தமிழ் அரசியலின் முதுசம் என்றழைக்கப்படும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த பெரும் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன், ஜூன் 30ஆம் திகதி இரவு 11 மணியளவில் காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 91 ஆகும்.
உடல் நலக் குறைவு காரணமாக, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், காலமானார். அன்னாரின் இறுதிக் கிரியைகள், சொந்த ஊரான திருகோணமலையில், ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெறும்.
அன்னாரின் பூதவுடல், கொழும்பில் மலர்ச்சாலையில் செவ்வாய்க்கிழமை (02) அஞ்சலிக்காக வைக்கப்படும். புதன்கிழமை (03) பாராளுமன்றத்தில் வைக்கப்படும்.
அதன் பின்னர், சம்பந்தனின் உடல் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படும்.
1977 முதல் 1983 வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அவர், 2015 செப்டெம்பர் 3 முதல் 2018 டிசம்பர் 18 வரை எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரின் மறைவுக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தலைவர்கள் உட்பட அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் ஜெய்சங்கர், தமிழ் நாட்டுத் தலைவர்கள் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இலங்கையில் இருக்கும் ராஜதந்திரிகளும் தங்களுடைய இரங்கலை பதிவு செய்துள்ளனர்.
"ஒற்றுமைக்காக உழைத்தவர்”
Bu hikaye Tamil Mirror dergisinin July 02, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Tamil Mirror dergisinin July 02, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
அமைச்சரின் பேச்சுக்கு சமந்தா காட்டமான பதில்
நாக சைதன்யாவுடனான விவாகரத்து குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் அமைச்சரின் பேச்சுக்கு, நடிகை சமந்தா காட்டமாக பதிலளித்துள்ளார்.
முதலாவது போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய தென்னாபிரிக்கா
அயர்லாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் புதன்கிழமை (02) நடைபெற்ற முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.
ஜப்பானில் வெடித்தது
2ஆம் உலகப் போரில் புதைக்கப்பட்ட வெடிகுண்டு
மணிப்பூரில் மீண்டும் மோதல்
மணிப்பூரில் நாகா சமூகத்தினரிடையே புதன்கிழமை (02) வெடித்த மோதலின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பலியாகினர்.
லில்லியிடம் தோற்ற றியல் மட்ரிட்
மியூனிச்சை வென்ற வில்லா
பரிசுபெற்ற முன்னாள் அமைச்சருக்கு சிறைத் தண்டனை
சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு 12 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
'கொங்கை' எனும் வலிசுமந்த கதை
இந்த வார்த்தையைக் கேட்கும்போதே சிலருக்குப் பலவிதமான காட்சிகள் கண்முன் வந்து போகலாம்.
போதைக்கு எதிராக கவனயீர்ப்பு
சர்வதேச நல்லொழுக்க தினமான வியாழக்கிழமை (03) அன்று வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரின் ஏற்பாட்டில் போதைக்கு எதிரான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று சங்கானை பேரின்ப தரிப்பு நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது.
“மீனவர்களை விடுவிக்கவும்”
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள
சபாநாயகரும் போட்டியிடார்
மக்கள் மத்தியிலே அரசியல் மாற்றம் ஒன்றின் தேவை உணரப்பட்டது. அதன் விளைவுதான் அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியானார்