Try GOLD - Free

காதல் கனவே...!

Kanmani

|

March 12, 2025

மார்கழி மாத மாலைப் பொழுதில்... நகர் முழுவதுமே பனிப் பொழிவால் மூடப்பட்டிருந்தது.

- வெ.இராம்குமார்

காதல் கனவே...!

எதிரே போவோர் வருவோர் அனைவருமே பனி மனிதனாகவும், நிறமற்றவர்களாகவும் காட்சியளித்துக் கொண்டு இருந்தார்கள்.

வீதியில் நிறுத்தப்பட்ட கார்களோ, பனிப் பொழிவால், சிறு பனிக் குன்றுகளைப் போல காட்சியளித்துக் கொண்டிருந்தது.

சூரியனோ, தனது பணியை மாலை வேளையில் விரைவாகவே முடித்துக் கொண்டு ஓய்வெடுக்க சென்றுவிட்டது. பனிப் பொழிவால், தெரு விளக்குகள் இருள்வதற்கு முன்பாகவே ஒளிர ஆரம்பித்திருந்தது.

சென்னை மாநகரில், சற்று ஒதுக்குப்புறமாகவும்,கிராமிய மணம் மாறாமல் இருக்கும் இடம்தான் கதிர்வேடு .அங்கு ஆள் ஆரவாரமில்லாத இடத்தில் இருக்கிறது துர்கைதேவி ஆலயம்.

புதுப்பிக்கப்படாத, வண்ணப் பூச்சுகள் பார்க்காத ஆலயம்,மூர்த்தி சிறிதெனினும், கீர்த்தி பெரிது என்பார்களே.. அதுபோல, உருவத்திலும், வளர்ச்சியிலும் பார்த்தால், சிறிய ஆலயம் போன்று தோன்றினாலும், உள்ளே வீற்றிருக்கும் அம்மனின் சக்தியும்,அவள் மீது பக்தர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் மிகப் பெரியது.

குளிர்காலம் என்பதால், கோவிலுக்குள் கூட்டம் அதிகமில்லை, ஆங்காங்கே ஒரு சில பக்த,பக்தைகள், உடலில் கம்பளி ஆடையை போர்த்தி, உடல் குளிர்ச்சியை தணிக்கும் வகையில், கைகள் இரண்டையும், அழுத்தமாக தேய்த்து, கன்னத்தில் வைப்பதும், கை அக்குளுக்குள் வைத்து, உடலை உஷ்ணமாக்கும் விதமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த கூட்டத்தின் நடுவே தனியாக தெரிந்தாள் அனிதா.

வந்தவர்களில் அவள் மட்டுமே அரிதாரம் பூசிக் கொள்ளாத, கம்பளி ஆடையணியாத பக்தை. குழப்பத்தில், கண்களைமூடி தியானித்திருந்தாள். அவளது உடலைப்போல மனமும் சோர்வாகயிருந்தது. சோர்வானாலும், அவளது இருபது இள வயதானது, முகத்தில் தனிப் பொலிவோடு காணப்பட்டது.

அர்ச்சகரோ, தனது பணியில் கவனம் செலுத்தும் விதமாக, அம்மனை அலங்காரம் செய்து, மேலும் அழகூ ட்டும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். கையில் ஆயுதமின்றி, பக்தர்களுக்கு ஆசி வழங்கும் விதமாக அபய முத்திரையை கைகளிலும், சாந்த சொரூபத்தை விழிகளிலும், மலர்ச்சியை முகத்திலும், தைரியத்தையும், நம்பிக்கையையும் தனது உடலிலும், தேக்கி வைத்திருந்த, அம்மனோ, துன்பத்திலும், மனக் குழப்பத்திலும் வரும் பக்தர்களின் குறை தீர்த்து, அரவணைத்து அருள்பாலிக்கக் காத்துக் கொண்டிருந்தாள்.

MORE STORIES FROM Kanmani

Kanmani

Kanmani

தூக்கி நிறுத்திய நம்பிக்கை!

