CATEGORIES
Kategorier
நுழைவாயில் வரவேற்பு வளைவு இடைக்காலத் தடையுத்தரவு நீடிப்பு
வீரமுனை கிராமத்திற்கான நுழைவாயில் வரவேற்பு வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இரு தரப்பின் வாதப்பிரதிவாதங்களின் பின்னர் எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ரணிலுக்கு முடியாதாம்; பீட்டருக்கு முடியுமாம்
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை மாற்ற முடியாது என்று ஜனாதிபதி கூறுகிறார்.
சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தில் குதிப்பு
தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், வியாழக்கிழமை (20) முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில், பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் ஈடுபட்டுள்ளதாக, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.ரீ.எம்.தாஜுதீன் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு மக்களின் அனுமதியுடனேயே காணிகள் சுவீகரிப்பு
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள காணிகள் பொதுமக்களின் அனுமதியுடன் தான் அளவீடு செய்யப்பட்டு அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்படுவதாகக் காணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
“ஒட்டிப்பிறந்த பிள்ளைகளை பிரித்து உயிர்களை காக்கவும்”
அரநாயக்க பகுதியில் ஒட்டிப் பிறந்த பிள்ளைகளைப் பிரித்து உயிர்களைக் அவர்களின் காக்கத் தேவையான நடவடிக்கைகளைக் கூடிய விரைவில் சுகாதார அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜெய்சங்கர் வந்தது ஏன்?
இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகித்து பாரதூரமான சில வேலைத் திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ள இந்தியா திட்டமிடுவதாக தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இதனால் இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டுமெனவும் தெரிவித்தார்.
“இந்தியாவை மீறி எதுவுமே அசையாது”
இந்தியாவை மீறி எந்தவொரு நாடும் இலங்கைப் பிரச்சினையில், தமிழ் மக்களின் இனப் பிரச்சினையில் தலையிட முடியாது.
"இந்தியாவுக்கு மிகுந்த நல்லெண்ணம் உள்ளது"
இலங்கை போன்ற அயல் நாடுகள் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானவை என்றும் இந்தியாவுக்கு இலங்கை மீது மிகுந்த நல்லெண்ணம் இருப்பதாகவும் அமைச்சர் ஜெயசங்கர் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கூறினார்.
3 மைல்கற்கள் எட்டப்பட்டன
இருவரும் இணைந்து திறந்து வைத்தனர்
தீவிரப்படுத்தும் புட்டின்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 24 ஆண்டுகளுக்கு பிறகு வடகொரியா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
செக் குடியரசை வென்ற போர்த்துக்கல்
ஜேர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடரில் இன்று நடைபெற்ற செக் குடியரசுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் வென்றது.
தடைசெய்ய வலியுறுத்தல்...
திருகோணமலை நகரில் நடைபாதை வியாபாரத்தை தடைசெய்யக\" கோரி திருகோணமலை பொதுச் சந்தை வியாபாரிகள், மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக, புதன்கிழமை (19) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மூவர் கைது
அச்சுவேலி, பத்தமேனி காளிகோவில் பகுதியை சேர்ந்த ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது கடந்த வியாழக்கிழமை (13) அதிகாலை 12.15 மணியளவில் தாக்குதல் நடத்தினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“கத்துக்குட்டிக்கு கதையே தெரியாது"
பா ராளுமன்ற நடைமுறைகள் எவை, அரசாங்க கட்டமைப்பு என்றால் என்ன என்பது பற்றி அறிவில்லாத அரசியல் கத்துக்குட்டிகளே பன்முகப்படுத்தப்பட்ட நிதியைக்கூட இலஞ்சம் எனக்கூறி கூவித்திரிகின்றன என்று கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
"பாலினத்தை மாற்ற எம்.பிக்கள் முயற்சி”
பாலின சமத்துவ சட்டமூலம் பாலின சிகிச்சை மாற்று வியாபா ரத்தை ஊக்குவிப்பதால் இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் ஆண் எம்.பி.க்கள் பெண்களாக வும், பெண் எம்.பி.க்கள் ஆண்களாகவும் மாற்றமடைய விரும்புகின்றார்கள் என்றே கருதப்படுமென தேசிய சுதந்திர முன்னணியின் தலை வரும், சுயாதீன எதிரணி எம்.பி.யுமான பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
"காட்டுப் பாதை 30 திறக்கப்படும்”
கதிர்காமத்துக்கான காட்டுப் பாதை எதிர்வரும் 30 ஆம் திகதி திறக்கப்படும்.
மஹிந்த ஓய்வு?
பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசியலுக்கு விடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"இழுவை மடிவலை பயன்பாடு அதிகரிப்பு"
மீன்பிடி நடவடிக்கையின் போது இழுவை மடிவலை பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதும், யாழ்.
