CATEGORIES
Categories

இதழ்களுக்கு எதிர்காலம் உண்டா?
பத்திரிகைகள் வழக்கமாக எழுதும் அரை உண்மைகளை விட சுவாரஸ்யமான வேறு சில அரை உண்மைகளும் உண்டு

கட்டை வரி
தொப்பையா ஆசாரிக்குக் குழி வெட்டுவதற்கு ஆள் தேடிய போது ஒருவரும் கிடைக்கவில்லை. குழி வெட்டுபவனைத் தேடி அழைத்துக்கொண்டுவர இரண்டு பேர் சைக்கிளில் சென்றிருந்தனர். அவரது படுக்கையில் மலமும் சிறுநீரும் திராவகத் தண்ணீர் சிந்தி நஞ்சிருப்பது போன்ற நிறத்தில் கிடந்தது. முகஞ்சுளிக்காமல் அவர்கள் படுக்கையைச் சுருட்டியெடுத்துப் போட்டார்கள். சென்றயால், "தலைகானி இருக்கட்டும். தேரிலே வைச்சுக் கட்டுவோம். அப்பத்தான் தலை கோண மாணலாகம் இருக்கும்'' என்று மூலையில் தலையணையை வைத்தான். அவர் படுத்திருந்த படுக்கைகளைத் தெருவில் கொண்டு வந்து போட்டார்கள்.

கதை கதையாய் காரணங்கள்
சின்னான் (4ஆம் வகுப்பு, எஃப் பிரிவு) மயங்கி விழுந்தபோது "அவனைப் புடிங்கடா.. புடிங்கடா'' என்று யாரோ சொல்வது அவன் காதுகளில் சரியாகவே விழுந்தது.

தொல்குடி
கைலாசம் பண்ணையார் செயலோடு இருந்த காலத்திலேயே தனது மகனுக்கும் மகளுக்கும் என இரண்டு வீடுகள் தனித்தனியாக கட்டினார். பொதுவாக மேலத்தெருவை முன்னிருத்தி கிழக்குப் பார்த்த வாசல். ஆனால் சுற்றுக்கட்டுச்சுவருக்கு உள்ளே இரண்டு வீடுகளும் எதிரெதிர் பார்த்துக் கொள்வதைப் போல, தெற்குப் பார்த்து ஒரு வீட்டுக்கு வாசல், வடக்குப் பார்த்து இன்னொரு வீட்டுக்கு வாசல். பொதுவான, கல்வரிகள் பாவிய நடுமுற்றம். நீள அகலம் கோல்களில் சொன்னால் உங்களுக்கு அர்த்தமாகாது.

பண்டிகை நாள்
வளசரவாக்கத்திலிருந்து பாலவாக்கம் செல்லும் வழியெங்கும் சாலைகள் துடைத்தாற்போல வெறிச்சோடி கிடந்தன. சுந்தரத்தின் வீட்டுக்கு செல்லும் போது இருபது நிமிடங்களில் புயல் போல பைக்கை ஓட்டிச்சென்றிருந்தான். அங்கிருந்து திரும்பும்போதுதான் ஏதேதோ குழப்பங்களுடன் வண்டியை மெதுவாக ஓட்டி வந்துக் கொண்டிருந்தான்.

சாமந்தி
முனுசாமி அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் நின்றிருந்தார்.

முகமற்றவள்
வீதியில் நுழைந்த போது சின்னதொரு பதட்டம் இயல்பாகவே மாலதியின் உடல் முழுக்க ஓடியது. வண்டியின் வேகத்தைக் குறைத் தவளுக்கு வீட்டிற்குத் திரும்பும் கடைசி திருப்பத்தில் இரண்டு மின் விளக்குகள் எரியாமல் இருண்டு கிடந்ததைப் பார்த்ததும் பதட்டம் முன்னைவிடவும் அதிகமானது.

மூன்றாவது நதி
கைப்பேசியில் மணியொலித்தது. சாரதாவின் அழைப்புக்காகவே உருவாக்கப்பட்ட இசைக்கோவை. எடுத்து காதில் வைத்ததுமே 'எப்படி இருக்கிங்க? பிரயாகைலாம் எப்படி இருக்குது?" என்றாள். பதில் சொல்லி முடித்ததும் அந்தப் பக்கத்திலிருந்து நாக்கை சப்புக்கொட்டும் சத்தம் கேட்டது.

மோன்
கிளிநொச்சி பாண்டியனுக்கு முன்னால் இருந்த பாலைமரத்தில் தான் ஜெயத்தானை கட்டி வைச்சு இயக்கம் சுட்டதடா என்று சொல்லிய அம்மாவின் சுவாசம் பெரு மூச்சாகத் தான் வெளியேறியது.

கிடா வெட்டு!
கண்கள் மூடிப் படுத்திருந்தான். கதகதவென உடம்பு சுகமாய்த்தான் இருந்தது. இமைகளைத் திறந்தால் வானத்துச் சூரியனின் கிரணங்கள் விழிகளில் வந்து இறங்கும். ஒருச் சாய்த்துப் படுக்கலாம்தான், ரெட்டை மாட்டுவண்டியின் நுகத்தடியில் அதற்குமேல் புரண்டு படுக்க வசதியில்லை. கீழே விழுத்தாட்டிவிடும்.

ஆட்டம்
மார்கழிக் குளிரின் நல்ல உறக்கத்தில் இருந்தவர்களுக்கு மெலிதாக கேட்கத் தொடங்கிய தப்பு சத்தம் தூக்கம் கலையக் கலைய தீவிரமாய் காதில் ஒலித்தது.

நானும் மகளும்
என் மகள் பிறந்து மூன்று மாதத்திலேயே அவளுக்கு என் முகம் பரிச்சயமாகிவிட்டது.

“சிறுகதை இலக்கியம் அழிந்தால் மொழி அழிந்துவிடும்!”
இலக்கிய சிந்தனை அமைப்பின் நிறுவனரான ப.லட்சுமணனை அவரது ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் சந்தித்தோம். ஐம்பது ஆண்டை எட்டுகிறது இந்த அமைப்பு. முதலில் சற்று தயக்கத்துடன் பேசத் தொடங்கியவர், பிறகு மெல்ல இறுக்கம் தளர்ந்து நினைவு நாடாவைச் சுழலவிட்டார். நினைவுகளின் கிளர்ச்சியில் மலர்ந்து, அவர் சிரிக்கிற போது மேல் முன்வரிசைப் பற்களில் பக்கவாட்டில் இரண்டு காணாமல் போயிருப்பது தெரிகிறது. அவரது சிரிப்புக்கு கூடுதலான அழகை அது அளிக்கிறது.

வாய்மையின் நல்ல பிற
காலை தாமதமாக எழுந்தபோதும் அயர்ச்சி நீங்கிய பாடில்லை. அகலத் திறந்த பூமிக்குள் நழுவிச் செல்வது போன்ற அரூப நடனத்தில் பைத்தியமுண்டாகித் தலை தெறிக்க ஓடுவதாக தோன்றிய நேற்றைய இரவின் கனவுகளை எண்ணிக் கொண்டிருந்தாள். ஜன்னல் கண்ணாடிகளை ஊடறுத்து சூரிய ஒளி அறையில் விரவியிருந்தது.

உச்சிக்காற்று
வளத்தித் தென்னை தங்களுக்குப் பிரிந்ததும் குமரேசன் குதியாளம் போட்டான்.

கிழவனின் உயிர்
"பொழுதுவிடிந்து வெளிச்சம் பரவியதும், புதைத்த இடத்தில் பூ வைக்கலாமென்று போனால், ஆண்டவரே, பச்சைப் பிள்ளையை மூடிய குழியில் மண்ணைக் கிளறிப் போட்டிருந்தார்கள். என்னால் தாங்க முடியவில்லை ...''

சீனிக் கொய்யா...
சோத்தாங்கைப் பக்கம் திரும்பினால், குறிஞ்சாக்குளம், நொட்டாங்கைப் பக்கம் திரும்பினால், சின்னக்காளான்பட்டி.

வித்தை
அய்யம்மாவை , வயதான சிப்பிப்பாறை நாய், மற்றும் இங்கும் அங்கும் அலகைத் திருப்பி எல்லாத் திசைகளையும் கொத்தும் அந்தக் கிளிக் கூண்டு சகிதமாகக் கூட்டிக்கொண்டு வந்து காரை மீனா நிறுத்தினாள்.

