காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!
Aanmigam Palan|October 01, 2024
என் புத்தக சாலையில் ஏதோ ஒரு புத்தகத் தைத் தேடியபோது, எப் போதோ வாங்கிய “பொன்னியின் செல்வன்" கிடைத்தது. படித்து வெகு நாள் ஆனதால் மறுபடியும் முதல் அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கினேன். என்னை மறந் தேன்... இதோ அந்த வர்ணனை சில வரிகளில். வீர நாராயண ஏரிக்கரை, ஆடித் திங்கள் பதி னெட்டாம் நாள், முன் மாலை நேரத்தில், அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாரா யண ஏரிக்கரை மீது ஒரு வாலிபவீரன் குதிரை ஏறிப்பிரயாணம் செய்து கொண்டிருந்தான்.
முனைவர் ஸ்ரீராம்
காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!

நெடுந்தூரம் பிரயாணம் செய்து அலுத்துக் களைத்திருந்த அவ னுடைய குதிரை மெள்ள மெள்ள நடந்து சென்று கொண்டிருந்தது. அதைப் பற்றி அந்த இளம் வீரன் கவலைப்படவில்லை.

அகண்டமான அவன் வீர நாராயண ஏரியின் தோற்றம் அவன் உள்ளத்தை அவ்வளவாக வசீகரித்திருந்தது.

ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும்தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு அலைமோதிக் கொண்டிருப்பது வழக்கம். வடகாவேரி என்று பக்தர்களாலும், கொள் ளிடம் என்று பொது மக்களாலும் வழங்கப் பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து, வீர நாராயண ஏரியில் பாய்ந்து, அதை ஒரு பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது.

அந்த ஏரியின் எழுபத்து நான்கு கண வாய்களின் வழியாகவும் தண்ணீர் குமு குமுவென்று பாய்ந்து சுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரத்துக்கு நீர்வளத்தை அளித்துக் கொண்டிருந்தது.

அந்த ஏரித் தண்ணீரைக் கொண்டு, கண் ணுக்கெட்டிய தூரம் கழனிகளில் உழவும் விரை தெளியும் நடவும் நடந்து கொண்டி ருந்தன. உழுது கொண்டிருந்த குடியான வர்களும், நடவு நட்டுக் கொண்டிருந்த குடி யானப் பெண்களும், இனிய இசைகளில் குதூகலமாக அங்கங்கே பாடிக் கொண்டி ருந்தார்கள். ஏரிக்கரை மீது ஏறியதிலிருந்து அந்த ஏரிக்கு எழுபத்துநாலு கணவாய்கள் உண்டு என்று சொல்லப்படுவது உண்மை தானா என்று அறிந்து கொள்ளும் நோக்கத்துடன், அவன் கணவாய் களை எண்ணிக் கொண்டே வந்தான்.

ஏறக்குறைய ஒன்றரைக் காததூரம் அவன் அந்த மாபெரும் ஏரிக்கரை யோடு வந்த பிறகு எழுபது கணவாய் களை எண்ணியிருந்தான்.

ஆகா! இது எவ்வளவு பிரம்மாண்டமான ஏரி? எத்தனை நீளம்? எத்தனை அகலம்? தொண்டை நாட் டில் பல்லவப் பேரரசர்களின் காலத்தில் அமைத்த ஏரிகளையெல்லாம் இந்த ஏரிக்கு முன்னால் சிறிய குளங்குட்டைகள் என்றே சொல்லத் தோன்றும் அல்லவா? வடகாவே ரியில் வீணாகச் சென்று கடலில் விழும் தண்ணீரைப் பயன் படுத்துவதற்காக மதுரை கொண்ட பராந்தகரின் புதல்வர் இளவர சர் ராஜா தித்தர் இந்தக் கடல் போன்ற ஏரியை அமைக்க வேண்டுமென்று எண் ணினாரே? எண்ணி அதைச் செயலிலும் நிறைவேற்றினாரே? அவர் எப்பேர்ப்பட்ட அறிவாளியாயிருந்திருக்க வேண்டும்?

