இத்தாக்குதல் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் என்று அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'காஸாவின் தற்போதைய நிலவரம் மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. இதுபோன்ற சம்பவங்களில் பொதுமக்கள் உயிரிழப்பு ஏற்படுவதும், நிவாரணப் பொருள்கள் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதியுறுவதும் அதிகபட்ச கவலையை ஏற்படுத்துபவை ஆகும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது: காஸா சிட்டியில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப் பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சம்பவம் காஸா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையை மேலும் சிக்கலாக்கும் என்றார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேத்யு மில்லர் கூறுகையில், 'இந்தச் சம்பவம் தொடர்பான கூடுதல் விவரங்களை உடனடியாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இது தொடர்பான விசாரணையை அமெரிக்க அரசு உன்னிப்பாக கவனிக்கும். துப்பாக் கிச்சூட்டின் பின்னணியில் உள்ள உண்மைகளை முழுமையாக வெளிக்கொண்டு வர இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்கும்' என்றார் அவர்.
பிரான்ஸ்: காஸா சிட்டியில் நடத்தப்பட்ட வியாழக்கிழமை துப்பாக்கிச்சூடுதொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.
Diese Geschichte stammt aus der March 02, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der March 02, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.