காதல் கனவே...!

எதிரே போவோர் வருவோர் அனைவருமே பனி மனிதனாகவும், நிறமற்றவர்களாகவும் காட்சியளித்துக் கொண்டு இருந்தார்கள்.
வீதியில் நிறுத்தப்பட்ட கார்களோ, பனிப் பொழிவால், சிறு பனிக் குன்றுகளைப் போல காட்சியளித்துக் கொண்டிருந்தது.
சூரியனோ, தனது பணியை மாலை வேளையில் விரைவாகவே முடித்துக் கொண்டு ஓய்வெடுக்க சென்றுவிட்டது. பனிப் பொழிவால், தெரு விளக்குகள் இருள்வதற்கு முன்பாகவே ஒளிர ஆரம்பித்திருந்தது.
சென்னை மாநகரில், சற்று ஒதுக்குப்புறமாகவும்,கிராமிய மணம் மாறாமல் இருக்கும் இடம்தான் கதிர்வேடு .அங்கு ஆள் ஆரவாரமில்லாத இடத்தில் இருக்கிறது துர்கைதேவி ஆலயம்.
புதுப்பிக்கப்படாத, வண்ணப் பூச்சுகள் பார்க்காத ஆலயம்,மூர்த்தி சிறிதெனினும், கீர்த்தி பெரிது என்பார்களே.. அதுபோல, உருவத்திலும், வளர்ச்சியிலும் பார்த்தால், சிறிய ஆலயம் போன்று தோன்றினாலும், உள்ளே வீற்றிருக்கும் அம்மனின் சக்தியும்,அவள் மீது பக்தர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் மிகப் பெரியது.
குளிர்காலம் என்பதால், கோவிலுக்குள் கூட்டம் அதிகமில்லை, ஆங்காங்கே ஒரு சில பக்த,பக்தைகள், உடலில் கம்பளி ஆடையை போர்த்தி, உடல் குளிர்ச்சியை தணிக்கும் வகையில், கைகள் இரண்டையும், அழுத்தமாக தேய்த்து, கன்னத்தில் வைப்பதும், கை அக்குளுக்குள் வைத்து, உடலை உஷ்ணமாக்கும் விதமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த கூட்டத்தின் நடுவே தனியாக தெரிந்தாள் அனிதா.
வந்தவர்களில் அவள் மட்டுமே அரிதாரம் பூசிக் கொள்ளாத, கம்பளி ஆடையணியாத பக்தை. குழப்பத்தில், கண்களைமூடி தியானித்திருந்தாள். அவளது உடலைப்போல மனமும் சோர்வாகயிருந்தது. சோர்வானாலும், அவளது இருபது இள வயதானது, முகத்தில் தனிப் பொலிவோடு காணப்பட்டது.
அர்ச்சகரோ, தனது பணியில் கவனம் செலுத்தும் விதமாக, அம்மனை அலங்காரம் செய்து, மேலும் அழகூ ட்டும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். கையில் ஆயுதமின்றி, பக்தர்களுக்கு ஆசி வழங்கும் விதமாக அபய முத்திரையை கைகளிலும், சாந்த சொரூபத்தை விழிகளிலும், மலர்ச்சியை முகத்திலும், தைரியத்தையும், நம்பிக்கையையும் தனது உடலிலும், தேக்கி வைத்திருந்த, அம்மனோ, துன்பத்திலும், மனக் குழப்பத்திலும் வரும் பக்தர்களின் குறை தீர்த்து, அரவணைத்து அருள்பாலிக்கக் காத்துக் கொண்டிருந்தாள்.
Bu hikaye Kanmani dergisinin March 12, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kanmani dergisinin March 12, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap

நடிகைகளின் கர்ப்பகால போட்டோசூட்?
வீட்டுல ஏதாவது விசேஷமா... தலைக்கு குளிச்சு எவ்வளவு நாள் ஆச்சு? என இலை மறை காயாக பெண்களின் கர்ப்பம் பற்றி தெரிந்து கொண்ட காலம் எல்லாம் மலையேறி விட்டது.

அமெரிக்கா மிரட்டல் பணிந்ததா இந்தியா ?
அண்மையில் அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு மோடி விஜயம் செய்தபோது, அவர் அமர வசதியாக நாற்காலியையே நகர்த்திக்கொடுத்தார் அந்நாட்டு அதிபர் டிரம்ப். அப்படி, வாஷிங்டனில் வலயவந்த, நம் மோடியை பார்த்து யாராவது அமெரிக்கவுக்கு அடிபணிபவர் என்று சொல்ல முடியுமா?

இது சோஷியல் மீடியா ஸ்டார் காலம்!
‘லைகர்' படத்தின் மூலம் தென்னக சினிமாவில் நுழைந்த அனன்யா பாண்டே, பாலிவுட்டில் இப்போது முன்னணி நடிகை.

அதிக நேர வேலை... பறிபோகும் தூக்கத்தால் பாதிக்கும் மனநலம்!
இன்றுள்ள பரபரப்பான உலகில் நேரம், காலம் என்பதை மறந்து வேலை வேலை என ஓட வேண்டிய நிலைமை. இதனால் பலரும் தங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.

நான் ரொம்ப லக்கி!
அழகிப் பட்டம் வென்ற பல் மருத்துவரான மீனாட்சி சவுத்ரி நீச்சல், பேட்மிண்டன் வீராங்கனையாக பன் முகத்திறன் கொண்டவர்.

தங்க கடத்தல் ...
தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் எகிறிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில்... 'அயன்' பட சூர்யா போல அலட்டிக் கொள்ளாமல் தங்க கடத்தலில் ஈடுபட்ட நடிகை ரன்யா ராவ், இப்போது 'நான் ஒரு அப்பாவி, என்னை திட்டம் போட்டு மாட்டி விட்டுட்டாங்க' என்று நீதிமன்றத்தில் அழுது புலம்பிக் கொண்டு இருக்கிறார்.

மணலில் அமிலத்தன்மை...என்ன செய்யும்?
மண்ணிலிருந்து உற்பத்தியாகும் தாவரங்கள் மற்றும் ஜீவராசிகள் போன்றவற்றை சார்ந்தே மனிதன் வாழ்கிறான்.

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் சிறுதானிய உணவுகள்...!
இம்மாதம் 21-ஆம் தேதி பனிப்பாறைகள் தினமாகும்.

கலர் கலர் உள்ளாடைகள்...கவனம்!
உள்ளாடை அழகு என்பது ஒருபுறம் இருக்க அது ஆபத்து என்பது மறுபுறம் இருக்கிறது. நாம் சௌகரியத்துக்காக அணியும் உள்ளாடைகள், உடற்பயிற்சி பனியன்களால் பல்வேறு சிரமங்கள் உருவாகலாம் என நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

லவ் டுடே
சுப்புலட்சுமி பெண்கள் கல்லூரி பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது.. பட்டாம்பூச்சிகளாய் இளம்பெண்கள் கூட்டம் கூட்டமாய் திரிந்தனர்.