試す - 無料

நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!

Aanmigam Palan

|

October 01, 2024

யோகயுக்தோ விசுத்தாத்மா ஜிதேந்த்ரிய ஸர்வபூத்த்மபூதாத்மா குர்வன்னபி நலிப்யதே (5:7)

- பிரபு சங்கர்

நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!

"உடலைத் தன் வசமாக்கிக்கொண்டி ருக்கும் ஒருவன், புலன்களை அடக்கியாள முடிந்த ஒருவன், உலக உயிர்களனைத்தும் ஆன்ம சொரூபமே என்று தெளிவடைந்த ஒருவன், உலகியல் கர்மங்களில் ஈடுபட் டாலும், நிச்சயமாக அவன் கறை படிந்தவ னாக ஆவதில்லை." சரீரம் என்ற ஒன்றை உணர்ந்தவன், அதுவே தான் மற்றும் எல் லாம் என்ற உணர்வுக்கும் ஆட்படுகிறான். உலகியல் வாழ்க்கையில் சரீரத்தை முன்னி றுத்தவேண்டியது அவசியமாகிறது. அதுவே அடையாளமாகவும் ஆகிறது.

ஆனால் மேம்போக்கான, வெளிப்படை யான செயல்களுக்குப் பயன்படும் அந்த சரீரத்துக்குள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்க நாம் யாருமே விழைவதில்லை. உடலைச் செயல்பாட்டுக்கான ஒரு கருவி என்றே எடுத்துக்கொள்வோம்.

அந்த உடலுக்குள் உறுப்புகள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை வேண்டுமானால் விஞ்ஞானம் சோதனை ரீதியாக விவரிக்க லாமே தவிர, அவற்றை இயக்குவது எது என்ற கேள்விக்குப் பெரும்பாலும் பதில் கிடைப்பதில்லை.

விழுங்கும் ஆகாரம் எப்படி செரிக்கி றது, அவ்வாறு செரிக்கும் ஆகாரத்திலிருந்து நன்மை தரும் சத்துகளையும், வேண்டாத வற்றையும் பிரிக்கும் சக்தி இரைப்பைக்கும், ஈரலுக்கும் எப்படி வந்தது? வேண்டாத வற்றை வெளியேற்றும் பொறுப்பைக் குடல் எப்படி வெகு இயல்பாகச் செய்கிறது, இது பகலில் மட்டுமா, அதாவது நாம் விழித்திருக் கும்போது மட்டுமா, இரவிலும் கூடத்தான் நடக்கிறது.

அதாவது நாம் நிம்மதியாக ஓய்வு எடுத் துக் கொள்ள, நம் உடலுக்குள் இருக்கும் உறுப்புகள் நமக்கு உறுதுணையாக நிற் கின்றன. நம் தூக்கத்திலும் ரத்த ஓட்டம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதயம் ரத்தத்தை வாங்கி, வெளியிட்டுக் கொண்டு தான் இருக்கிறது. நுரையீரல் சுவாசித்து கொண்டுதான் இருக்கிறது.

இவற்றையெல்லாம் இயக்குவது யார் அல்லது எது?

கைகளை அசைக்கிறோம், கால்களை இயக்குகிறோம். அவற்றில் அமைந்திருக் கும் மூட்டுகளுக்கு எண்ணெய் போட்டு அவற்றை இலகுவாக இயங்கவைக்கும் மெக்கானிக் யார் அல்லது எது?

லௌகீகமாக இப்படி நம் உடற்கூறு களை நாம் ஆராய முற்படும்போது நமக்கு ஓர் உண்மை புலப்படும். நம்மை இயக்குப வர், நம்மை நாமாக உலவவிடுபவர், அந்தப் பரமாத்மா அன்றி வேறு எவரும் இலர். ஆகவே, நம் சரீரத்தைத் தவிரவும் வேறு ஏதோ ஒன்றும் நமக்குள் இருக்கிறது.

அது நம் அறிவுக்கு அப்பாற்பட்டது என்று விலகுபவர், அனுபவங்களின் பலன்களை

Aanmigam Palan からのその他のストーリー

Aanmigam Palan

இசைக்காகவே ஊத்துக்காடு

அந்த இளைஞருக்கு சங்கீதத்தின் மீது அளவு கடந்த ஆர்வம். ஒரு சமயம்... அவர் போய்க்கொண் டிருந்தபோது, மனதை மயக்கும் குரல் ஒன்று கேட்டது.

