எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
அதிமுக சார்பில் திருச்சியை அடுத்துள்ள வண்ணாங்கோவில் பகுதியில் மக்களவைத் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகம், புதுவையில் போட்டியிடும் அதிமுக கூட்டணியின் 40 வேட்பாளர்கள், விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் உள்ளிட்ட 41 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்துவைத்து எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது:
தமிழகத்தில் எந்தவொரு தேர்தல் என்றாலும் அதிமுக - திமுக இடையே தான் போட்டி என்பதை நாடே அறியும். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், கடந்த இரு தினங்களாக தேர்தல் பிரசார கூட்டத்தில் பாஜகவையும், என்னையும் விமர்சனம் செய்தே பேசுகிறார். அவரிடம் பேசுவதற்கு வேறு விஷயம் இல்லை. பொம்மை முதல்வராக செயல்படுகிறார்.
திமுக குடும்பத்திடம் இருந்து தமிழகத்தைக் காப்பதற்காகவே கட்சி தொடங்கியவர் எம்ஜிஆர். அவர் கட்டிக் காத்து தந்த கட்சியையும், தமிழகத்தையும் பாதுகாப்பாக வைத்திருந்தவர் ஜெயலலிதா. அவர்களது வழியில் தமிழகத்தைக் காக்கவும், தமிழர்களின் உரிமையை மீட்கவும் அதிமுக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. ஆனால், தங்களது ஆட்சிக் காலம் முழுவதும் தமிழகத்துக்கு துரோகம் செய்வது, குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே ஆட்சி, கட்சி, பதவியில் இருக்க வேண்டும் என விரும்புகிறதுதிமுக.
7.5 சதவீத இடஒதுக்கீடு: அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில்தான் 11 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்டன. 6 சட்டக் கல்லூரிகள், வேளாண்மைக் கல்லூரி, கால்நடை ஆராய்ச்சிக் கல்லூரி, பல்தொழில்நுட்பக் கல்லூரி எனப் பல்வேறு கல்லூரிகளைக் கொண்டுவந்து கல்வியில் தமிழகம் இந்தியாவிலேயே முதலிடம் என்ற நிலையை உருவாக்கினோம்.
Diese Geschichte stammt aus der March 25, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der March 25, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.