Dinamani Chennai - December 10, 2024

Dinamani Chennai - December 10, 2024

Go Unlimited with Magzter GOLD
Read {{magName}} along with {{magCount}}+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Chennai
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
December 10, 2024
ரிசர்வ் வங்கி புதிய ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) 26-ஆவது ஆளுநராக வருவாய் துறைச் செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா (56) திங்கள்கிழமை நியமிக்கப்பட்டார்.

1 min
டங்ஸ்டன் சுரங்க உரிமரத்து தீர்மானம்
மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அளித்த உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2 mins
அடிப்படை உரிமைகளை நிலைநாட்டி சுயமரியாதையைப் பாதுகாப்போம்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
1 min
நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு: சென்னையில் விமானம் தரையிறக்கம்
சென்னையிலிருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு புறப்பட்ட விமானம், நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்டது.
1 min
நெருங்கிய உறவில் திருமணம்: குழந்தைக்கு செவித்திறன் பாதிக்க வாய்ப்பு
நெருங்கிய உறவில் திருமணம் புரிவோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு, காது கேளாமை பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக மெட்ராஸ் இஎன்டி ஆராய்ச்சி மையத்தின் மேலாண் இயக்குநரும், காது - மூக்கு - தொண்டை சிறப்பு சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் மோகன் காமேஸ்வரன் தெரிவித்தார்.

1 min
கார்பன் உமிழ்வு இல்லாத போக்குவரத்து: சென்னை ஐஐடி முன்முயற்சி
இந்தியாவில் 2050-ஆம் ஆண்டில் 100 சதவீதம் கார்பன் உமிழ்வு இல்லாத சரக்குப் போக்குவரத்து என்ற இலக்கை எட்டுவதற்கான மிக முக்கிய முன்முயற்சியை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது.
1 min
இளம் திறமையாளர்களை கூட்டு முயற்சிகளில் ஈடுபடுத்த திட்டம்: ரஷிய துணைத் தூதர்
உலக அளவில் பல்வேறு கல்லூரிகளுடன் இணைந்து இளம் திறமையாளர்களைக் கூட்டு ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாக, ரஷிய துணைத் தூதர் வலேரி கோட்சேவ் தெரிவித்துள்ளார்.
1 min
சென்னையில் மழை நீரை சேமித்து நிலத்தடி நீரை உயர்த்த நடவடிக்கை
சென்னையில் மழை நீரை சேமித்து நிலத்தடி நீரை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min
போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றுக் கொடுத்து மோசடி: 6 பேர் கைது
போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றுக் கொடுத்து மோசடி செய்ததாக 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
ஃபென்ஜால் புயல்: சான்றிதழ்களை மீண்டும் பெற விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் மீண்டும் அவற்றைப் பெறுவதற்கான அறிவுறுத்தல்களை தேர்வுத்துறை வழங்கியுள்ளது.
1 min
ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
ஊத்துக்கோட்டை அருகே ஓடும் அரசுப் பேருந்தில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி விழுந்த பெண் பயணி உயிரிழந்தார்.
1 min
‘சங்கர் ஐஏஎஸ் அகாதெமி’யில் கட்டணமில்லா மாதிரி நேர்முகத் தேர்வுக்கான பயிற்சி
சென்னையில் செயல்பட்டுவரும் சங்கர் ஐஏஎஸ் அகாதெமியில் கட்டணமில்லா மாதிரி நேர்முகத் தேர்வு நடத்தப்படவுள்ளது.
1 min
புகைப்பிடிப்பு தடை சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்
பொது இடங்களில் புகைபிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

1 min
சென்னை துறைமுகத்திலிருந்து அரிசி ஏற்றுமதி 15 ஆண்டுகளுக்குப் பிறகு தொடக்கம்
சென்னை துறைமுகத்திலிருந்து, 15 ஆண்டுகளுக்குப் பிறகு கப்பல்கள் மூலம் அரிசி ஏற்றுமதி மீண்டும் தொடங்கியது.

