தாம்பரத்தில் பயங்கரம்: தி.மு.க. தொழிற்சங்கத் தலைவர் காரில் கடத்திக் கொலை!

தாம்பரத்தில் இருந்து தி.மு.க. தொழிற்சங்க அதிபரை காரில் கடத்தி கழுத்தை இறுக்கி கொலை செய்து பிணத்தை செஞ்சி அருகே மலைப்பகுதியில் புதைத்தனர். இது தொடர்பாக நில ஆக்கிரமிப்புக் கும்பலை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (71). இவர் சென்னை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தி.மு.க.வை சேர்ந்த இவர் தொழிற்சங்க தலைவராகவும் இருந்து வந்தார். குமாரின் உறவினர் ஒருவர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வருகிறார்.
அவருக்கு சென்னை இசிஆர் உத்தண்டி பகுதியில் ஒரு கிரவுண்ட் காலி நிலம் உள்ளது. அது பல கோடி ரூபாய் மதிப்பு உடையது. இந்த இடத்தை தி.மு.க. தொழிற்சங்க தலைவர் குமார் மேற்பார்வை செய்து வந்தார். இந்த நிலையில் அந்த நிலத்தை ஊரப்பாக்கத்தை சேர்ந்த ரவி என்பவர் ஆக்கிரமிப்பு செய்து, போலி பத்திரங்கள் தயாரித்து, இடத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்டி, கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து, மோசடி செய்துள்ளார் என கூறப்படுகிறது.
இந்த தகவல் மும்பையில் உள்ள நிலத்தின் உரிமையாளருக்கு தெரிய வந்தது. உடனடியாக சென்னையில் உள்ள தனது உறவினரான, தி.மு.க. தொழிற்சங்க தலைவர் குமாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. குமார், நிலத்தை சென்று பார்த்துவிட்டு, தங்களுடைய நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக, தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார்.
Dit verhaal komt uit de March 19, 2025 editie van Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Al abonnee ? Inloggen
Dit verhaal komt uit de March 19, 2025 editie van Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Al abonnee? Inloggen
முதல்வர் ஸ்டாலினுக்கு எர்ணாவூர் நாராயணன் பாராட்டு!
திருச்சியில் 290 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயர் சூட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக எர்ணாவூர் நாராயணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கை: இந்தியா மீதான 100 சதவீத வரி இன்று முதல் அமலுக்கு வருகிறது!
இந்தியாவிற்கு போட்டியாக பரஸ்பர வரி விதிக்கும் அமெரிக்காவின் நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
மதுரவாயலில் 2 ஜே.சி.பி. எந்திரங்களின் பேட்டரிகள் திருட்டு!
மதுரவாயலில் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே நிறுத்தப்பட்ட 2 ஜே.சி.பி. எந்திரங்களின் பேட்டரிகள் இரவில் திருடப்பட்டது.
காஷ்மீருக்குள் ஊடுருவிய 5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொலை!
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவ படையினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மீண்டும் இந்திய நிலைகளை நோக்கி தாக்குதல் நடத்தினர்.
அண்ணாமலை வேண்டும்; அ.தி.மு.க. வேண்டாம்!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அண்ணாமலைக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கச்சத்தீவை தாரை வார்த்த தி.மு.க.வே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது வேடிக்கையானது! டி.டி.வி. தினகரன் அறிக்கை!!
கச்சத்தீவை தாரைவார்த்த திமுகவே, அதனை மீட்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது வேடிக்கையானது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா : 35 பெண்களுக்கு சூரிய மகள் விருது! துர்கா ஸ்டாலின், நடிகர்கள் பிரபு, சத்தியராஜ் வழங்கினர்!!
முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு சாதனை புரிந்த மகளிர் 35 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

பல்லாவரம் அருகே பெண்ணை கல்லால் அடித்துக் கொன்ற கள்ளக்காதலன்!
பல்லாவரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணை கல்லால் அடித்துக் கொன்ற தாம்பரம் மாநகராட்சி லாரி ஓட்டுநர், தானாகவே சென்று காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

திருப்போரூர் அருகே பைக் மீது கார் மோதி 3 பேர் பரிதாப சாவு!
திருப்போரூர் அருகே மோட்டார்சைக்கிள்மீது கார் மோதியது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகிவிட்டார்கள்.

கச்சத்தீவை மத்திய அரசுமீட்கவேண்டும்!
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!!