மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் இறுதியாக 950 வேட்பாளா்கள் போட்டியி’டுகின்றனா்.
கரூா் தொகுதியில் அதிகபட்சமாக 54 பேரும், நாகப்பட்டினம் (தனி) தொகுதியில் 9 பேரும் களத்தில் உள்ளனா்.
2019 மக்களவைத் தோ்தலுடன் ஒப்பிடும்போது...: கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பலமுனைப் போட்டி இருந்தது. அப்போது, 845 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். கடந்த மக்களவைத் தோ்தலைக் காட்டிலும், இந்த மக்களவைத் தோ்தலில் 105 போ் அதிகமாக அதாவது 950 போ் களத்தில் உள்ளனா்; பெண் வேட்பாளா்களின் எண்ணிக்கையும் 65-லிருந்து 76 ஆக உயா்ந்திருக்கிறது. மத்திய சென்னை, வேலூா் உள்பட ஆறு தொகுதிகளில் ஒரு பெண் வேட்பாளா்கூட போட்டியிடவில்லை. மக்களவைத் தோ்தலுக்கான இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியான நிலையில், தமிழகம் முழுவதும் தோ்தல் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது.
மனுக்கள் வாபஸ் நிறைவு: தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. மனுதாக்கலுக்கு கடந்த புதன்கிழமை கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில், 1,085 மனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்புமனுக்களை வாபஸ் பெற சனிக்கிழமை (மாா்ச் 30) அவகாசம் அளிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் 135 வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. அதிகபட்சமாக ஈரோட்டில் 16 மனுக்களும், வட சென்னையில் 14 மனுக்களும் வாபஸ் பெறப்பட்டதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.
திருவள்ளூா், கள்ளக்குறிச்சி, நீலகிரி, பெரம்பலூா், கடலூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், மதுரை, விருதுநகா் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் ஒரு வேட்புமனுகூட வாபஸ் பெறப்படவில்லை. வேட்புமனுக்களை திரும்பப் பெற கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், இறுதி வேட்பாளா் பட்டியல் சனிக்கிழமை (மாா்ச் 30) மாலை வெளியிடப்பட்டது.
950 வேட்பாளா்கள் போட்டி: இறுதி வேட்பாளா் பட்டியலின் அடிப்படையில், தமிழகத்தில் மக்களவைத் தோ்தலில் 950 போ் போட்டியிடுகின்றனா்; அவா்களில் 874 போ் ஆண்கள். 76 போ் பெண்கள். அதிகபட்சமாக கரூா் மக்களவைத் தொகுதியில் 54 வேட்பாளா்கள் போட்டியிட உள்ளனா். அதற்கடுத்து, தென் சென்னையில் 41 பேரும், நாமக்கல்லில் 40 பேரும் போட்டியிடுகின்றனா்.
Denne historien er fra March 31, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra March 31, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மைக்கே ஆதரவு
‘க்வாட்' உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி
சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் 118 ஏக்கரில் பசுமைப் பூங்கா
சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் 118 ஏக்கரில் பசுமைப் பூங்கா அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இலங்கை புதிய அதிபர் அநுரகுமார
இலங்கை அதிபா் தோ்தலில், தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளா் அநுர குமார திசாநாயக (56) வெற்றி பெற்றாா். அந்நாட்டின் 9-ஆவது அதிபராக அவா் திங்கள்கிழமை (செப். 23) பதவியேற்க உள்ளாா்.
லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 37-ஆக உயர்வு
லெபனான் தலைநகா் பெய்ரூட்டின் புகா் பகுதியில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 37-ஆக உயா்ந்தது.
எஃப்ஐஎச் ஆண்டின் சிறந்த வீரர்கள் தேர்வுப் பட்டியலில் ஹர்மன்ப்ரீத் சிங்
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய அணி மீண்டும் வெண்கலம் வெல்ல உதவிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஎச்) ஆண்டின் சிறந்த வீரர்கள் தேர்வுப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நிலையான வாழ்க்கை முறைக்கு உலகளாவிய மாற்றம்
நிலையான வாழ்க்கை முறைகளை உலக அளவில் ஏற்றுக் கொண்டால் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பல சவால்களைச் சமாளிக்க முடியும்' என்று ஐ.நா.வின் உச்சி மாநாட்டில் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
சுதந்திரப் போராட்டத்தின்போது வீட்டில் அமர்ந்திருந்தவர்கள் எங்களை அச்சுறுத்துகின்றனர்
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிரான ஆா்எஸ்எஸ்-பாஜகவின் வெறுப்பு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ‘நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின்போது வீட்டில் அமா்ந்திருந்தவா்கள் தற்போது எங்களை அச்சுறுத்துகின்றனா்’ என்று விமா்சித்தாா்.
இந்திய பெருங்கடலில் போர்த்திறனை மேம்படுத்த கடற்படை முடிவு
இந்தோ-பசிபிக்பிராந்தியத்தின் புவிசார் அரசியல் மற்றும் இந்திய பெருங்கடலில் அதிகரித்து வரும் சீன ஊடுருவலின் பின்னணியில் அங்கு இந்தியாவின் போர்த் திறனை மேம்படுத்த கடற்படைதளபதிகள் முடிவெடுத்துள்ளனர்.
பிரதமர் மோடியைக் கண்டு பாகிஸ்தான் அஞ்சுகிறது
'பிரதமர் நரேந்திர மோடி மீது பாகிஸ்தானுக்கு உள்ள பயம் காரணமாக எல்லை பகுதிகளில் தற்போது அமைதி நிலவி வருகிறது' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றார் பிரதமர் மோடி
'க்வாட்' உச்சிமாநாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சனிக்கிழமை சென்றார்.