1 min
15 முன்னாள் எம்எல்ஏ-க்கள், முக்கியப் பிரமுகர்கள் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்
தொழிலதிபர் ரத்தன் டாடா உள்ளிட்ட மறைந்த முக்கியப் பிரமுகர்கள், 15 முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கு தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
1 min
ஜாமீன் வழங்கிய ஏழு நாள்களுக்குள் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம்
ஜாமீன் வழங்கிய ஏழு நாள்களில், கைதிகள் சிறை களிலிருந்து விடுதலையாவதை உறுதி செய்ய வேண்டும் என சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிட மத்திய அரசு பரிசீலனை
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிட மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

1 min
என்ஐஏ நடவடிக்கையில் தலையிட உயர்நீதிமன்றம் மறுப்பு
மாணவியின் கல்விக் கட்டணம் முடக்கம்
1 min
டயாலிசிஸ் சேவைகளை தனியார் பங்களிப்புடன் மேம்படுத்த நிபுணர் குழு ஆலோசனை
டயாலிசிஸ் சேவைகளை மேம்படுத்துவதற்கான செயல் திட்டங்களை ஆலோசிப்பதற்காக, சிறப்பு நிபுணர் குழுவை அரசு அமைத்துள்ளது.
1 min
கனிம ஏலம்: மத்திய அரசு மசோதாவை நாடாளுமன்றத்தில் ஆதரித்தது அதிமுக
முதல்வர் குற்றச்சாட்டு; எடப்பாடி பழனிசாமி மறுப்பு

1 min
‘பிஎம்-ஸ்ரீ திட்டத்தில் திருத்தமின்றி தமிழக அரசு கையொப்பமிட தொடர் அழுத்தம்’
பிஎம்.ஸ்ரீ திட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் திருத்தங்களின்றி தமிழக அரசு கையொப்பமிட மத்திய அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக மக்களவையில் நீலகிரி தொகுதி திமுக உறுப்பினர் ஆ.ராசா எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி திங்கள்கிழமை எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

1 min
‘உச்சநீதிமன்றமே தீர்ப்புகளை மொழிபெயர்ப்பதால் மத்திய அரசு தனியாக நிதி ஒதுக்கவில்லை’
நீதிமன்ற தீர்ப்புகளை மொழிபெயர்க்கும் பணிகளை உச்சநீதி மன்றமே மேற்கொண்டுள்ளதால், தனியாக அப்பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஏதும் ஒதுக்கவில்லை என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கிரிராஜனின் கேள்விக்கு மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

1 min
இன்று டெல்டா, நாளை சென்னைக்கு கனமழை வாய்ப்பு
வலுவடைந்தது புயல்சின்னம்

1 min
ஆசிரியப் பணியின் புனிதம் போற்றுவோம்!
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே அரசுப் பள்ளி ஒன்றில் 3-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்ததன் பேரில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், உடன் பணியாற்றும் ஆசிரியர் என இருவரும் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
2 mins
எல்லோரும் மாறுவோம்!
நாம் பிறக்கும்போது வெறுங்கையுடன் பிறக்கிறோம். இந்த உலகை விட்டு நீங்கும் போதும் எதையும் எடுத்துச் செல்வதில்லை. கோடிகளில் புரண்டாலும் எதுவும் உடன் வராது. ஆகவே, வாழ்கின்ற நாள் வரை மகிழ்வாய், நிறைவாய் வாழ்ந்து விட்டுப் போகலாமே!