தென்னிந்திய படங்களில் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்துப் புகழ் பெற்ற நடிகை நவ்யா நாயர், மீண்டும் 'ஒருத்தி' மலையாள படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். திரிஷ்யம் 2 கன்னட ரீமேக் படத்திலும் நடித்தார். தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அதிகளவில் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளாத நவ்யா, தன் திரையுலக பயணம் குறித்து பகிர்ந்து கொள்கிறார்.

time to read

2 mins

November 05, 2025

Kanmani

Kanmani

ஓய்வு பெற்ற பிறகும் வேலைக்கு செல்ல விரும்பும் முதியவர்கள்!

முதுமை என கருதிவிட்டால் அவர்களை உபயோகம் இல்லாதவர்கள் என கருதும் காலம் இது.

time to read

1 mins

November 05, 2025

Kanmani

Kanmani

கமர்சியல் சக்ஸஸ் ரொம்ப முக்கியம்!

பிகில், 96, வெற்றிவேல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை வர்ஷா பொல்லம்மா.

time to read

2 mins

November 05, 2025

Kanmani

Kanmani

விசித்திரமான 'மறதி' கிராமங்கள்!

அது ஒரு அழகிய சிறிய கிராமம்.

time to read

2 mins

November 05, 2025

Kanmani

Kanmani

இன்னொருத்தி தேவை!

காலை நேரம். ஏழு மணி. \"அம்மா.... போயிட்டு வரேன்....\" மாடியிலிருந்து துள்ளிக் கொண்டு வந்த சரயூ கத்திக் கொண்டே இறங்கி வந்தாள்.

time to read

53 mins

November 05, 2025

Kanmani

Kanmani

மக்களை விட் 6 மடங்கு அதிகம்.. நகரங்களில் பெருகி வரும் எலிகள்!

நகரங்களில் பெருதி வரும் எலிகள்!

time to read

1 mins

November 05, 2025

Kanmani

Kanmani

எப்படி இருந்த அ.தி.மு.க. இப்படி ஆகிடுச்சே!

குடும்பங்களில் குழந்தைகளுக்கு பூச்சாண்டி காட்டி பயமுறுத்துவது போல், அரசியலிலும் சில கட்சியினரை பீதியூட்டி கூட்டு சேர்க்க முயல்வதுண்டு.

time to read

2 mins

November 05, 2025

Kanmani

Kanmani

வைரம் - தங்கத் துகள் சோப்பூ

மன்னர் காலத்தில் குளியல் பொடியானது பலவிதமான இயற்கை மூலிகைளைக் கொண்டு தயாரிக்கப்பட்டது.

time to read

1 min

November 05, 2025

Kanmani

Kanmani

குறட்டைக்கு நன்றி!

தூக்கத் திற்கான அளவுகோல் குறட்டை அல்ல! ஒருசிலருக்கு அது எச்சரிக்கை மணி! குறட்டை ஏன் ஏற்படுகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளலாம்.

time to read

3 mins

November 05, 2025

Kanmani

Kanmani

தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் ஸ்மார்ட் செயலி சரண்யா!.

இன்றைய டிஜிட்டல் இந்தியாவில்... எங்கு திரும்பினாலும் அடிதான் என்ற நிலையில் பரிதாபகரமான நிலையில் இருப்பவர்கள் விவசாயிகள்தான்.

time to read

3 mins

November 05, 2025

Hindi(हिंदी)
English
Malayalam(മലയാളം)
Spanish(español)
Turkish(Turk)
Tamil(தமிழ்)
Bengali(বাংলা)
Gujarati(ગુજરાતી)
Kannada(ಕನ್ನಡ)
Telugu(తెలుగు)
Marathi(मराठी)
Odia(ଓଡ଼ିଆ)
Punjabi(ਪੰਜਾਬੀ)
Spanish(español)
Afrikaans
French(français)
Portuguese(português)
Chinese - Simplified(中文)
Russian(русский)
Italian(italiano)
German(Deutsch)
Japanese(日本人)

Translate

Share

-
+

Change font size