
அதை ஒட்டியே தொழில்களும் தோன்றின, நாகரிகமும் வளர்ந்தது. அந்த வரிசையில் உலகம் முழுவதுமே வேளாண்மைக்கு அடுத்தபடியாக, நெசவுத் தொழில் சிறப்புற்று விளங்கியது. குறிப்பாக நாகரிகத்தில் முன்னோடிகளான, தமிழ் சமூகத்தில் இருந்த திறன்மிகு நெசவாளர்களின் கலைநயமிக்க படைப்புகள், உலக அளவில் புகழ்பெற்று விளங்கியது. ஆனால், கால ஓட்டத்தில், எந்திரங்களின் அதீத ஆதிக்கத்தால், நலிந்துவரும் பழம்பெரும் தொழில்களின் பட்டியலில் கைத்தறி நெசவும் உள்ளது. இதனால், கைத்தறி நெசவை நம்பியுள்ள இலட்சக்கணக்கான நெசவாளர் குடும்பங்கள் பாதிப்படைகிறார்கள். இதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு மாவட்டம்தோறும் 'கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை' ஏற்படுத்தி, பாரம்பரியமிக்க நெசவுத் தொழிலையும், நெசவாளர்களின் வாழ்க்கையையும் காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
அதில் ஒன்றாக, பழமையையும், புதுமையையும் கலந்து, புதிய புதிய வடிவமைப்புகளை படைக்கும் வகையில் நெசவாளர்களின் கலைத்திறனை ஊக்குவிக்கின்றனர். பொதுவாகவே கைத்தறி துணிகளின் சிறப்பம்சமே, அதன் தரமும், நீண்டகால உழைப்பும்தான். நீங்கள் எத்தனை விலைபோட்டு மற்ற துணிகளை எடுத்தாலும், கைத்தறி இரகங்களுக்கான மதிப்பென்பது விலை மதிக்க முடியாதது. ஏனென்றால், அதில் ஒவ்வொரு நெசவாளரின் மாபெரும் உழைப்பும், கற்பனைத் திறனும் சரிபாதியாக கலந்துள்ளது. கைத்தறி துறையில், எண்ணற்ற புதிய இரகங்களை அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.
இந்த விழாக் காலத்திலேனும், பொது மக்கள் கலைநயமும், தரமும் ஒருசேர இணைந்து காணப்படும் கைத்தறி துணிகளை, வாங்கிப் பயன்படுத்த வேண்டுமென்ற நோக்கத்திலும்,
அதற்கு வழிகாட்டும் வகையிலும், காஞ்சிபுரத்தில் என்னென்ன துணி இரகங்கள் தயாராகி விற்பனைக்கு வருகிறது என்பதை அறிய காஞ்சி புரம் சென்றிருந்தோம். இதோ நமக்கு கிடைத்த தகவல்கள்...
この記事は Thangamangai の Thanga Mangai January 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Thangamangai の Thanga Mangai January 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン

பட்டை குறியீடு (பார்கோடு)
பட்டைக் குறிமுறை, பட்டை குறியீடு, பார் குறியீடு எல்லாமே பார்கோடினை குறிக்கும். பட்டைக்குறி என்பது எந்திரம், படிக்கக்கூடிய வடிவத்தில் பொருளை குறிக்கும் முறையாகும்.

தவறுகளும், மாற்றங்களும்..
லவித பாடங்கள், அனுபவங்கள், அழுகை, புன்னகை, காதல், நட்பு, உறவு, துரோகம், 'உணர்வு, பிறப்பு, இறப்பு, இழப்பு, புதுப்புது மனிதர்கள், மாற்றங்கள், இயற்கை சீற்றங்கள் என்று பெறும் கற்றலும், கற்பித்தலுமாய் கடந்தது 2024ஆம் ஆண்டு. இவை ஏதும் மாறுவதுமில்லை, நம் யாரையும் மாற்றுவதுமில்லை. மாற்றம் ஒன்றே மாறாதது என்ற ஒற்றை சொல்லை தவிர..

எங்களுக்கும் சமூகப் பார்வை இருக்கிறது!
முத்துப்பேட்டையை சொந்த ஊராகக் கொண்ட தேவிலிங்கம் அவர்கள், தன் அப்பாவின் அரசாங்கப் பணி காரணமாக பல்வேறு ஊர்களில் வாழ்ந்துள்ளார். தற்போது திருமணத்திற்கு பிறகு வேதாரண்யத்தை வசிப்பிடமாக கொண்டுள்ள இவரின், மூன்றாவது புத்தகமான 'நெருப்பு ஓடு' நாவல், வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக இவரின் 'நெய்தல் நறுவீ என்ற கவிதை தொகுப்பும், 'கிளிச்சிறை’ என்ற சிறுகதை தொகுப்பும் வெளியாகி வாசகர் மத்தியில் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. சீரோடிகிரி பதிப்பகம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற இந்த நாவலை, அந்த பதிப்பகமே வெளியிட்டுள்ளது.

பெண் எழுத்தாளராக இருப்பதில் கூடுதல் சவால்கள்!
தூத்துக்குடி மாவட்டத்தின் வீரபாண்டியபட்டினம் என்ற கடலோர கிராமத்தில் பிறந்து வளர்ந்த பிரிம்யா க்ராஸ்வின் அவர்கள், ஒரு ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக பணியில் உள்ளார்.

மனித உரிமைகளும், பெண்களின் முன்னேற்றமும்...!
வ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 10ஆம் நாள் உலகமெங்கும் மனித உரிமை விழிப்புணர்வு நாளாக 1948ஆம் ஆண்டு முதல் அய்க்கிய நாடுகளின் சபை மூலமாக கொண்டாடப்படுகிறது.

தமிழர் திருநாளும், பொங்கல் விழாவும்...!
ந்தியாவில், மாநில வாரியாக பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், தமிழர் திருநாள் விழாவான பொங்கலுக்கென்று தனிச் சிறப்புண்டு. உலகத்தின் இயக்கத்திற்கு காரணமான உணவை உற்பத்தி செய்யும், உழவுத் தொழிலுக்கு மரியாதை செலுத்தும் ஒப்பற்ற நிகழ்வுதான் பொங்கல் விழா.

எழுத்துலகை அலங்கரிக்கும் பெண் படைப்பாளிகள்!
வாசிப்பிற்கான மிகப்பெரிய அடையாளமாக விளங்கும், 48ஆவது சென்னை புத்தக கண்காட்சி நடந்து முடிந்திருக்கிறது.

திறமையுள்ள எழுத்து நிச்சயம் அங்கீகாரம் பெறும்!
எழுத்தாளர் றின்னோஸா அவர்கள் டென்மார்க்கில் உள்ள ஒரு பன்னாட்டு தனியார் வங்கியில் உயர் அதிகாரியாக பொறுப்பில் உள்ளார். சிறுவயதில் இருந்தே தமிழின் மீதும், எழுத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பல்வேறு இணையதள பத்திரிகைகளிலும், முன்னணி அச்சு இதழ்களிலும் இவருடைய படைப்புகள் வெளியாகி உள்ளன.

உண்மை இல்லாத எந்த ஒன்றும் நிலை பெறாது!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியபட்டினம் என்ற கடலோர கிராமம்தான், ஆசிரியையும், எழுத்தாளருமான ரம்யா அருண்ராயன் அவர்களின் சொந்த ஊராகும். தற்போது, கோவை மாவட்டத்தின் அரசுப்பள்ளி ஒன்றில் மேல்நிலை இயற்பியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.