Denemek ALTIN - Özgür
"மோடி இலங்கைக்கு போக்க் கூடாது"
Tamil Mirror
|March 20, 2025
இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டுக்குச் செல்லக் கூடாது என மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தினார்.
-

இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய வைகோ, "கடந்த 40 ஆண்டுகளில் 843 மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். ஜனவரி 25ஆம் திகதி முதல் 45 நாட்களில் பல்வேறு தாக்குதல்களை இலங்கை கடற்படை நடத்தி இருக்கிறது.
ஜனவரி 25 அன்று 3 படகுகளில் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்தது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு லட்சக்கணக்கான ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
பெப்ரவரி 2ஆம் திகதி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஏராளமான படகுகளில் மீன் பிடிக்க சென்றனர்.
அவர்களில் 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களின் படகையும் பறிமுதல் செய்தது. பெப்ரவரி. 19ஆம் திகதி, இலங்கை கடற்படை 42 இந்திய மீனவர்களைக் கைது செய்தது.
இலங்கை கடற்படையின் மனிதநேயமற்ற இத்தகைய நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது மீன்பிடி தொழிலை அழிக்க இலங்கை கடற்படை விரும்புகிறது.
Bu hikaye Tamil Mirror dergisinin March 20, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Tamil Mirror'den DAHA FAZLA HİKAYE

Tamil Mirror
13 வருடங்கள் பாடசாலை கல்வியை பெறாது “எந்தக் குழந்தையும் இடைவிலகக் கூடாது”
13 வருடங்கள் கல்வியை பெறாமல் பாடசாலைகளை விட்டுச் செல்லக்கூடாது என்றும் பிள்ளைகளுக்கு சிறுவர் வாழ்க்கையை அனுபவிக்கக்கூடியவாறும், அவர்கள் 13 வருட கட்டாய கல்வியுடன் அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கக்கூடியவாறும் கல்வி மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
2 mins
July 25, 2025

Tamil Mirror
ஆறு மாதங்களில் புற்றுநோயாளர்கள் 36,000 பேர் அனுமதி
மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு நாளாந்தம் 950 முதல் 1,000 பேர் வரை சிகிச்சைக்காக வருகின்றனர்.
1 mins
July 25, 2025
Tamil Mirror
“தனது உயிருக்கு அச்சுறுத்தல்”
மாத்தளை மனித புதைகுழியுடன் தொடர்புடைய கொலையாளிகளின் பிள்ளைகளும், தனியார் சித்திரவதை முகாம்களை நடத்தியவர்களும் இந்த பாராளுமன்றத்தில் இருப்பதாக சபை முதல்வர் வெளியிட்ட கருத்தால் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
1 min
July 25, 2025

Tamil Mirror
உணவு ஒவ்வாமையால் உணவகங்கள் பரிசோதனை
கிண்ணியா பிரதேச சகல உணவகங்களும் பரிசோதனை இடம் பெற்று வருவதாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம். எம். அஜீத், கிண்ணியாவில் வியாழக்கிழமை (24) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்.
1 min
July 25, 2025
Tamil Mirror
வெலிகம பிரதேச சபையைக் கைப்பற்றியது ஐ.ம.ச.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த வெலிகம பிரதேச சபையின் அதிகாரத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) உறுதிப்படுத்தி, தவிசாளர் பதவியைப் பெற்றுள்ளது.
1 min
July 25, 2025

Tamil Mirror
ஆளும் தமிழ் எம்.பிக்கள் இருவர் "பேஸ்புக்கில் இனவாதத்தை தூண்டுவதற்கு முயற்சி”
ஆளும் கட்சி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் பேஸ்புக்கில் தமிழ் மக்களிடையே இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படுகின்றனர் என்று ஐக்கிய மக்கள் சக்தி ஹெக்டர் ஹப்புகாமி தெரிவித்தார்.
1 min
July 25, 2025

Tamil Mirror
வட்டவன் பகுதி விவகாரம்: கடுமையான எதிர்ப்பால் தீர்மானிப்பது இடைநிறுத்தம்
வெருகல் பிரதேச செயலக பிரிவின் வட்டவன் பகுதியில், தொல்லியலுக்கான இடங்கள் இருக்குமாயின் அது பற்றிய தீர்மானம் எதிர்வரும் வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டும் என வெருகல் பிரதேச சபையின் தவிசாளர் சே.கருணாநிதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
1 min
July 25, 2025
Tamil Mirror
ரம்புட்டான் விபத்து அதிகரிப்பு
ரம்புட்டான் மரங்களில் இருந்து விழும் மக்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் அதிகரித்து வருவது குறித்து நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர், இது பழம் பறிக்கும் பருவத்தில் பாதுகாப்பு கவலைகள் எழுந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
1 min
July 25, 2025

Tamil Mirror
வடக்கில், "80,000 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை”
முல்லைத்தீவு மாவட்டத்தில் 54,000 ஏக்கர் காணி, வவுனியா மாவட்டத்தில் 24,000 ஏக்கர் காணி மற்றும் மன்னார் மாவட்டத்தில் 2,000க்கும் மேற்பட்ட ஹெக்டெயர் காணிகளை விடுவிப்பது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகக் காணி, நீர்ப்பாசன பிரதியமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.
1 min
July 25, 2025

Tamil Mirror
போதைப்பொருள் தொடர்பில் 6,000 பேர் கைது
போதைப்பொருள் தொடர்பில் அண்மைக் காலங்களில் 6,000க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min
July 25, 2025