பீஷ்மாச்சாரியாரும் விஷ்ணு ஸகஸ்ரநாமமும்
Aanmigam Palan|January 16, 2024
நம்முடைய பாரத நாட்டில் பல பலச் சமயங்கள் இருக்கின்றன. பல விதமான வழிபாட்டு முறைகள் இருக்கின்றன.
பீஷ்மாச்சாரியாரும் விஷ்ணு ஸகஸ்ரநாமமும்

ஆனால் இத்தனை வழிபாட்டு முறைகளுக்கும் அடிப்படையாக வேதம் இருக்கிறது. வேதத்தை வேதவியாசர் நான்கு வேதங்களா கத் தொகுத்துக் கொடுத்தார் என்பது நமக் குத் தெரியும். வேதத்தை அடிப்படையாகக் கொண்டு, நம்முடைய வாழும் முறையும் வழிபாட்டு முறையும் அமைந்திருக்கிறது. நான்கு வேதங்களையும் இறைவனின் மூச் சுக் காற்றாக நாம் கொள்கின்றோம். வேதம் வேறு; இறைவன் வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான். வேதம், இறைவனைக் காட் டித் தருகிறது. இறைவன் வேதத்தை நமக்கு காட்டித்தந்தான். "பரம கருணையினால் வேதத்தை அருளிச் செய்தான்" என்று ஆசாரிய ஹ்ருதயசூத்ரக்காரர் சொல்லுகின் றார். வேதம், எல்லோருக்கும் விளங்காது. 

அதற்காக இதிகாச புராணங்கள் படைக் கப்பட்டன. இதிகாசங்கள் இரண்டு. ஒன்று ராமாயணம். இன்னொன்று மகாபாரதம். மகாபாரதம் ஐந்தாவது வேதம் என்று போற்றப்படுகிறது. மஹாபாரதத்தில் எத்த னையோ சிறப்பான விஷயங்கள் இருந்தா லும் மிக முக்கியமான இரண்டு சிறப்புக் களை குறிப்பிட வேண்டும்.

1.பகவத்கீதை.

2.விஷ்ணு சகஸ்ரநாமம்.

பகவத் கீதை என்பது சகல உபநிடதங்க ளின் சாரமாக, பகவான் கிருஷ்ணரால் அர்ஜூனனுக்குச் சொல்லப்பட்டது. விஷ்ணு சஹஸ்ரநாமம் என்பது பகவா னான கண்ணனை, எதிரே அமரவைத்து, தர்மபுத்திரனை ஒரு காரணமாகக் கொண்டு பீஷ்மாச்சாரியார் சொன்னது. அப்படிச் சொல்லும் போது பல ரிஷிகள் இருந்தனர். வேதத்தைத் தொகுத்துக் கொடுத்த வியாச மகரிஷியும் அருகில் அமர்ந்திருந்தார். ஸகஸ்ரநாமம் என்று சொன்னாலே அது விஷ்ணு சஹஸ்ர நாமத்தைத் தான் குறிக்கும். விஷ்ணு சகஸ்ரநாமம் எப்படி அவதரித்தது என்கிற பின்னணியைப் பார்க்கவேண்டும்.

குருசேத்திர யுத்தம் முடிவு பெற்றது. கௌரவர்கள் அனைவரும் அழிந்து போயி னர். பாண்டவர்கள் பக்கலிலும் பெருத்த சேதம் ஏற்பட்டது. பஞ்ச பாண்டவர்களும் மற்றும் ஒரு சிலரும் மட்டும் இருந்தனர்.

தர்மபுத்திரன் மிகவும் கவலை அடைந்தான். போரில் வெற்றி பெற்ற பின்பும் அவனுக்கு நிம்மதி இல்லை. தவித்தான். கண்ணனிடம் போனான்.

"போரில் வெற்றி பெற்றும் எனக்கு எந்த நிம்மதியும் இல்லை. எனவே என் மனக் கவ லைக்கு ஒரு மருந்து சொல். நான் உன்னையே நம்பி இருக்கிறேன். என்னுடைய கவலை தீர ஏதாவது ஒரு வழியைச் சொல்” என்று கண்ணனிடம் வேண்டினான்.

Denne historien er fra January 16, 2024-utgaven av Aanmigam Palan.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra January 16, 2024-utgaven av Aanmigam Palan.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA AANMIGAM PALANSe alt
"ஸங்கல்ப ஸித்த சாயி”
Aanmigam Palan

"ஸங்கல்ப ஸித்த சாயி”

அனுபூதியடைந்த மகான் ஒரு வரது முன்னிலையில் வசிப்பது சாதகன் ஒருவனுக்கு மிக விரைவான ஆன்மிக முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பது பெரியோர் வாக்கு.

time-read
6 mins  |
October 01, 2024
சிந்தாதேவி
Aanmigam Palan

சிந்தாதேவி

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணி மேகலையில் கூறப்பட்டுள்ள தெய்வம் சிந்தாதேவி ஆவாள்.

time-read
1 min  |
October 01, 2024
ஆகாசமூர்த்தி
Aanmigam Palan

ஆகாசமூர்த்தி

இந்தியத் திருநாட்டின் பல்வேறு அரச மரபினரின் கலைப் படைப்புகளைத் தொகுத்து நோக்குவோ மாயின் காண்போரின் உள்ளத்தை ஈர்க்கும் தனிச்சிறப்பு ஆடல் வல்லான் திருமேனிகளுக்கே உரியவைகளாக இருப்பதைக் காணலாம்.

time-read
2 mins  |
October 01, 2024
நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!
Aanmigam Palan

நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!

யோகயுக்தோ விசுத்தாத்மா ஜிதேந்த்ரிய ஸர்வபூத்த்மபூதாத்மா குர்வன்னபி நலிப்யதே (5:7)

time-read
4 mins  |
October 01, 2024
12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!
Aanmigam Palan

12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!

இந்து மதத்தின் மூல புருஷராக விளங்குப வர் வியாசபகவான்.

time-read
1 min  |
October 01, 2024
கசனின் குருபக்தி
Aanmigam Palan

கசனின் குருபக்தி

மூவுலகையும் ஆள வேண்டும் என்ற எண்ணம் தேவர்களும், அசுரர்களும் இடையே போட்டி ஏற்பட்டு கொண்டே இருந்தன.

time-read
4 mins  |
October 01, 2024
தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!
Aanmigam Palan

தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!

சென்ற இதழில், உமை யம்மையானவள் மலைமகள் அலை மகள் கலைமகள் மூன்று சக்தி களின் அம்சமாகவே கருதப்படுகிறாள்.

time-read
3 mins  |
October 01, 2024
பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!
Aanmigam Palan

பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!

ஓரு கோயிலுக்கு மிக முக்கியமான ஒன்று, ஆகமம்.

time-read
4 mins  |
October 01, 2024
அவதாரப் புருஷர் மத்வர்!
Aanmigam Palan

அவதாரப் புருஷர் மத்வர்!

12.10.2024 - ஸ்ரீமத்வாச்சாரியார் ஜெயந்தி

time-read
4 mins  |
October 01, 2024
காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!
Aanmigam Palan

காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!

என் புத்தக சாலையில் ஏதோ ஒரு புத்தகத் தைத் தேடியபோது, எப் போதோ வாங்கிய “பொன்னியின் செல்வன்\" கிடைத்தது. படித்து வெகு நாள் ஆனதால் மறுபடியும் முதல் அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கினேன். என்னை மறந் தேன்... இதோ அந்த வர்ணனை சில வரிகளில். வீர நாராயண ஏரிக்கரை, ஆடித் திங்கள் பதி னெட்டாம் நாள், முன் மாலை நேரத்தில், அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாரா யண ஏரிக்கரை மீது ஒரு வாலிபவீரன் குதிரை ஏறிப்பிரயாணம் செய்து கொண்டிருந்தான்.

time-read
4 mins  |
October 01, 2024