அம்பிகையைத் தரிசித்த ராஜலட்சுமி அம்மாள், கண்களில் நீர்வீழ்ச்சியாக வழிந்தது! புடவை தலைப்பால், தன் கண்களைத் துடைத்துக் கொண்டவர், “அம்மா அகிலாண்டேஸ்வரி... இந்த உலகத்துக்கு தாயான உன்னோட காலடியில சரணடைந்து இருக்கிறதாலதான் மனநிம்மதியோடு நான் இருக்கேன்! சகல ஜீவராசிகளையும் எப்பவும் காப்பாத்திக்கிட்டு இருக்கணும்” என்று மனம் உருக வேண்டிக்கொண்டார். வெளியே வந்தோம். குளிர்ந்த காற்று வீசியது. அப்போது இரவு மணி 9.30 இருக்கும்!
"நேரம் ஆயிடுச்சே... நீங்க ஒண்ணும் சாப்பிடலையே" என்று கேட்டேன்.
"மத்தியானமே ரெண்டு பூவன் வாழைப்பழம் வாங்கி வெச்சுட்டேன். ராத்திரி சாப்பாடு அவ்வளவுதான்! அது சரி... நீ என்ன பண்ணப்போறே?" என்றார் அவர்.
"திருச்சியில போய் சாப்பிடுவேன்!” என்றேன்.
"அப்படியானால் நீ சீக்கிரம் புறப்படு. நாளைக்கு சாயந்திரம் வந்துடு. ஏன்னா... இனிமேதான் என் வாழ்க்கை சரித்திரத்தில் சுவாரஸ்யமெல்லாம் வரப்போகுது!" என்று சிரித்தார் ராஜலட்சுமி அம்மாள். நானும் சிரித்தபடியே புறப்பட்டேன். மறுநாள் மாலை 5 மணிக்கே அன்னை அகிலாண்டேஸ்வரியின் கோபுர வாசலில் நின்றேன். அந்தத் திண்ணையில், பளிச் செந்நெற்றியில் திருநீறு துலங்க அமர்ந்திருந்தார் ராஜலட்சுமி அம்மாள். நானும் திண்ணைக்குச் சென்று அவரை வணங்கி விட்டு, அருகில் அமர்ந்தேன். புன்னகையுடன் என்னை நோக்கிய ராஜலட்சுமி அம்மாள், "நேத்திக்கு விட்ட இடத்துலேர்ந்து மீதியைச் சொல்றேன்... கேளு!" என்று கூற ஆரம்பித்தார்:
"மகளுக்குக் ஒருவழியா கல்யாணம் முடிஞ்சுதுன்னு சொன்னேன் இல்லையா... அடுத்து, மூத்தவன் சங்கர நாராயணனுக்கும் நல்ல வரனா தேட ஆரம்பிச்சோம். கோயம்புத்தூர்ல இருந்து ஒரு ஜாதகம் வந்தது. நல்லா பொருந்தி இருந்தது. பேரு ஜானகி. ஆனா, பொண்ணோட படிப்பு என்னவோ எட்டாம் வகுப்புதான். அதனால், நானும் என் கணவரும் கொஞ்சம் யோசிச்சோம். ஆனால், எங்க புள்ளையோ துளிகூட யோசிக்கலே! அந்தப் பெண் பார்க்க லட்சணமா இருந்ததால், 'இவளைத்தான் கல்யாணம் பண்ணிப் பேனுட்டான். அப்புறமென்ன... ஒரு நல்ல நாள்ல பாக்கு, வெத்தலை மாத்தியாச்சு! முகூர்த்த தேதியையும் நிச்சயப்படுத்திட்டோம். ஒரு தைமாசம் திருமணம் விமரிசையா நடந்து முடிஞ்சுது.