காதில் விழுந்த கதைகள்
நடராஜன் வேட்டியை எடுத்துக் கட்டினார். மேல் சட்டையைப் போட்டபோது சமையல் அறையிலிருந்து கையைத் துடைத்துக்கொண்டே வந்த சாரதா சொன்னாள்.

மாது என்றொரு மானுடன்
நடுராத்திரி கழிந்து ராத்திரியா காலையா என்று தீர்மானிக்க முடியாத மூன்றே கால் மணிக்கு மாது வந்து சேர்ந்தான்.

காத்திருக்கும் கதைகள்!
கொரோனா பாதிப்பினால் உறவுகளை இழக்க நேரிட்டவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். தனிமைப்படுத்தப்பட்டு குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களையும் பிரிந்திருப்பவர்களும், ஊரடங்கால் அன்றாட வாழ்வை நடத்த சிரமப்படுகிறவர்களும் இதைக் கடந்து மீண்டு வரும் மன உறுதியை வென்றெடுப்பீர்கள் என்று நம்புகிறோம். - அந்திமழை

தென்னம் பாளை...
திருவெண்பாவூர் சர்வோத்தம ஏகாம்பரர் கோயிலுள்ளே அதிகம் கூட்டமில்லை. நுழைவாயிலை மறைத்தபடி செயற்கையான தடுப்பு அமைத்து போலீஸ் மெட்டல் டிடக்டர் கொண்டு சோதித்து ஒவ்வொருவராக உள்ளே அனுமதித்தனர்.

வணக்கம் பி.ஏ. சார்
தொண்டைமானுக்கு இருப்பு கொள்ளவில்லை. ஒருவித கர்வம் மண்டைக்குள் ஏறி, கண்களின் வழியே எட்டிப்பார்த்தது. யாரையாவது கூப்பிட்டு சண்டையிழுத்துக் குத்த வேண்டும் போலிருந்தது.

"தமிழர்களின் இரட்டை சமய வாழ்க்கை!"
தமிழகத்தின் முக்கியமான நாட்டாரியல் ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் ஆ. சிவசுப்ரமணியன் அவர்களிடம் நாட்டார் சமயம், வழிபாடு, தெய்வங்கள் குறித்துப் பேசினோம்.

தாத்தாவின் கருப்பராயன்!
வெயில் தணிந்த மாலை வேளையில் பெருமாநல்லூர் சாலை எம். ஜி.ஆர். காட்டின் பாறைக்குழி மேட்டில் தாத்தாவுடன் நடந்து கொண்டிருந்த போதுதான் கேட்டேன் " வாராவாரம் முனியப்பன் கோயிலுக்கு ஏன் போறீங்க தாத்தா?''

பலியாட்டுக் கறிக்குழம்பு!
எங்கள் வீட்டெதிரே பெரிய மாட்டுத் தொழுவம் உண்டு. தூர தூரத்து உறவுக்காரரான மாமாவின் உழு மாடுகள், பசு மாடுகள் எப்போதும் பத்து உருப்படியாவது வாலை ஆட்டிக் கொசுக் களை விரட்டிக் கொண்டே இருக்கும்.

மண்ணின் சாமிகள்!
"ஊனாகி உயிராகி '' என்று துவங்கும் பிரயோகங்கள் தமிழகத்தில் சிறு தெய்வங்கள்' என்கிற அடைமொழிக்குள் அடங்கியபடிப் பரவிக்கிடக்கும் மண்ணின் சாமிகளுக்கு மிகவும் பொருந்தும்.

பேராசிரியருக்கு கட்டம் கட்டிய பெரியார்!
இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகளாரோடும் தமிழ்த் தென்றல் திருவிகவோடும் நான் நெருங்கிப் பழகியதில்லை.

ஹாப்பி ஊரடங்கு!
சென்ற மாத இறுதியில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் வெளியானது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போனால் ஆச்சர்யப்படுத்தியிருந்தார் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி.

கொரோனா இதுவும் கடந்துபோகும்
கொரோனா இதுவும் கடந்துபோகும்