Essayer OR - Gratuit
வீட்டில் முடிதிருத்தகம்; மாணவரின் முனைப்பு
Tamil Murasu
|March 24, 2025
சிறு வயதிலிருந்து எவருமே தனக்குப் பிடித்தவாறு முடிதிருத்தம் செய்யாததால் மற்றவர் விருப்பப்படி முடிதிருத்தம் செய்பவராக வேண்டும் என ஆறு வயதில் முடிவெடுத்தார் சுஜைஷ் குமார், 17.

அதைப் பதினாறு வயதில் நனவாக்கியும் விட்டார்.
“தலைமுடியை அழகாகவும் திருத்தமாகவும் வெட்டுவது ஒருவரின் தன்னம்பிக்கையைப் பன்மடங்கு உயர்த்தும். பார்க்க அழகாக இருக்கிறோம் என்ற எண்ணம் உள்ளூர மகிழ்ச்சியளிக்கும்,” என்று தலையலங்காரத்தின் முக்கியத்துவத்தைச் சுட்டினார் சுஜைஷ்.
ஆறு வயது சுஜைஷ் பார்த்து வியந்த முதல் நிபுணர் அவர் வீட்டின் எதிரில் முடிதிருத்தும் நிலையத்தை நடத்துபவர்.
பள்ளிக்காலத்தில் நண்பர்கள் இணையத்தில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அதிகம் பார்த்து ரசிக்கும்போது, சுஜைஷ் எப்போதும் முடிதிருத்தம் செய்யும் காணொளிகளைப் பார்ப்பார்.
முடியை வெட்டுவதற்கான அடிப்படைத் திறனில் தொடங்கி பல்வேறு நுணுக்கங்களை இணையம் வழி கற்ற சுஜைஷ், 16 வயதில் நேரடியாகக் களத்தில் இறங்க முடிவெடுத்தார்.
“பெற்றோரிடம் வீட்டிலேயே செய்யப்போகிறேன் என்றேன். பல பொழுதுபோக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு சில காலத்துக்குப் பின் அதைக் கைவிடுவது எனக்கு வழக்கமாக இருந்தது. இதுவும் அதுபோலத்தான் என்று எண்ணி என் பெற்றோர் சம்மதித்தனர்,” என்றார் சுஜைஷ்.
Cette histoire est tirée de l'édition March 24, 2025 de Tamil Murasu.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Tamil Murasu
Tamil Murasu
63 மாவட்டங்களில் 50% குழந்தைகள் வளர்ச்சி குன்றியுள்ளனர்; அரசு அறிக்கை
இந்தியாவின் 13 மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தில் உள்ள 63 மாவட்டங்களில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமான குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாக இருப்பதாக இந்திய அரசின் அறிக்கை கூறியுள்ளது.
1 min
July 29, 2025

Tamil Murasu
தஞ்சோங் காத்தோங் புதைகுழி நிரப்பப்பட்டது
தஞ்சோங் காத்தோங் ரோடு சவுத் சாலையில் ஏற்பட்ட புதை குழி நிரப்பப்பட்டுவிட்டது. நிலப் போக்குவரத்து ஆணை யம் சில சோதனைகளை நடத் திய பிறகு அந்தச் சாலை போக்குவரத்துக்கு உகந்த வகை யில் மறுபடியும் போடப்படும்.
1 min
July 29, 2025

Tamil Murasu
2025ல் கடுமையான புகைமூட்டம் ஏற்படும் சாத்தியம்: ஆய்வாளர்கள்
இந்த ஆண்டில் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா ஆகிய நாடுகளில் கடுமையான புகைமூட்டம் ஏற்படும் ஆபத்து அதிகரித்துள்ளது என்று உள்ளூர் ஆய்வாளர் குழு அதன் வருடாந்தர புகைமூட்ட நிலைமை பற்றிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
1 min
July 29, 2025
Tamil Murasu
புதுச்சேரி: அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000
புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
1 min
July 29, 2025
Tamil Murasu
ஸ்டாலின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது குறித்து அமைச்சர் விளக்கம்
அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்பினார்.
1 min
July 29, 2025
Tamil Murasu
மகாராஷ்டிரா: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பெரும் மோசடி
மகாராஷ்டிராவில் செயல்படுத்தப்படும் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் பெரும் மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இது ஆளும் பாஜக கூட்டணிக்கு சிக்கல் ஏற்படுத்தியுள்ளது.
1 min
July 29, 2025

Tamil Murasu
காஸாவில் மோசமடையும் அவலநிலை
இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான போர் காரணமாக காஸாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் கடும் பாதிப் புக்கு ஆளாகி உள்ளனர்.
1 min
July 29, 2025
Tamil Murasu
தலைவன் தலைவி; மூன்று நாள்களில் ரூ.20 கோடி வசூல்
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான ‘தலைவன் தலைவி' படம் முதல் மூன்று நாள்களிலே ரூ.20 கோடி வரை வசூல் கண்டுள்ளது.
1 min
July 29, 2025
Tamil Murasu
நாய்க்கடி அனைவருக்குமான எச்சரிக்கை மணி: நடவடிக்கை எடுக்கும் உச்ச நீதிமன்றம்
பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வரும் நாய்க்கடி சம்பவம் தொடர்பாக, இந்திய உச்ச நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.
1 min
July 29, 2025

Tamil Murasu
ஸ்ரீதேவியைக் கட்டாயப்படுத்திய இயக்குநர்: உடல் மெலிந்தார், மயங்கி விழுந்தார்
நடிகை ஸ்ரீதேவி உடல்நலம் பாதிக்கப்பட்டதற்கு அவர் கடைப்பிடித்த உணவுக்கட்டுப்பாடுதான் காரணம் என்றும் பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மாதான் அவரை இதற்காக கட்டாயப்படுத்தினார் என்றும் மற்றொரு இந்தி இயக்குநரான பங்கஜ் பரஷர் தெரிவித்துள்ளார்.
1 min
July 29, 2025