உண்மையான பலத்தை அறிவதற்காக 2026 தேர்தலில் விஜய் கட்சி தனித்துப் போட்டியிடத் திட்டம்!

தனது கட்சியின் உண்மையான பலத்தை அறிவதற்காக 2026 சட்டசபைத் தேர்தலில் விஜய் கட்சி தனித்துப் போட்டியிடத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்ற அறிவிப்பு வெளிவரக் காரணம் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். அதைத் தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்தார். கட்சியின் கொடியும் அறிமுகம் செய்யப்பட்டது.
அக்டோபர் 27-ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் முதலாவது மாநாட்டையும் விஜய் நடத்தினார். அதில் முக்கிய அறிவிப்புகளையும், கொள்கைகளையும் வெளியிட்டார்.
திராவிடமும், தமிழ்த்தேசியமும் இரு கண்கள் எனக் குறிப்பிட்டார். ஒரு சில தலைவர்களைப் போல வீர வசனம் பேசாமல் செயலில் காட்டுவேன் எனவும் தெரிவித்தார்.
தனது கொள்கை எதிரி பா.ஜ.க. என்றும், அரசியல் எதிரி தி.மு.க. என்றும் வெளிப்படுத்தினார். அத்துடன் 2026 சட்டசபைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று தெரிவித்த அவர், கடைசி நேரத்தில் யாராவது கூட்டணிக்கு வந்தால் அவர்களுக்கும் ஆட்சியில் பங்களிக்கப்படும் என்றும் கூறினார்.
Dit verhaal komt uit de November 19, 2024 editie van Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Al abonnee ? Inloggen
Dit verhaal komt uit de November 19, 2024 editie van Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Al abonnee? Inloggen
முதல்வர் ஸ்டாலினுக்கு எர்ணாவூர் நாராயணன் பாராட்டு!
திருச்சியில் 290 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயர் சூட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக எர்ணாவூர் நாராயணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கை: இந்தியா மீதான 100 சதவீத வரி இன்று முதல் அமலுக்கு வருகிறது!
இந்தியாவிற்கு போட்டியாக பரஸ்பர வரி விதிக்கும் அமெரிக்காவின் நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
மதுரவாயலில் 2 ஜே.சி.பி. எந்திரங்களின் பேட்டரிகள் திருட்டு!
மதுரவாயலில் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே நிறுத்தப்பட்ட 2 ஜே.சி.பி. எந்திரங்களின் பேட்டரிகள் இரவில் திருடப்பட்டது.
காஷ்மீருக்குள் ஊடுருவிய 5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொலை!
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவ படையினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மீண்டும் இந்திய நிலைகளை நோக்கி தாக்குதல் நடத்தினர்.
அண்ணாமலை வேண்டும்; அ.தி.மு.க. வேண்டாம்!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அண்ணாமலைக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கச்சத்தீவை தாரை வார்த்த தி.மு.க.வே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது வேடிக்கையானது! டி.டி.வி. தினகரன் அறிக்கை!!
கச்சத்தீவை தாரைவார்த்த திமுகவே, அதனை மீட்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது வேடிக்கையானது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா : 35 பெண்களுக்கு சூரிய மகள் விருது! துர்கா ஸ்டாலின், நடிகர்கள் பிரபு, சத்தியராஜ் வழங்கினர்!!
முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு சாதனை புரிந்த மகளிர் 35 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

பல்லாவரம் அருகே பெண்ணை கல்லால் அடித்துக் கொன்ற கள்ளக்காதலன்!
பல்லாவரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணை கல்லால் அடித்துக் கொன்ற தாம்பரம் மாநகராட்சி லாரி ஓட்டுநர், தானாகவே சென்று காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

திருப்போரூர் அருகே பைக் மீது கார் மோதி 3 பேர் பரிதாப சாவு!
திருப்போரூர் அருகே மோட்டார்சைக்கிள்மீது கார் மோதியது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகிவிட்டார்கள்.

கச்சத்தீவை மத்திய அரசுமீட்கவேண்டும்!
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!!