கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் பேரூராட்சியில், குப்பைகள் அள்ளிச் செல்ல, டிப்பர் லாரி கொள்முதல் செய்வதற்காக கடந்த மார்ச் மாதம் ஆன்லைன் மூலம் ஒப்பந்தம் கோரப்பட்டது. ஒரு டிப்பர் லாரி கொள்முதல் செய்ய தமிழக அரசு, 26 லட்சம் ரூபாய் ஒதுக்கியிருந்தது. சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த ஹைடெக் இன்ஜினியரிங் சொல்யூஷன்ஸ், சேலத்திலுள்ள கிரிஸ்டல் மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட், சென்னையைச் சேர்ந்த இன்னவேட்டிவ் இன்ஜினியர்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரி விண்ணப்பம் செய்திருந்தன.
இவற்றில், ஹைடெக் இன்ஜினியரிங் சொல்யூஷன்ஸ் நிறுவனம் 25.65 லட்சத்தில், அரசு விதிகளின்படி டிப்பர் லாரியை வடிவமைத்துத் தருவதாக விலைப் புள்ளி குறிப்பிட்டிருந்தது. அதே நேரம், கிரிஸ்டல் மோட்டார்ஸ் நிறுவனம் 25.94 லட்சம் ரூபாயும், இன்னவேட்டிவ் நிறுவனம் 26 லட்சம் ரூபாயும் விலைப் புள்ளி குறிப்பிட்டிருந்தன. அரசு விதிகளின்படி, குறைந்தபட்ச விலைப் புள்ளி (எல் 1) குறிப்பு பட்ட ஹைடெக் இன்ஜினியரிங் நிறுவனத்திற்குதான் பணி ஆணை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அமைச்சரின் அழுத்தம், கையூட்டு காரணமாக அதிக விலைப் புள்ளி குறிப்பிட்டிருந்த கிரிஸ்டல் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
இதனால் ஏமாற்றமடைந்த ஹைடெக் இன்ஜினியரிங் நிறுவனத்தின் இயக்குநர் ஜாபர், ஒப்பந்தம் வழங்கியதில் அப்பட்டமாக விதிமுறைகள் மீறப்பட்டதாக கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தார். ஆனால் இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை.
இதுதொடர்பாக ஜாபர் நம்மிடம் பேசினார்.
"பொது சுகாதாரத்துறைக்குத் தேவையான டிப்பர் லாரிகள், ஹைட்ராலிக் ரெக்கவரி வாகனங்களை அரசு விதிகளுக்கு உட்பட்டு வடிவமைத்துத் தருகிறோம். இந்தத் துறையில் 13 ஆண்டுகள் அனுபவம். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களிலும் அரசு ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
Bu hikaye Nakkheeran dergisinin October 23-25, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Nakkheeran dergisinin October 23-25, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
விஜய்யின் மாநாட்டு மூவ்!
ஹலோ தலைவரே, இதுவரை தேர்தலில் நின்றிராத பிரியங்கா காந்தி, முதல்முறையாக கேரளாவில் களமிறங்குகிறார்.\"
டிப்பர் லாரி டெண்டரில் ஊழல்!
கடலூரில், டிப்பர் லாரி கொள்முதல் டெண்டரில் குறைந்த விலைப் புள்ளிதாரரை விடுத்து, அதிக விலைப்புள்ளி குறிப்பு பட்ட நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கியதில் ஊழல் நடந்துள்ளது ஆதாரப்பூர்வமாக அம்பலமாகியுள்ளது.
புதுக்கோட்டை! போலீசா வேட்டை! கால் உடையும் ரவுடிகள்!
கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க ரவுடிகள் வேட்டையைத் தொடங்கிய போலீஸ், சில என்கவுன்டர்களையும் செய்தது ரவுடிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மாவலி பதில்கள்
நடிகர் ரஜினிகாந்த் சமீபகாலமாக காவல்துறை சார்ந்த கதைக் களங்களையே தேர்வு செய்வது பற்றி? யாருக்குத் தெரியும், ரஜினிகாந்த் காவல்துறை சார்ந்த கதைகளைத் தேர்வு செய்கிறாரா, இல்லை இயக்குநர்கள் காவல்துறை கதைகளாகச் சொல்கிறார்களா? மொத்தத்தில் விருந்து காரசாரமாக இருந்தால் ரசித்துச் சாப்பிட்டுப் போகவேண்டியதுதான். 'கூலி'யில் லோகேஷ் கனகராஜ் என்ன கேரக்டர் கொடுக்கிறார் என பார்க்கலாம்!
போர்க் களம்
ஜெயலலிதா பற்றி 'எம்.ஜி.ஆர். யார்? நூலில் ஆர்.எம்.வீரப்பன் எழுதியது தொடர்கிறது...
முறைகேடு! கேள்வி கேட்டவருக்கு கொலை மிரட்டல்!
மதுரை மாவட்ட அலுவலகத்தின்024 காவல் கண்காணிப்பாளர் துர்காதேவி என்பவர், தனது கணவர் நவனி மற்றும் குழந்தைகளுடன் கண்ணீர்மல்க மதுரை மாவட்ட எஸ்.பி.யிடம், “என் கணவரின் உயிருக்கு ஆபத்து! காப்பாத்துங்க சார்!” என்று புகார் கொடுக்க, \"விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கிறோம்” என்று உறுதியளித்தார் எஸ்.பி.
ஆடினது குத்தமா?
ஒரேயொரு டான்ஸ்! தமன்னாவை அமலாக்கத்துறை விசாரணை வரை கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது.
வெளியேறும் கவர்னர்? மோடி-அமித்ஷா நெருக்கடி!
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் சர்ச்சையில் சிக்கிய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அதிரடி கிடைத்துள்ளன.
அமைச்சர் Vs எம்.பி.முற்றும் மோதல்!
தி.மு.க. கூட்டணியிலிருக்கும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தைத் தீவிரமாகக் கையிலெடுத்தபோதே கூட்டணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுகிறதோ என்ற ஐயப்பாடு எழுந்தது.
சைபர் குற்றவாளிகளின் புதிய அவதாரம்! உஷார் மக்களே!
முன்பெல்லாம் நமது செல்போனுக்கோ, தொலைபேசிக்கோ அழைத்து துல்லியமான வடஇந்திய சாயலுடனான தமிழில், 'உங்க ஏ.டி.எம்.கார்டுமேல இருக்கும் பதினாறு நம்பர் சொல்லுங்கோ' என ஆரம்பிப்பார்கள். இதற்கே ஆயிரக்கணக்கான பேர் ஏமாந்தபோதும், பலரும் சுதாரித்துக்கொண்டு இவர்களிடமிருந்து நழுவிவிடுவோம்.