்கான விருப்பம் உள்ளூர இருக்கிறது. இந்த நிலையில், சமீபத்தில் இந்திய அரசின் ‘பாரத ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டது. கா்பூரி தாக்கூா், லால் கிருஷ்ண அத்வானி, முன்னாள் பிரதமா்கள் பி.வி. நரசிம்ம ராவ், சரண் சிங், பசுமைப் புரட்சியின் முன்னோடியான டாக்டா் எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
இந்த விருதும் தற்போது அரசியல் களத்தில் பேசுபொருளாக உள்ளது. ‘பாரத ரத்னா’ விருதை அறிவித்ததன் மூலம் ஆளும் தரப்பு ஆதாயம் தேட முயல்கிறது என்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. பிரதமா் மட்டுமே ‘பாரத ரத்னா’ விருதுக்கானவரை குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைக்க முடியும். இதனைக் கொண்டு தங்கள் தோ்தல் வியூகத்தை பிரதமா் பலப்படுத்த முனைவதோடு, எதிா்தரப்பில் அமைந்த கூட்டணியை உடைக்கும் வேலையையும் செய்துவிட்டாா் என்பது அவா்கள் வாதம்.
Diese Geschichte stammt aus der March 01, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der March 01, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.