1998ல் அவரின் இயக்கத்தில் முதல்படமாக வெளிவந்து பலரின் மனதைக் கிறங்கடித்த ‘குச் குச் ஹோதா ஹை’ இப்போதும் கரணை பேச வைத்துக் கொண்டிருக்கிறது.
பின்னர், ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதுமான ரசிகர்களைக் கவர்ந்தார் கரண். கூடவே படங்கள் தயாரிப்பதும், இயக்குவதும், பிசினஸ் செய்வதும், அதற்கான முதலீடு போடுவதும் எனப் பன்முகத் தன்மையுடன் செயல்பட்டார்.
இப்போது சினிமா இயக்குநராகி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் கரண் ஜோஹர். இத்தனை ஆண்டுகளில் அவர் சுமார் 50 படங்களைத் தயாரித்துள்ளார். இதில் பத்து படங்கள் அவர் இயக்கத்தில் வந்தவை. இவற்றில் பெரும்பாலானவை சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை; வசூலில் சாதனை படைத்தவை. இந்நேரத்தில் கொஞ்சம் காஃபியுடன், கேஜோ எனச் செல்லமாக அழைக்கப்படும் கரண் ஜோஹர் பற்றிப் பேசலாம்.
1972ம் ஆண்டு மும்பையில் யாஷ் ஜோஹர், ஹிரூ ஜோஹருக்கு மகனாகப் பிறந்தவர் கரண் ஜோஹர். சிந்தி பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை யாஷ் ஜோஹர் 1950களில் இருந்து பாலிவுட்டில் இருப்பவர். முதலில் இந்தி சினிமாவில் விளம்பரம் மற்றும் புகைப்படக் கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு தயாரிப்பாளராக உயர்ந்தார்.
1976ல் ‘தர்மா புரொடக்ஷன்ஸை’ ஆரம்பித்தார். சில வெற்றிப் படங்களைத் தந்தார்.
இதனால், தயாரிப்பாளரின் மகனாக வசதிகளுடனே வளர்ந்தார் கரண். பள்ளிப் படிப்பு முடிந்ததும் கல்லூரியில் வணிகவியல் படித்தார். ‘‘எனது பெற்றோர் நான் சினிமா பிசினஸில் வரக்கூடாது என நினைத்தனர். என் அம்மாவோ எனக்கு நிலையான வேலையும், நிலையான வருமானமும் இருக்கவேண்டுமென ஆசைப்பட்டார்.
சினிமா ஒரு தொழில் அல்ல என்றார். நான் ஆர்ட்ஸ் படிப்பதை அவர் விரும்பவில்லை. அதனாேலயே காமர்ஸ் முடித்தேன். ஒரு நல்ல சிந்து பஞ்சாபி பையனாக அம்மாவின் பேச்சைக் கேட்டேன்...’’ எனச் சிரிக்கிறார் கரண்.
Denne historien er fra 09-02-2024-utgaven av Kungumam.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra 09-02-2024-utgaven av Kungumam.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
AC கும்மாங்குத்து!
அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.
வாழ்கை ஓரு சினிமா
காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.
சோஷியல் மீடியா மீது வழக்கு!
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!