CATEGORIES
Kategorier
ஜி.எஸ்.டி. குறைந்தபட்ச வரி 5ல் இருந்து 8 சதவீதமாக உயர வாய்ப்பு
ஜி.எஸ்.டி. வரியின் குறைந்தபட்ச வரம்பை 5 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்த அந்த குழு முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை
உக்ரைன் ஆயுதங்களை கீழே போடாத வரை, தாக்குதலை நிறுத்தமாட்டோம் என ரஷிய அதிபர் புதின் திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், மோடி பேச இருக்கிறார்.
திட வள மேலாண்மை மையத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலம், வார்டு எண். 57க்குட்பட்ட ஒண்டிப்புதூர், பட்டனம் இட்டேரி சாலையிலுள்ள திட வள மேலாண்மை மையத்தை தமிழ்நாடு முதலமைச்சரால் 2021ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி துவக்கி வைக்கப்பட்டது.
காரைக்காலில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, காரைக்காலில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
உக்ரைனில் தவிக்கும் காரைக்கால் மாணவர்கள் ஓரிரு நாளில் தாயகம் திரும்புவார்கள்
சபாநாயகர் செல்வம் பெற்றோரிடம் உறுதி
ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி தேர்தலில் போலீஸ் தடியடி
ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி தேர்தலில் போலீஸ் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
21 மாநகராட்சிகளிலும் திருக்கூட்டம் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு
340 வருட வரலாற்றில் சென்னைக்கு பெண் மேயர்
முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு நிபந்தனை ஜாமீன்
உயர்நீதிமன்றம் உத்தரவு
மீன் பிடிக்கும் பணியை ஆய்வு செய்த ஆட்சியர்
கன்னியாகுமரி மாவட்ட மீன்வளத் துறையின் சார்பில், கன்னியாகுமரி லீபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஆரோக்கியபுரம் கடல் பகுதியில் கடந்த ஓராண்டு காலமாக உலக வங்கி நிதியுதவியுடன் நிலைத்த வாழ்வாதாரத்திற்கான மேலாண் திட்டத்தின் கீழ் தலா ரூ.2 லட்சம் மதிப்பில் கூண்டுகளில் வளர்க்கப்பட்ட கொடுவாமீன்களை பிடிக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் அரவிந்த், துவக்கி வைத்தார்.
மாநில அளவிலான போட்டியில் கடலூர் மல்யுத்த அணி தங்கம் வென்று சாதனை
சிவா மாவட்ட விளையாட்டு அலுவலர் பரிசளித்ததோடு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்
குவாட் தலைவர்களின் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு
இன்று நடைபெற உள்ள குவாட் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் பங்கேற்க உள்ளார்.
உக்ரைனில் இருந்து திரும்பிய அரியாங்குப்பம் மாணவியை சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர்
உக்ரைன் நாட்டில் இருந்து அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த ரோஜா பாதுகாப்பாக நாடு திருப்பினார்.
முக ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு தங்க மோதிரம் வழங்கல்
சங்கரன்கோவிலில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு திமுக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ம.ம.பொ. சிவ பத்மநாதன் ஆலோசனைப்படி சங்கரன்கோவில் எம்எல்ஏ வழக்கறிஞர் ஈ.ராஜா தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
முழுமையான படை பலத்துடன் நோட்டோ நாடுகளின் ஒவ்வொரு அங்குலமும் பாதுகாக்கப்படும்: ஜோ பைடன்
ரஷியாவின் அனைத்து விமானங்களும் அமெரிக்கா வான்வெளியை பயன்படுத்த தடைவிதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கம் வென்றார்
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்து வருகிறது ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தகுதி சுற்றில் 584 புள்ளிகளுடன் 3 வது இடத்தை பிடித்து டாப் 8 வீரர்களில் ஒருவராக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்திய இளம் வீரர் சவுரப் சவுத்ரி இறுதி சுற்றில் பிரமாதப்படுத்தினார்.