2 mins
ஒரே நாளில் 10 திருத்த மசோதாக்கள்
உணவு நிறுவன பணியாளர்களின் பணி நிபந்தனையில் திருத்தம் உள்பட பேரவையில் ஒரே நாளில் 10 திருத்த மசோதாக்கள் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டன.
1 min
52 கோயில்களில் பழந்தமிழ் ஓலைச் சுவடிகள்-பட்டயங்கள் கண்டெடுப்பு
பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு

1 min
டங்ஸ்டன் சுரங்கம்; விரைவில் நல்ல செய்தி வரும்-பாஜக
டங்ஸ்டன் சுரங்க அனுமதி தொடர்பாக பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், விரைவில் மக்களுக்கு நல்ல செய்தி வரும் எனத் தெரிவித்தார்.
1 min
புதிய பணிகளுக்கு ரூ.3,531 கோடி: துணை மதிப்பீடுகள் தாக்கல்
புதிய பணிகளைச் செயல்படுத்தத் தேவைப்படும் ரூ.3,531 கோடிக்கு சட்டப் பேரவையின் ஒப்புதலைப் பெறுவதற்கான துணை மதிப்பீடுகளை நிதி மற்றும் சுற்றுச்சூழல் - கால நிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

1 min
டங்ஸ்டன் சுரங்கம் வருமானால் முதல்வர் பொறுப்பில் இருக்க மாட்டேன்: மு.க.ஸ்டாலின்
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் கடும் விவாதம்

3 mins
கட்டண கலை நிகழ்ச்சிகளுக்கு 10% கேளிக்கை வரி: சட்டத் திருத்த மசோதா தாக்கல்
கட்டணத்துடன் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளுக்கு 10 சதவீதம் கேளிக்கை வரி விதிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
1 min
2 ஆண்டுகளில் 100 தடுப்பணைகள்: அமைச்சர் துரைமுருகன் தகவல்
கடந்த இரு ஆண்டுகளில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 100 தடுப்பணைகளை கட்டும் பணி நடைபெற்று வருவதாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

1 min
அதானி, சோரஸ் விவகாரங்கள்: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
அதானி மீதான லஞ்ச புகார், காங்கிரஸை ஜார்ஜ் சோரஸுடன் தொடர்புபடுத்திய விவகாரங்களை எழுப்பி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற இரு அவைகளும் திங்கள்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

2 mins
இந்திய கடற்படையில் 'ஐஎன்எஸ் துஷில்'
ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளுடன் கூடிய போர்க்கப்பலான 'ஐஎன்எஸ் துஷில்' இந்திய கடற்படையில் திங்கள்கிழமை இணைக்கப்பட்டது.

1 min
நாடாளுமன்றத்தில் அரசியல் சாசன விவாதம்: பிரதமர் மோடி பங்கேற்று பதிலளிக்க வாய்ப்பு
இந்திய அரசமைப்பு சட்டத்தை நாடு ஏற்றுக்கொண்டதின் 75-ஆம் ஆண்டு விழாவையொட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறப்பு விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பதிலளிப்பார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min
வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை: வெளியுறவுச் செயலர்கள் சந்திப்பில் இந்தியா கவலை
வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்தியா மற்றும் வங்கதேச வெளியுறவுச் செயலர்கள் திங்கள்கிழமை சந்தித்தனர்.

1 min
வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை: வெளியுறவுச் செயலர்கள் சந்திப்பில் இந்தியா கவலை
வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்தியா மற்றும் வங்கதேச வெளியுறவுச் செயலர்கள் திங்கள்கிழமை சந்தித்தனர். தொடர்ந்து, வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸையும் மிஸ்ரி சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்தச் சந்திப்பின்போது, அந்நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக நிகழும் வன்முறை, அவர்களின் பாதுகாப்பு குறித்து இந்தியா தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டது.

1 min
மாநிலங்களவை இடைத்தேர்தல் பிஜேடி முன்னாள் எம்.பி. பாஜக சார்பில் மனு
ஒடிசா மாநிலத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்துக்கான இடைத்தேர்தலில் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) முன்னாள் எம்.பி. சுஜித் குமார் பாஜக சார்பில் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
1 min
வங்கதேச தலைவர்களுக்கு மம்தா கண்டனம்
மேற்கு வங்கத்துக்கு உரிமை கோருவதா?

1 min
மணிப்பூரில் சேதமடைந்த சொத்து விவரங்களை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
மணிப்பூரில் வன்முறைச் சம்பவங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட மற்றும் எரிக்கப்பட்ட சொத்துகளின் விவரங்களை சீலிடப்பட்ட உறையில் வைத்து சமர்ப்பிக்குமாறு அந்த மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
மகாராஷ்டிரம்: நம்பிக்கை வாக்கெடுப்பில் ஃபட்னவீஸ் அரசு வெற்றி
மகாராஷ்டிர பேரவையில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் தலைமையிலான மகா யுதி கூட்டணி வெற்றிபெற்றது.

1 min
வங்கதேச தலைவர்களுக்கு மம்தா கண்டனம் மேற்கு வங்கத்துக்கு உரிமை கோருவதா?
மேற்கு வங்கம் தங்களுக்குச் சொந்தமானது என்று வங்கதேச அரசியல்வாதிகளில் ஒரு பிரிவினர் உரிமை கோரியுள்ளதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 min
அடிலெய்ட் டெஸ்ட்டில் மோதல் போக்கு சிராஜுக்கு அபராதம்; ஹெட்டுக்கு எச்சரிக்கை
இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய 2-ஆவது டெஸ்ட்டின்போது பரஸ்பரம் மோதல் போக்கில் ஈடுபட்டதாக, இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு ஆட்ட ஊதியத்தில் 20 சதவீதத்தை ஐசிசி அபராதமாக விதித்தது.

1 min
பெண்களின் வளர்ச்சிக்கு எதிரான தடைகள் உடைக்கப்படும்
எல்ஐசி பீமா-சகி திட்ட தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேச்சு

1 min
அபுதாபி கிராண்ட் ப்ரீ: லாண்டோ நோரிஸ் வெற்றி
எஃப்1 கார் பந்தயத்தின் நடப்பு சீசனில், கடைசி மற்றும் 24-ஆவது ரேஸான அபுதாபி கிராண்ட் ப்ரீயில் பிரிட்டன் வீரரும், மெக்லாரென் டிரைவரான லாண்டோ நோரிஸ் வெற்றி பெற்றார்.

1 min
FIDE உலக சாம்பியன்ஷிப் 12-ஆவது சுற்றில் வென்றார் லிரென்
உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் 12-ஆவது சுற்றில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரென், சேலஞ்சரான இந்தியாவின் டி.குகேஷை திங்கள்கிழமை வென்றார்.

1 min
இலங்கை டெஸ்ட் தொடர்: தென்னாப்பிரிக்கா கைப்பற்றியது
இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா 109 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் அந்த அணி 2-0 என முழுமையாகத் தொடரைக் கைப்பற்றியது.

1 min
அல்-அஸாதுக்கு அடைக்கலம்: உறுதி செய்தது ரஷியா
கிளர்ச்சியாளர்களால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட சிரியா அதிபர் பஷார் அல்-அஸாதுக்கு தங்கள் நாடு அடைக்கலம் அளித்துள்ளதை ரஷியா உறுதிப்படுத்தியது.

1 min
எல் சால்வடாரில் நிலநடுக்கம்
மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

1 min
தென் கொரிய அதிபர் வெளிநாடு செல்லத் தடை
தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் வெளிநாடுகளுக்குச் செல்ல அந்த நாட்டு நீதித்துறை தடை விதித்துள்ளது.

1 min
ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் திங்கள்கிழமை தர்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனர்.
1 min
டிச. 27-இல் சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

1 min
திருவண்ணாமலையில் ஸ்ரீசந்திரசேகரர், 63 நாயன்மார்கள் வீதியுலா
திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழாவின் 6-ஆவது நாளான திங்கள்கிழமை காலை வெள்ளி யானை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரர் மற்றும் 63 நாயன்மார்கள் வீதியுலா விமரிசையாக நடைபெற்றது.

1 min
மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோட்டில் நாளை பாரதி விழா
மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோடு சம்பத் நகர் கொங்கு கலையரங்கில் பாரதி விழா புதன்கிழமை (டிச. 11) நடைபெறவுள்ளது.
1 min
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only