
சீரோடிகிரி பதிப்பக வெளியீடாக இவருடைய ‘கழி ஓதம்' என்ற முதல் சிறுகதை தொகுப்பு வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு 'செருந்தி' என்ற கவிதை தொகுப்பு வெளிவந்து வாசகர் வட்டத்தில் பரவலான கவனத்தை பெற்றுள்ளது. அண்மையில், 'கானல்' அமீரகம் நடத்திய சிறுகதைப் போட்டியில், இவருடைய ‘வவ்வாக்குட்டி' என்ற சிறுகதை இரண்டாம் பரிசினை வென்றது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாக்கம், தனித்தன்மை, பெண் அரசியல் பற்றி மகிழ்ச்சியோடு ரம்யா அருண்ராயன் பதிவு செய்கிறார்....
நான் நெய்தல் நிலத்தைச் சேர்ந்தவள் என்பதால் முதன் முதலாக என்னுடைய புத்தகம் வெளியான போது, நம்முடைய நெய்தல் நிலம் சார்ந்த எதாவது ஒரு கருப்பொருளை எடுத்துக் கொண்டு பெயர் வைக்க வேண்டும் என நினைத்தேன். அவ்வாறு நெய்தல் நிலம் சார்ந்த மலர்கள் என்னவெல்லாம் உள்ளன என்று தேடிய போது, இந்த 'செருந்தி' பெயர் எனக்கு மிகப் பிடித்திருந்தது. சாதாரணமாக மலர்கள் என்றாலே, மென்மையான பெயர் கொண்டவையாக இருக்கும். ஆனால், இந்த பெயர் 'செரும் தீ' என்ற ஒரு அர்த்தத்தையும் தருவதால், இதை என்னுடைய புத்தகத்தின் பெயராக தேர்ந்தெடுத்தேன்.
அடுத்ததாக, மழை நீர் ஓடையாக வந்து, கடலில் சேரும் இடத்தை 'கழி முகம்' என்று கூறுவார்கள். சில நேரங்களில், கடல் நீர் அந்த ஓடைகளுக்குள் புகுவதைத்தான் 'கழி ஓதம்' என்று குறிப்பிடுவார்கள். அதுபோன்று நமக்குள் அலையடித்துக் கொண்டிருக்கும் சிந்தனைகளை, மற்றவர்களுக்கு கடத்தும் ஒரு கருவியாக நான் எழுத்தை பார்க்கிறேன்.
‘கழி ஓதம்' என்ற பெயரை தேர்ந்தெடுத்தேன். இரண்டுமே நெய்தல் நிலம் தொடர்பான பெயர்களாகவே அமைந்துவிட்டது கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது.
Diese Geschichte stammt aus der Thanga Mangai January 2025-Ausgabe von Thangamangai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der Thanga Mangai January 2025-Ausgabe von Thangamangai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden

பட்டை குறியீடு (பார்கோடு)
பட்டைக் குறிமுறை, பட்டை குறியீடு, பார் குறியீடு எல்லாமே பார்கோடினை குறிக்கும். பட்டைக்குறி என்பது எந்திரம், படிக்கக்கூடிய வடிவத்தில் பொருளை குறிக்கும் முறையாகும்.

தவறுகளும், மாற்றங்களும்..
லவித பாடங்கள், அனுபவங்கள், அழுகை, புன்னகை, காதல், நட்பு, உறவு, துரோகம், 'உணர்வு, பிறப்பு, இறப்பு, இழப்பு, புதுப்புது மனிதர்கள், மாற்றங்கள், இயற்கை சீற்றங்கள் என்று பெறும் கற்றலும், கற்பித்தலுமாய் கடந்தது 2024ஆம் ஆண்டு. இவை ஏதும் மாறுவதுமில்லை, நம் யாரையும் மாற்றுவதுமில்லை. மாற்றம் ஒன்றே மாறாதது என்ற ஒற்றை சொல்லை தவிர..

எங்களுக்கும் சமூகப் பார்வை இருக்கிறது!
முத்துப்பேட்டையை சொந்த ஊராகக் கொண்ட தேவிலிங்கம் அவர்கள், தன் அப்பாவின் அரசாங்கப் பணி காரணமாக பல்வேறு ஊர்களில் வாழ்ந்துள்ளார். தற்போது திருமணத்திற்கு பிறகு வேதாரண்யத்தை வசிப்பிடமாக கொண்டுள்ள இவரின், மூன்றாவது புத்தகமான 'நெருப்பு ஓடு' நாவல், வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக இவரின் 'நெய்தல் நறுவீ என்ற கவிதை தொகுப்பும், 'கிளிச்சிறை’ என்ற சிறுகதை தொகுப்பும் வெளியாகி வாசகர் மத்தியில் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. சீரோடிகிரி பதிப்பகம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற இந்த நாவலை, அந்த பதிப்பகமே வெளியிட்டுள்ளது.

பெண் எழுத்தாளராக இருப்பதில் கூடுதல் சவால்கள்!
தூத்துக்குடி மாவட்டத்தின் வீரபாண்டியபட்டினம் என்ற கடலோர கிராமத்தில் பிறந்து வளர்ந்த பிரிம்யா க்ராஸ்வின் அவர்கள், ஒரு ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக பணியில் உள்ளார்.

மனித உரிமைகளும், பெண்களின் முன்னேற்றமும்...!
வ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 10ஆம் நாள் உலகமெங்கும் மனித உரிமை விழிப்புணர்வு நாளாக 1948ஆம் ஆண்டு முதல் அய்க்கிய நாடுகளின் சபை மூலமாக கொண்டாடப்படுகிறது.

தமிழர் திருநாளும், பொங்கல் விழாவும்...!
ந்தியாவில், மாநில வாரியாக பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், தமிழர் திருநாள் விழாவான பொங்கலுக்கென்று தனிச் சிறப்புண்டு. உலகத்தின் இயக்கத்திற்கு காரணமான உணவை உற்பத்தி செய்யும், உழவுத் தொழிலுக்கு மரியாதை செலுத்தும் ஒப்பற்ற நிகழ்வுதான் பொங்கல் விழா.

எழுத்துலகை அலங்கரிக்கும் பெண் படைப்பாளிகள்!
வாசிப்பிற்கான மிகப்பெரிய அடையாளமாக விளங்கும், 48ஆவது சென்னை புத்தக கண்காட்சி நடந்து முடிந்திருக்கிறது.

கலைநயம், தரத்தில் சிறந்த காஞ்சிபுரம் பட்டு சேலைகள்...!
மனிதன் பரிணாம வளர்ச்சியடைந்து, தன்னை முழுதாக உணர்ந்த பிறகு, அவனுக்கு உணவு, உடை, இருப்பிடம் மூன்றும் அடிப்படைத் தேவைகளானது.

திறமையுள்ள எழுத்து நிச்சயம் அங்கீகாரம் பெறும்!
எழுத்தாளர் றின்னோஸா அவர்கள் டென்மார்க்கில் உள்ள ஒரு பன்னாட்டு தனியார் வங்கியில் உயர் அதிகாரியாக பொறுப்பில் உள்ளார். சிறுவயதில் இருந்தே தமிழின் மீதும், எழுத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பல்வேறு இணையதள பத்திரிகைகளிலும், முன்னணி அச்சு இதழ்களிலும் இவருடைய படைப்புகள் வெளியாகி உள்ளன.