100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது கடின உழைப்புக்கு கிடைத்த சான்று: கோலி குறித்து பும்ரா புகழாரம்
இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை பஞ்சாப் மாநிலம் மொகாலியில் தொடங்குகிறது.
10, 12ம் வகுப்புகளுக்கு மே 6,5ம் தேதி பொதுத்தேர்வுகள் தொடக்கம்
10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 25ல் தொடங்குகிறது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
69வது பிறந்தநாள்-தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
உசிலம்பட்டி நகராட்சி சேர்மனாகிறாரா 10வது வார்டு திமுக ஒன்றிய கவுன்சிலர்?
சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு
அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. தேசிய அறிவியல் தின விழாவிற்கு தலைமை ஆசிரியர் தமிழ் செல்வி தலைமை தாங்கினார்.
69வது பிறந்த நாள் கொண்டாட்டம் - அண்ணா, கருணாநிதி, பெரியார் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றக் கொண்ட பின்பு மு.க.ஸ்டாலின் கொண்டாடும் முதல் பிறந்த நாள் இது என்பது குறிப்பிடத்தக்கது. தி.மு.க. தலைவர் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று 69வது பிறந்தநாள். இதையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டில் காலையில் எழுந்ததும் அவர் புத்தாடை அணிந்து தனது தந்தையான மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து வணங்கினார்.
உக்ரைன் விவகாரம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு
உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் பிரதமர் மோடி விளக்கம் அளித்தார்.
ராகுல், காங்கிரஸ் தலைவராக செப்டம்பர் மாதம் தேர்வு
கடந்த 2019ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 52 இடங்களில் வெற்றி பெற்று தோல்வியை சந்தித்தது. அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி உத்தர பிரதேச மாநிலம் அமேதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய 2 தொகுதி களில் போட்டியிட்டார்.
போலியோ நோய் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் - ஆட்சியர்
போலியோ எனும் இளம்பிள்ளைவாத நோயினை ஒழிப்பதற்கு வருடந்தோறும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
ஜெயக்குமார் கைதை கண்டித்து: தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அ.தி.மு.க. வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சர்வதேச குத்துச்சண்டை: இந்திய வீராங்கனைகள் நிஹாத், நித்துவுக்கு தங்கப்பதக்கம்
73வதுஸ்ட்ராண்ட்ஜா நினைவு சர்வதேச குத்துச்சண்டை போட்டி பல்கேரியாவின் சோபியா நகரில் நடந்தது. இதில் நேற்று பெண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை நிஹாத் ஜரீன் 41 என்ற கணக்கில் 3 முறை ஐரோப்பிய சாம்பியனான டெடியானோ காப்பை (உக்ரைன்) தோற் கடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
உக்ரைன் விவகாரம் : பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆலோசனை கூட்டம்
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலைத் தொடர்ந்து அங்குள்ள மாணவர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை தாய்நாடு அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
ரஷிய படையினர் 1,000 பேர் உயிரிழப்பு: உக்ரைன் ராணுவம் அறிவிப்பு
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் லட்சக்கணக்கிலான படை வீரர்கள் மற்றும் போர் தளவாடங்களை குவித்தது. போரை தவிர்க்க ரஷியாவிடம் ஐ.நா. அமைப்பு வேண்டுகோள் வைத்தது.
உள்ளாட்சித்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கவுன்சிலர்களை சந்திக்கும் ராகுல் காந்தி
தமிழ்நாடு முழுவதும் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கவுன்சிலர்கள் அனைவரும் 28 ந்தேதி மதியம் சத்தியமூர்த்தி பவன் வந்து விடவேண்டும் என்று கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
மகா சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி
மலை உச்சியில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் திரளான பக்தர்கள் வருகை தருவார்கள். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளதால் பக்தர்கள் மலைக்கு செல்ல மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி ஆண்டு தேதி வழங்கப்பட்டு வருகிறது.