Esta historia es de la edición July 01, 2024 de Aanmigam Palan.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición July 01, 2024 de Aanmigam Palan.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
இரவில் சாப்பிடக் கூடாதவை
\"இரவு நேரம்! புலவர் ஒரு வர் அயலூரில் இருக்கும் தன் நண்பர் ஒருவரைக் கண்டு வரச் சென்றிருந்தார். புலவரைப் பார்த்த நண்பர் மிகுந்த மகிழ்வுடன், “வாருங்கள்! வாருங்கள்! முதலில் உண்டுவிட்டு பிறகு பேசலாம்” என்றார். புலவரோ, “நெடுந்தூரம் நடந்து வந்த களைப்பு தீர்ச்சற்று ஓய்வெடுக்கிறேன். அதன்பிறகு உண்ணலாம்” என்றார். இருவருமாகச் சற்றுநேரம் பேசிக் கொண்டிருந்தார்.
திருவண்ணாமலையில் ஆனித் திருமஞ்சனம்!
அதி அந்தம் இல்லாத அருள் பெரும் சோதியாய் விளங்கும் பரம் ஆம் பொருள் அருவன் ஆயினும் அன்பர்க்கு உருவாய் வருவன் என்ற மாமறைக்கிணங்க அருவுருவத் திருமேனியான இலிங்க வடிவில் தன்னை வெளிப் படுத்திக் கொண்ட சிறப்புப் பெற்ற திருத்தலம் திருவண்ணாமலை யாகும்.
விளாம்பழ நிவேதனம்
பாரத தேசத்தின் தொன்மையான மரவகைகளில் ஒன்று விளாமரமாகும். இது படர்ந்து செழிந்து வளர்வது.
சிந்திப்பதையெல்லாம் தரும் சுதர்சனர்
பாயர்வுக்கு துதிந்திருமுகங்கள் தபாவதாரத்தை கடலில் பள்ளிகொண்டருளும் பரந்தாமன், பத்து அவதாரங்கள் எடுத்தபோதும் உடன் முழுமையாகக் கண்ட பெருமைக்குரிய சுதர்சனமே, பக்தர்தம் வாழ்வில் வரும் தடைகளை விரட்ட பகவானால் பிரயோகிக்கப்படுகிறது.
ஆன்மா பற்றிய உண்மையை உணர முடிவதில்லை!
“ஆகவே அர்ஜுனா, ஆன்மாவைப் பற்றியதான சந்தேகம் தெளிந்தாயல்லவா? இனிமேலும் ஏதேனும் சந்தேகம் இருக்கு மானால், அதை ஞானம் என்ற வாளால் வெட்டி எறி.
சுகமான வாழ்விற்கு சுஞ்சனகட்டே கோதண்டராமர்
கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில், கிருஷ்ணராஜா நகர் (கே. ஆர். நகர்) அருகில் சுஞ்சனகட்டே கிராமம் உள்ளது.
கன்னித்தமிழ் போற்றும் கண்ணனின் நடனம்!
கண்ணன் குழல் ஊதிய வரலாற்றை நாம் கேட்டு இருக்கிறோம். நச்சு அரவமான காளிங்கன் மீது களித்து திருநடனம் புரிந்ததை பற்றி கேட்டிருக்கிறோம.
அகிலத்தின் தாயான அகிலாண்டேஸ்வரி
அன்று சர்வாலங்கார பூஷிதையாக அகலமான கரை போட்ட பச்சைநிற பட்டுப்புடவையில் ஜொலித்தாள் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி.
மகாகவிக்கு ஒரு காவியக்கோயில்
ஒரு ஆலயத்தில் மகாகவி பாரதியாருக்கு விக்ரகப் செய்து, அவரை பதின்மூன்றாவது ஆழ்வாராக உயர்த்திப் போற்றி வழிபட்டு வருகிறார்கள். பாரத தேசத்தில் எங்கும் செய்யப்படாத மாறுதலான ஓர் ஆன்மிகம் சேவையை சென்னை அடையாறு மத்ய கைலாஷ் ஆலயத்தில் செய்திருக்கிறார்கள்.
மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே!
ஆனித் திருமஞ்சனம் ஜூலை 11 - 12, 2024