74 மதகுகளும் 74 ஆச்சாரியர்களும்

この記事は Aanmigam Palan の October 01, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Aanmigam Palan の October 01, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

AANMIGAM PALANのその他の記事すべて表示
"ஸங்கல்ப ஸித்த சாயி”
Aanmigam Palan

"ஸங்கல்ப ஸித்த சாயி”

அனுபூதியடைந்த மகான் ஒரு வரது முன்னிலையில் வசிப்பது சாதகன் ஒருவனுக்கு மிக விரைவான ஆன்மிக முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பது பெரியோர் வாக்கு.

time-read
6 分  |
October 01, 2024
சிந்தாதேவி
Aanmigam Palan

சிந்தாதேவி

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணி மேகலையில் கூறப்பட்டுள்ள தெய்வம் சிந்தாதேவி ஆவாள்.

time-read
1 min  |
October 01, 2024
ஆகாசமூர்த்தி
Aanmigam Palan

ஆகாசமூர்த்தி

இந்தியத் திருநாட்டின் பல்வேறு அரச மரபினரின் கலைப் படைப்புகளைத் தொகுத்து நோக்குவோ மாயின் காண்போரின் உள்ளத்தை ஈர்க்கும் தனிச்சிறப்பு ஆடல் வல்லான் திருமேனிகளுக்கே உரியவைகளாக இருப்பதைக் காணலாம்.

time-read
2 分  |
October 01, 2024
நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!
Aanmigam Palan

நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!

யோகயுக்தோ விசுத்தாத்மா ஜிதேந்த்ரிய ஸர்வபூத்த்மபூதாத்மா குர்வன்னபி நலிப்யதே (5:7)

time-read
4 分  |
October 01, 2024
12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!
Aanmigam Palan

12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!

இந்து மதத்தின் மூல புருஷராக விளங்குப வர் வியாசபகவான்.

time-read
1 min  |
October 01, 2024
கசனின் குருபக்தி
Aanmigam Palan

கசனின் குருபக்தி

மூவுலகையும் ஆள வேண்டும் என்ற எண்ணம் தேவர்களும், அசுரர்களும் இடையே போட்டி ஏற்பட்டு கொண்டே இருந்தன.

time-read
4 分  |
October 01, 2024
தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!
Aanmigam Palan

தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!

சென்ற இதழில், உமை யம்மையானவள் மலைமகள் அலை மகள் கலைமகள் மூன்று சக்தி களின் அம்சமாகவே கருதப்படுகிறாள்.

time-read
3 分  |
October 01, 2024
பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!
Aanmigam Palan

பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!

ஓரு கோயிலுக்கு மிக முக்கியமான ஒன்று, ஆகமம்.

time-read
4 分  |
October 01, 2024
அவதாரப் புருஷர் மத்வர்!
Aanmigam Palan

அவதாரப் புருஷர் மத்வர்!

12.10.2024 - ஸ்ரீமத்வாச்சாரியார் ஜெயந்தி

time-read
4 分  |
October 01, 2024
காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!
Aanmigam Palan

காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!

என் புத்தக சாலையில் ஏதோ ஒரு புத்தகத் தைத் தேடியபோது, எப் போதோ வாங்கிய “பொன்னியின் செல்வன்\" கிடைத்தது. படித்து வெகு நாள் ஆனதால் மறுபடியும் முதல் அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கினேன். என்னை மறந் தேன்... இதோ அந்த வர்ணனை சில வரிகளில். வீர நாராயண ஏரிக்கரை, ஆடித் திங்கள் பதி னெட்டாம் நாள், முன் மாலை நேரத்தில், அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாரா யண ஏரிக்கரை மீது ஒரு வாலிபவீரன் குதிரை ஏறிப்பிரயாணம் செய்து கொண்டிருந்தான்.

time-read
4 分  |
October 01, 2024