பிக்-அப் பாயிண்ட் திடீர் மாற்றம், இருசக்கர வாகனங்கள் நுழைய தடை - அல்லல்படும் சென்னை விமான நிலைய பயணிகள்
Dinakaran Chennai|September 25, 2024
சென்னை விமான நிலையம் தமிழகத்தில் முக்கிய விமான நிலையமாக இருந்து வருகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டுக்குள் விமானம் மூலம் பயணிக்கின்றனர்.
பிக்-அப் பாயிண்ட் திடீர் மாற்றம், இருசக்கர வாகனங்கள் நுழைய தடை - அல்லல்படும் சென்னை விமான நிலைய பயணிகள்

60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானப் பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். சுமார் 400 முதல் 500 வரையிலான விமானங்களும் வந்து போகின்றன.
இந்தியாவிலேயே முக்கிய விமான முனையமாக திகழும் சென்னை விமான நிலையத்தில் பராமரிப்பு பணிகள் பல தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருவது பயணிகளுக்கு பல்வேறு வகையில் சிரமங்களை ஏற்படுத்துவதாக உள்ளது.

விமான நிலையத்துக்குள் சென்று பயணிகளை “பிக்அப்” செய்து வர வேண்டுமானால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக பயணிகள் தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. வாகனங்களில் உள்ளே செல்பவர்களை ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் மதிப்பதில்லை என்றும், அவர்களை வாகனங்களுடன் விரட்டுவதிலும், அவர்களிடம் எந்த வகையிலாவது மிரட்டி வசூல் செய்வதிலும்தான் குறியாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

எந்த வழியாக செல்ல வேண்டும் என்று கேட்டால், கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் “இந்த இடத்தில் நிற்கக்கூடாது” என்று வாகன ஓட்டிகளை விரட்டுவதில்தான் குறியாக இருக்கிறார்களே தவிர, “இந்த வழியாக செல்லுங்கள்” என்று சொல்லக் கூட மனமில்லாதவர்களா அந்த ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் செயல்படுகிறார்கள் என்று பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். சென்னை விமான நிலையத்தில், முதல் பிரச்னை என எடுத்துக் கொண்டால், வெளிநாடு மற்றும் உள்நாட்டில் இருந்து வரும் பயணிகள் விமானத்தில் இருந்து தரை இறங்கியவுடன் கொடிக்கம்பம் அருகே உள்ள நுழைவு வாயில் வழியாக எளிதாக டாக்சிகளில் ஏறிச் செல்வது வழக்கமாக இருந்து வந்தது.

தனியார் வாடகை கார்களில் ஏறிச் செல்வதற்கு வசதியாக, இந்த “பிக்-அப் பாயிண்ட்” செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த “பிக்அப் பாயிண்ட்” ஏரோஹப் வெஸ்ட் கட்டிடத்தில் உள்ள மல்டிலெவல் அடுக்குமாடி கார் பார்க்கிங்க்கு மாற்றப்பட்டுவிட்டது. இதனால் பயணிகள் அனைவரும் தங்களது லக்கேஜ்களை தூக்கிக் கொண்டு சுமார் 1 கி.மீ தூரம் நடந்து செல்லும் அவலம் உருவாகி உள்ளது. இதனால், கர்பிணிகள், முதியோர், குழந்தைகள் என விமானப் பயணிகள் பலரும் அல்லாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Bu hikaye Dinakaran Chennai dergisinin September 25, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Dinakaran Chennai dergisinin September 25, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAKARAN CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
மழைநீர் கால்வாய் பணியால் கடும் நெரிசல்
Dinakaran Chennai

மழைநீர் கால்வாய் பணியால் கடும் நெரிசல்

கும்மிடிப்பூண்டி, அக். 2: கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பஜார் பகுதிக்கு ஆத்துப் பாக்கம், மாதர்பாக்கம், வலுதலம்பேடு, புதூர், ரெட்டம்பேடு, ஆரம்பாக்கம், மங்காவரம், பொன்னேரி, தேவம்பேடு, பட்டுப்புள்ளி, அப்பாவரம், மேலகழனி, நத்தம், தேர்வழி, அயநெல்லூர், பெத்தி குப்பம், சுண்ணாம்புகுளம், மெதிபாளையம், ஓபசமுத்திரம் உள்ளிட்ட 150 கிராமங்களைச் சேர்ந்த கிராமப்புற மக்கள் தங்கள் தேவைக்கு கார், லாரி, இருசக்கர வாகனங்கள் மூலம் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

time-read
1 min  |
October 02, 2024
சேதமடைந்து காணப்படும் விஏஓ அலுவலக கட்டிடம்
Dinakaran Chennai

சேதமடைந்து காணப்படும் விஏஓ அலுவலக கட்டிடம்

கிருஷ்ணாகுப்பம் கிராமத்தில் சேதமடைந்து முட்புதர்கள் சூழ்ந்து காணப்படும் விஏஓ அலுவலக கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

time-read
1 min  |
October 02, 2024
சாலையில் பள்ளம் தோண்டியதால் 16 மணிநேரம் போக்குவரத்து நிறுத்தம்
Dinakaran Chennai

சாலையில் பள்ளம் தோண்டியதால் 16 மணிநேரம் போக்குவரத்து நிறுத்தம்

மணலியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக மணலி பகுதி முழுவதும் சிறிய, பெரிய குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன.

time-read
1 min  |
October 02, 2024
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள்
Dinakaran Chennai

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள்

மாவட்ட அளவிலான 'தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை' விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் விழா திருவள்ளூரில் நடந்தது. இந்த விழாவிற்கு கலெக்டர் த.பிரபு தலைமை தாங்கினார்.

time-read
1 min  |
October 02, 2024
புதிய டிரான்ஸ்பார்மர்கள்
Dinakaran Chennai

புதிய டிரான்ஸ்பார்மர்கள்

செங்குன்றம் அடுத்த பாடிய நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட மொண்டியம்மன் நகர், நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர், ஆட்டம் தாங்கள் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை செய்யப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

time-read
1 min  |
October 02, 2024
முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்
Dinakaran Chennai

முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என்று பொன்னேரி நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

time-read
1 min  |
October 02, 2024
Dinakaran Chennai

பெண்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி

பழவேற் காடு மீனவப் பகுதியில் வசிக்கும் பெண்களுக்கு சுய தொழில் மூலம் வாழ்க் கையில் முன்னேறுவதற்கு சுய தொழில் பயிற்சிகள் இந்தியன் வங்கி சார்பில் அளிக்கப்பட்டு வருகிறது.

time-read
1 min  |
October 02, 2024
ஆந்திராவிலிருந்து குட்கா கடத்திய வாலிபர் கைது
Dinakaran Chennai

ஆந்திராவிலிருந்து குட்கா கடத்திய வாலிபர் கைது

திரு வள்ளூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு தடுக்கும் வகையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

time-read
1 min  |
October 02, 2024
மெட்ரோ ரயில்களில் 92.77 லட்சம் பேர் பயணம்
Dinakaran Chennai

மெட்ரோ ரயில்களில் 92.77 லட்சம் பேர் பயணம்

செப்டம்பர் மாதத்தில் 92,77,697 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
October 02, 2024
ஆவடி ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்காததால் பயணிகள் கடும் அவதி
Dinakaran Chennai

ஆவடி ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்காததால் பயணிகள் கடும் அவதி

ஆவடி ரயில் நிலையத்தில் சுரங்கப் பாதை அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தைக் கடந்து செல்கின்றனர்.

time-read
1 min  |
October 02, 2024