‘சதை உண்ணும் பக்டீரியா': பீதி வேண்டாமென அறிவுறுத்தல்
ஜப்பான் முழுவதும் 'சதை உண்ணும் பக்டீரியா' என பொதுவாக அழைக்கப்படும் ஸ்ட்ரெப்டோகாக்கல் நச்சு அதிர்ச்சி நோய்க்குறி (STSS) பரவுவது குறித்த அதிகரித்து கவலைகள் அதிகரித்துவரும் நிலையில், பீதியடைய வேண்டாமென இலங்கை சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளனர்.
பௌத்த இடங்கள் வர்த்தகத்துக்கு
வடக்கு, கிழக்கிலுள்ள பௌத்த இடங்கள் எதிர்கால அரசியல் நோக்கத்தில் இனவாத அடிப்படையில் வர்த்தக நிறுவனங்களுக்கு வழங்க திட்டமிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் இது தொடர்பில் அமைச்சரவையில் ஏதாவது தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளனவா என்று சுயாதீன எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் கேள்வியெழுப்பினார்.
“முஸ்லிம் மாணவிகளின் பெறுபேறுகள் வெளிவரும்”
திருகோணமலை சாஹிரா கல்லூரியின் மாணவிகள் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மண்டபத்தில் பரீட்சை மேற்பார்வையாளர் அதி கவனத்துடன் செயற்பட்டுள்ளதாக தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இடைநிறுத்தப்பட்டுள்ள அந்த மாணவிகளின் பெறுபேறுகள் ஒரு சில தினங்களில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
"ஆபத்தாக மாறலாம்"
தேர்தலை ஒத்தி வைத்து பதவிக்காலத்தை நீடிப்பதற்கு ஜனாதிபதி முயற்சிப்பதாக கூறப்படும் நிலையில், பாலியல் சமத்துவம் தொடர்பான சட்டமூலம் குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளாமை எதிர்காலத்தில் ஆபத்தானதாக மாறலாம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
வவுனியாவில் சிறு நிலநடுக்கம்
வவுனியா, மதவாச்சி ஆகிய பிரதேசங்களில் பல கிராமங்களில் 2.3 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக புவிசரிதவியல், நில அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
“ஜனாஸாக்களை எரித்த பாவத்தின் பங்காளி ரணில்"
கொரோனா பெருந்தொற்றுத் தாக்கத்தில் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்த கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் பாவத்தின் பங்காளியாக தற்போதைய ஜனாதிபதி பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) ஜனாதிபதியின் உரை தொடர்பில் தனது கருத்தை வெளியிட்டு உரையாற்றும் போதே வீரவன்ச இவ்வாறு கூறியுள்ளார்.
ஜப்பானில் அரிய வகை பக்டீரியாவால் 1,000 பேர் பாதிப்பு
மனிதர்களின் தசையை தின்று 48 மணி நேரத்தில் ஆளையே கொள்ளும் புதிய வகை பக்டீரியா ஜப்பானில் பரவி வருவதாக கூறப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானை வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகள்
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடரில், சென். லூசியாவில் செவ்வாய்க்கிழமை (18) ஆப்கானிஸ்தானுடனான குழு சி போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.
வீதியை புனரமைத்து தருமாறு ஆர்ப்பாட்டம்
தலவாக்கலை-டயகம பிரதான வீதி பாரியளவில் சேதமடைந்துள்ளதாகவும், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களைச் செலுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்து தலவாக்கலை-டயகம பிரதான வீதியில் சேவையில் ஈடுபட்டுவரும் அனைத்து தனியார் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் செவ்வாய்க்கிழமை (18) நாகசேனை நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரச அதிகாரிக்கு எதிராக களத்தில் குதித்தார் ஜீவன்
நோர்வூட் - நியூவெளி தோட்ட மக்களுக்கு வீடு கட்டுவதற்கு ஒதுக்கிய நிலத்தை முறைகேடாகக் கைப்பற்ற முயன்ற அரச அதிகாரிக்கு எதிராக அமைச்சர் ஜீவன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.
“உயர்நீதிமன்றை மூடி விடலாம்”
ஜனாதிபதி தந்திரமான முறையில் நீதிமன்றத்திற்கே சவால் விடும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார் என்ற குற்றஞ்சாட்டிய விமல் வீரவன்ச, உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கே சவால் விட முடியுமென்றால் அவ்வாறான உயர்நீதிமன்றம் இருப்பதில் பலனில்லை என்றும், அவற்றை மூடிவிடலாம் என்றார்.
“கடற்றொழில் அமைச்சரே கண்ணை திறந்து பார்"
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய இழுவைப் படகைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்தியத் துணைத் தூதரகம் முன்பாக மீனவர்கள் போராட்டமொன்றை, செவ்வாய்க்கிழமை (19) முன்னெடுத்திருந்தனர்.