இதன் இயக்குநர் ஆதித்யா. ‘சவரக்கத்தி’ இயக்கியவர். இவர் மிஷ்கின் தம்பி என்பது கூடுதல் தகவல். இறுதிக் கட்ட வேலைகளில் பிஸியாக இருந்த ஆதித்யாவிடம் பேசினோம்.
‘சவரக்கத்தி’க்குப் பிறகு படம் செய்வதற்கு இவ்வளவு காலதாமதம் ஏன்?
‘சவரக்கத்தி’ வெளியான பிறகு பிரபல சேனலுக்கு ‘கண்ணாமூச்சி’ என்ற வெப் சீரிஸ் பண்ணிக்கொடுத்தேன். அந்த சீரிஸுக்கு நான் ரைட்டர் மட்டுமே. அப்போது ‘துப்பறிவாளன் 2’, ‘பிசாசு - 2’ என அண்ணனுடைய படங்களிலும் ஒர்க் பண்ணிட்டிருந்ததால அடுத்த படத்தை உடனே ப்ளான் பண்ண முடியவில்லை.
என்னுடைய நீண்ட நாள் நண்பர் சேகர். அவர் அண்ணனிடம் ‘அஞ்சாதே’ காலக்கட்டத்தில் மானேஜராக வேலை பார்த்தவர். சினிமாவைத்தாண்டி எங்களிடையே நட்பு உண்டு. அப்போது உதவி இயக்குநராக அவரிடம் என்னுடைய கதைகளைச் சொல்வது வழக்கம்.
ஒரு நாள் சேகர் போன் பண்ணி அவசரமாக புறப்பட்டு பாம்குரோவ் ஹோட்டலுக்கு வரச் சொன்னார். அங்கு தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவரான ராதாகிருஷ்ணன் சாரை அறிமுகம் செய்து வைத்து ‘டெவில்’ கதையைச் சொல்லச் சொன்னார். சாருக்கு கதை பிடித்துப்போகவே அந்த இடத்திலேயே தயாரிக்க முடிவு செய்து அட்வான்ஸ் கொடுத்தார்.
அண்ணன் தம்பி இருவருக்கும் பேய்க் கதையை விட்டால் வேற கதை பண்ணத்தெரியாதா?
‘சவரக்கத்தி’ ப்ளாக் ஹியூமர் படம். அந்தக் கதையில் சிகை அலங்காரம் செய்யக்கூடிய ஒருவரின் இயல்பு வாழ்க்கையையும், பரோலில் வெளிவந்த மங்களா என்பவனின் உக்கிர கோபத்தையும் யதார்த்தமாக பதிவு செய்திருப்பேன்.
கத்தி என்பது புத்தியை தீட்டணுமே தவிர, அடுத்தவரின் உயிரை எடுக்கும் ஆயுதமல்ல என்பதை சொன்னேன். காந்தி, நெல்சன் மண்டேலா போன்ற மேதைகள் பிறக்கும்போது தொப்புள் கொடியை அறுக்க உதவும் உன்னதமான ஆயுதமாகவும் கத்தி பயன்படும் என்பதையும் சொல்லியிருப்பேன்.
இந்தப் படத்துக்கு ஏன் ‘டெவில்’னு தலைப்புனு கேட்கலாம். நம்ம வீட்ல அம்மா, மனைவி, அக்கா, தங்கச்சி என பல பெண்கள் இருப்பார்கள். வாழ்க்கை எப்போதும் சந்தோஷமாகவே இருப்பதில்லை.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
AC கும்மாங்குத்து!
அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.
வாழ்கை ஓரு சினிமா
காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.
சோஷியல் மீடியா மீது வழக்கு!
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!