"ஆமாம்பா, ராகுலுக்கு பதிலாக அவர் வயநாடு தொகுதியில் நிறுத்தப்பட்டிருக்கிறாரே?"
"உண்மைதாங்க தலைவரே, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உ.பி.யிலுள்ள ரேபரேலி தொகுதியிலும், கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியிலும் ஒருசேர போட்டியிட்ட ராகுல்காந்தி, இந்த 2 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடினார். ஏதாவது ஒரு தொகுதியில் இருந்துதான் இவர் நாடாளுமன்றம் செல்லமுடியும் என்பதால், ரேபரேலி வெற்றியைக் கையில் வைத்துக்கொண்டு, வயநாடு தொகுதியின் எம்.பி. பதவியைக் கைகழுவினார் ராகுல். இந்தநிலையில், வயநாடு தொகுதிக்கு நவம்பர் 13-ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ராகுல் போட்டியிட்ட தொகுதியைக் கைப்பற்ற வேண்டும் என்று கேரளாவில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் முண்டியடித்தனர். இதனால் வேட்பாளரைத் தேர்வுதில் காங்கிரஸ் தலைமைக்கு இழுபறி ஏற்பட்ட நிலையில், 'சகோதரி பிரியங்காவை நிறுத்தலாம். நான் செய்ய வேண்டிய கடமைகளை அவர் நிறைவேற்றட்டும். நம் கட்சியில் வேறு யார் அங்கே நின்றாலும், மக்களின் நம்பிக்கையைப் பெறு சிபாரிசு செய்தாராம்." "பிரியங்கா முதலில் தயக்கம் காட்டினார் என்கிறார்களே?” கடினம்' என, ராகுலே தன் சகோசிய்வ "தேர்தல் பிரச்சாரங்களில் பலமுறை ஈடுபட்ட அனுபவமுள்ள பிரியங்கா, இதுவரை நேரடியாக தேர்தலில் போட்டியிட்டதில்லை.
அவரை களமிறக்க சிலமுறை முயற்சிகள் நடந்தபோதும், அவற்றை பிரியங்கா தவிர்த்து வந்திருக்கிறார். அதேபோல் இந்த முறையும் தவிர்க்கப் பார்த்தார். ஆனால், கட்சியின் மூத்த தலைவர்களோ, வயநாடு மக்கள் காங்கிரஸ் மீதும், ராகுல் மீதும் வைத்துள்ள நம்பிக்கையால்தான் ராகுலை இரண்டாம் முறையாகவும் வெற்றிபெற வைத்தனர்.
ஆனால், ராகுல் இந்தத் தொகுதி மூலம் கிடைத்த பதவியை கைவிட்டு விட்டதால், வயநாடு மக்கள் ஏமாற்றத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
அதனால் நீங்கள் நின்றால்தான், இந்த ஏமாற்றத்தை ஈடுகட்டமுடியும் என்றெல்லாம் பிரியங்காவிடம் சொல்லியிருக்கிறார்கள். ராகுலும் இதையே அவரிடம் வலியுறுத்தினாராம். அதனால்தான் இந்தமுறை வயநாட்டில் களமிறங்க பிரியங்கா சம்மதம் தெரிவித்தார் என்கிறார்கள்.
Denne historien er fra October 23-25, 2024-utgaven av Nakkheeran.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra October 23-25, 2024-utgaven av Nakkheeran.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
விஜய்யின் மாநாட்டு மூவ்!
ஹலோ தலைவரே, இதுவரை தேர்தலில் நின்றிராத பிரியங்கா காந்தி, முதல்முறையாக கேரளாவில் களமிறங்குகிறார்.\"
டிப்பர் லாரி டெண்டரில் ஊழல்!
கடலூரில், டிப்பர் லாரி கொள்முதல் டெண்டரில் குறைந்த விலைப் புள்ளிதாரரை விடுத்து, அதிக விலைப்புள்ளி குறிப்பு பட்ட நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கியதில் ஊழல் நடந்துள்ளது ஆதாரப்பூர்வமாக அம்பலமாகியுள்ளது.
புதுக்கோட்டை! போலீசா வேட்டை! கால் உடையும் ரவுடிகள்!
கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க ரவுடிகள் வேட்டையைத் தொடங்கிய போலீஸ், சில என்கவுன்டர்களையும் செய்தது ரவுடிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மாவலி பதில்கள்
நடிகர் ரஜினிகாந்த் சமீபகாலமாக காவல்துறை சார்ந்த கதைக் களங்களையே தேர்வு செய்வது பற்றி? யாருக்குத் தெரியும், ரஜினிகாந்த் காவல்துறை சார்ந்த கதைகளைத் தேர்வு செய்கிறாரா, இல்லை இயக்குநர்கள் காவல்துறை கதைகளாகச் சொல்கிறார்களா? மொத்தத்தில் விருந்து காரசாரமாக இருந்தால் ரசித்துச் சாப்பிட்டுப் போகவேண்டியதுதான். 'கூலி'யில் லோகேஷ் கனகராஜ் என்ன கேரக்டர் கொடுக்கிறார் என பார்க்கலாம்!
போர்க் களம்
ஜெயலலிதா பற்றி 'எம்.ஜி.ஆர். யார்? நூலில் ஆர்.எம்.வீரப்பன் எழுதியது தொடர்கிறது...
முறைகேடு! கேள்வி கேட்டவருக்கு கொலை மிரட்டல்!
மதுரை மாவட்ட அலுவலகத்தின்024 காவல் கண்காணிப்பாளர் துர்காதேவி என்பவர், தனது கணவர் நவனி மற்றும் குழந்தைகளுடன் கண்ணீர்மல்க மதுரை மாவட்ட எஸ்.பி.யிடம், “என் கணவரின் உயிருக்கு ஆபத்து! காப்பாத்துங்க சார்!” என்று புகார் கொடுக்க, \"விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கிறோம்” என்று உறுதியளித்தார் எஸ்.பி.
ஆடினது குத்தமா?
ஒரேயொரு டான்ஸ்! தமன்னாவை அமலாக்கத்துறை விசாரணை வரை கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது.
வெளியேறும் கவர்னர்? மோடி-அமித்ஷா நெருக்கடி!
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் சர்ச்சையில் சிக்கிய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அதிரடி கிடைத்துள்ளன.
அமைச்சர் Vs எம்.பி.முற்றும் மோதல்!
தி.மு.க. கூட்டணியிலிருக்கும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தைத் தீவிரமாகக் கையிலெடுத்தபோதே கூட்டணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுகிறதோ என்ற ஐயப்பாடு எழுந்தது.
சைபர் குற்றவாளிகளின் புதிய அவதாரம்! உஷார் மக்களே!
முன்பெல்லாம் நமது செல்போனுக்கோ, தொலைபேசிக்கோ அழைத்து துல்லியமான வடஇந்திய சாயலுடனான தமிழில், 'உங்க ஏ.டி.எம்.கார்டுமேல இருக்கும் பதினாறு நம்பர் சொல்லுங்கோ' என ஆரம்பிப்பார்கள். இதற்கே ஆயிரக்கணக்கான பேர் ஏமாந்தபோதும், பலரும் சுதாரித்துக்கொண்டு இவர்களிடமிருந்து நழுவிவிடுவோம்.