time to read

5 mins

July 16-31, 2025

Aanmigam Palan

Aanmigam Palan

ஆடிப்பூரமும் அம்மனுக்கு அற்புதத் திருவிழாக்களும்

ஆடி மாதம் பிறந்துவிட்டது. அம்மன் கோயில்களில் திருவிழா ஆரவாரங் களை கட்டி நிற்கின்றது. சைவ வைணவக் கோயில்களில் ஆடிப்பூர விழாவும், ஆடி வெள்ளி விழாக்களும் அற்புதமாக நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.

time to read

5 mins

July 16-31, 2025

Aanmigam Palan

Aanmigam Palan

அம்மைநோய் நீக்கும் அம்மன்

வேதங்களில் காணப்படும் தத்துவங்களை எளிய கதைகளாக தொகுத்து வழிகாட்டுவதே புராணங்கள். அத்தகைய புராணங்களில் ஒன்றுதான் மாரியம்மன் எனும் ரேணு காதேவி அம்மன் வரலாறு.

time to read

1 min

July 16-31, 2025

Aanmigam Palan

நாகர்களுக்குப் பிடித்த நூலும் பாலும்

தென் தமிழகத்திலேயே நாகர் வழிபாட்டுக்கு சிறந்த தலமாக “நாகராஜா கோயில்\" திகழ்கிறது.

time to read

4 mins

July 16-31, 2025

Aanmigam Palan

Aanmigam Palan

அபயாம்பிகை பட்டர் அருளிய சதகம்

\"காலம் மாறிப் போச்சு! எல்லாமே தலை கீழா நடக்குது!\" எல்லோருமே அடிக்கடி கேட்ட வாசகங்கள்தாம். பலமுறை நாமே சொல்லியிருப்போம். இது உண்மையா என்றால்... இல்லை. இது பொய்!

time to read

3 mins

July 16-31, 2025

Aanmigam Palan

Aanmigam Palan

வையத்து வாழ்வீர்காள்!

பின்பழகிய பெருமாள் ஜீயர், தன் சீடர் களுடன் திருப்புட்குழி ஆலயத்தினுள் நுழைந்தார். தான் பிறந்தமண்ணில் உள்ள அந்த ஆலயத்துக்கு எப்பொழுது சென்றாலும் அவருக்கு கூடுதல் சந்தோஷம் உண்டாகும். திருப்புட்குழி, நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்தி ஏழாவது திவ்ய தேசம். விஜயராகவப் பெருமாள், மரகதவல்லி தாயார் தரிசனம் முடிந்து, பாதிரி மரத்தின் நிழலில் ஜீயரும், சீடர்களும் அமர்ந்தார்கள்.

time to read

3 mins

July 16-31, 2025

Aanmigam Palan

Aanmigam Palan

கலக்கம் போக்குவாள் காளராத்ரி

துர்கை என்றாலே, துக்கங் களை களைபவள், பக்தனை, துக்கங்களில் இருந்து, அரண் போலக் காப்பவள் என்று பொருள். இப்படி அரணாக இருந்து பக்தர்களைக் காக்கும் துர்கா தேவிக்கு பல வடிவங்கள் உண்டு.

time to read

3 mins

July 16-31, 2025

Aanmigam Palan

Aanmigam Palan

எனக்கு நானே நண்பன், நானே பகைவன்!

நமக்கு வழங்கப்படும் ஒரு பொருளை 'வேண்டாம்' என்றுகூறி மறுப்பதற்கு மன உறுதி வேண்டும். அவ்வாறு அளிக்கப்படும் அந்த கணநேரத்துக்குள் அந்தப் பொருள் நமக்குத் தேவையா, அது இல்லாவிட்டால் நமக்கு ஒன்றும் நஷ்டமோ, பாதிப்போ இல்லையே; ஆனாலும் கொடுப்பதை மறுப்பானேன், வாங்கிக் கொள்வோம், பயன்பாடு இல்லையென்றால் பரண் மேல் தூக்கிப் போடுவோம் என்றெல்லாமும் யோசித்தோமானால், அந்தப் பொருள் மீதான இச்சை நம்மை எந்த அளவுக்கு ஆட்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

time to read

4 mins

July 16-31, 2025

Aanmigam Palan

Aanmigam Palan

வாழ்வில் தத்தளிக்கும் ஜனங்களுக்கு ஜல நாராயணப் பெருமாள்

தினகரன் ஆன்மிக மலரில் “வியக்க வைக்கும் வியாசராஜரின் அனுமன்” என்னும் பகுதி வெளியாகி வருகிறது.

time to read

5 mins

July 16-31, 2025

Aanmigam Palan

Aanmigam Palan

பகவானின் முதல் தொண்டனை வணங்குவோம்!

நாகபஞ்சமி - ஜூலை 29,2025

time to read

3 mins

July 16-31, 2025

Translate

Share

-
+

Change font size