
எந்தவித வாசிப்பு பின்னணியும் இல்லாத, தற்போதைய குடும்பச் சூழலில் இருந்து கொண்டு, எழுதும் ஆர்வம் எப்படி ஏற்பட்டது?
எனக்கு கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் போதே திருமணம் முடிந்துவிட்டது. அதற்கு முன்புவரை புத்தகங்கள் என்பது என்னுடைய வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இருந்தது. உணவைவிட புத்தகங்களைத் தான் நான் அதிகமாக நேசித்தேன். ஆனால், திருமணம் முடிந்த பிறகு, என்னுடைய மாமனார் புத்தகங்கள் படிக்கக் கூடாது என்று கூறிவிட்டார்.
தொழில் பின்னணி கொண்ட குடும்பத்திற்கு கல்வித்தகுதி அவ்வளவு முக்கியமானது இல்லை என்ற மனப்போக்கு அவரிடம் இருந்தது. அதனால், வீட்டு வேலை செய்வதும் குழந்தைகளையும், கணவரையும் பார்த்துக் கொள்வதும் தான் ஒரு குடும்ப பெண்ணிற்கான அடையாளமாக அவர்கள் கருதினார்கள்.
ஏறத்தாழ 20 ஆண்டுகள் புத்தகங்கள் என்பதையே வாசிக்காமல்தான் நான் இருந்தேன். எனக்கு கிடைக்காதது என் மகள்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக, அவர்களை கவிதை போட்டி, கட்டுரை போட்டி என்று பங்குபெற வைத்து அவர்கள் பரிசு வாங்குவதை பார்த்து மகிழ்ச்சி அடைவேன்.
இந்த சூழலில் என்னுடைய தம்பி, இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் நீ இப்படி இருப்பது தவறு என்று கூறி, எனக்கு நவீன செல்லிடபேசி வாங்கி கொடுத்து, அதில் முகநூல் கணக்கையும் தொடங்கிக் கொடுத்தார். அதில் ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டு முதலில் சிறிய அளவில் கவிதைகள் எழுதத் தொடங்கினேன்.
அப்போது எழுத்தாளர் கலாப்ரியா அவர்களின் பார்வையில் என்னுடைய கவிதைகள் பட, ஒருமுறை நான் கவிதையில் எழுத்து பிழை விட்டிருந்ததை அவர் திருத்தினார்.
அதன் தொடர்ச்சியாக நான் மதிக்கக் கூடிய பல்வேறு எழுத்தாளுமைகள் என் பதிவுகளை வாசித்து கருத்து கூற, என் எழுத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்தது. இன்னும் பொறுப்பாக எழுத வேண்டும் என்ற கூடுதல் அக்கறை ஏற்பட்டது. சமூக வலைதளங்களை பற்றி எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும், நான் முகநூலால் தான் வளர்ந்தேன்.
Diese Geschichte stammt aus der Thanga Mangai January 2025-Ausgabe von Thangamangai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der Thanga Mangai January 2025-Ausgabe von Thangamangai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden

பட்டை குறியீடு (பார்கோடு)
பட்டைக் குறிமுறை, பட்டை குறியீடு, பார் குறியீடு எல்லாமே பார்கோடினை குறிக்கும். பட்டைக்குறி என்பது எந்திரம், படிக்கக்கூடிய வடிவத்தில் பொருளை குறிக்கும் முறையாகும்.

தவறுகளும், மாற்றங்களும்..
லவித பாடங்கள், அனுபவங்கள், அழுகை, புன்னகை, காதல், நட்பு, உறவு, துரோகம், 'உணர்வு, பிறப்பு, இறப்பு, இழப்பு, புதுப்புது மனிதர்கள், மாற்றங்கள், இயற்கை சீற்றங்கள் என்று பெறும் கற்றலும், கற்பித்தலுமாய் கடந்தது 2024ஆம் ஆண்டு. இவை ஏதும் மாறுவதுமில்லை, நம் யாரையும் மாற்றுவதுமில்லை. மாற்றம் ஒன்றே மாறாதது என்ற ஒற்றை சொல்லை தவிர..

பெண் எழுத்தாளராக இருப்பதில் கூடுதல் சவால்கள்!
தூத்துக்குடி மாவட்டத்தின் வீரபாண்டியபட்டினம் என்ற கடலோர கிராமத்தில் பிறந்து வளர்ந்த பிரிம்யா க்ராஸ்வின் அவர்கள், ஒரு ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக பணியில் உள்ளார்.

மனித உரிமைகளும், பெண்களின் முன்னேற்றமும்...!
வ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 10ஆம் நாள் உலகமெங்கும் மனித உரிமை விழிப்புணர்வு நாளாக 1948ஆம் ஆண்டு முதல் அய்க்கிய நாடுகளின் சபை மூலமாக கொண்டாடப்படுகிறது.

தமிழர் திருநாளும், பொங்கல் விழாவும்...!
ந்தியாவில், மாநில வாரியாக பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், தமிழர் திருநாள் விழாவான பொங்கலுக்கென்று தனிச் சிறப்புண்டு. உலகத்தின் இயக்கத்திற்கு காரணமான உணவை உற்பத்தி செய்யும், உழவுத் தொழிலுக்கு மரியாதை செலுத்தும் ஒப்பற்ற நிகழ்வுதான் பொங்கல் விழா.

எழுத்துலகை அலங்கரிக்கும் பெண் படைப்பாளிகள்!
வாசிப்பிற்கான மிகப்பெரிய அடையாளமாக விளங்கும், 48ஆவது சென்னை புத்தக கண்காட்சி நடந்து முடிந்திருக்கிறது.

கலைநயம், தரத்தில் சிறந்த காஞ்சிபுரம் பட்டு சேலைகள்...!
மனிதன் பரிணாம வளர்ச்சியடைந்து, தன்னை முழுதாக உணர்ந்த பிறகு, அவனுக்கு உணவு, உடை, இருப்பிடம் மூன்றும் அடிப்படைத் தேவைகளானது.

திறமையுள்ள எழுத்து நிச்சயம் அங்கீகாரம் பெறும்!
எழுத்தாளர் றின்னோஸா அவர்கள் டென்மார்க்கில் உள்ள ஒரு பன்னாட்டு தனியார் வங்கியில் உயர் அதிகாரியாக பொறுப்பில் உள்ளார். சிறுவயதில் இருந்தே தமிழின் மீதும், எழுத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பல்வேறு இணையதள பத்திரிகைகளிலும், முன்னணி அச்சு இதழ்களிலும் இவருடைய படைப்புகள் வெளியாகி உள்ளன.

உண்மை இல்லாத எந்த ஒன்றும் நிலை பெறாது!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியபட்டினம் என்ற கடலோர கிராமம்தான், ஆசிரியையும், எழுத்தாளருமான ரம்யா அருண்ராயன் அவர்களின் சொந்த ஊராகும். தற்போது, கோவை மாவட்டத்தின் அரசுப்பள்ளி ஒன்றில் மேல்நிலை இயற்பியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.