சினிமா எனும் ஊடகத்தை பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல் சமூக மாற்றத்துக்கானதாகவும் பார்க்கும் வெகு சில இயக்குநர்களில் மிக முக்கியமானவர் இயக்குநர் மாரி செல்வராஜ்.
சிறிய விதை எப்படி ஆலமரமாக பரந்து, விரிந்து பிரமிப்பை உண்டாக்குகிறதோ அதுபோல்தான் இவருடைய ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ போன்ற படைப்புகள் சமூகத்தில் பெரும் அதிர்வுகளை உண்டாக்கின.
அந்த வரிசையில் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்திருக்கும் ‘மாமன்னன்’ மிகுந்த எதிர்பார்ப்புகளை உண்டாக்கியுள்ளது என்பதை டிரைலருக்கான வரவேற்பு சொல்லாமல் சொல்லியுள்ளது.
‘மாமன்னன்’ என படத்துக்கு பெயர் வைக்க என்ன காரணம்?
கதைக்கு வலுவான தலைப்பு தேவைப்பட்டுச்சு. என்னுடைய முந்தைய படங்களான ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ போன்ற படங்களுக்கான தலைப்பு கதைக்கான பொருத்தத்தோடு இருந்திருக்கும்.‘மாமன்னன்’ பொறுத்தவரை அதிகாரத்தைக் குறிக்கும் ஒரு பெயராக இருக்கணும் என்ற அடிப்படையில் வைக்கப்பட்ட தலைப்பு. வழக்கம்போல் இந்தப் படமும் சமூக நீதி பேசும் படமாக இருக்கும். நிச்சயமாக எளிய மனிதர்களின் வாழ்வியல் போராட்டங்கள், மனவேதனை, அவர்களுக்கும் அதிகாரத்துக்குமான இடைவெளி என எல்லாவற்றையும் படம் பேசும்.
உதயநிதி...?
உதய் சாருக்கு என்னுடைய படங்கள் பிடிக்கும். ‘பரியேறும் பெருமாள்’ வெளியான சமயத்திலேயே சேர்ந்து படம் பண்ணலாமானு அவரிடமிருந்து அழைப்பு வந்துச்சு. பொது வாழ்க்கையில் தன்னை முழுமையாக ஐக்கியப்படுத்திக் கொண்டதால் தன்னுடைய சினிமா கரியரில் கடைசிப் படமாக என்னுடைய இயக்கத்தில் படம் பண்ணணும் என்ற அவர் என்னை தேர்வு செய்தது மகிழ்ச்சியைக் கொடுத்துச்சு.
நான் சொன்ன கதை அவருக்கு பிடிச்சது. எனக்கிருக்கும் அரசியல் புரிதலைப் பற்றி அவருக்குத் தெரியும். அதனால், அவரும் கதையை உள்வாங்கும் விதத்திலும், கதையைப் புரிந்து கொள்வதிலும் எந்தவித சிக்கலும் இல்லாமல் இருந்துச்சு.
Bu hikaye Kungumam dergisinin 07-07-2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kungumam dergisinin 07-07-2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
AC கும்மாங்குத்து!
அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.
வாழ்கை ஓரு சினிமா
காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.
சோஷியல் மீடியா மீது வழக்கு!
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!