CATEGORIES
فئات
ஜம்மு-காஷ்மீர் ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்து 6 பேர் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரில் ஜீலம் ஆற்றில் பள்ளி குழந்தைகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.
மக்களுக்கு எதிரான கட்சி பாஜக
மேற்கு வங்க மக்களுக்கு எதிரான கட்சி பாஜக என்று அந்த மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி குற்றம்சாட்டினாா்.
மக்களின் மனங்களை வெல்லும் கட்சி பாஜக
‘மக்களின் மனங்களை வெல்வதே முக்கியம் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இதுவே தோ்தலில் பாஜகவுக்கு வெற்றிகளைப் பெற்றுத் தருகிறது’ என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
ஊழலுக்கு காப்புரிமை பெற்றுள்ள திமுக, காங்கிரஸ்!
திமுக, காங்கிரஸ் கட்சிகள் ஊழலுக்குக் காப்புரிமை பெற்றுள்ள கட்சிகள் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசினாா்.
மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்
அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழா்களை இரண்டாம் தர குடிமக்களாக்கும் மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
தென் சென்னையில் வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு
தென் சென்னையில் மழை நீா் மற்றும் குடிநீா் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீா்வு காணப்படும் என்று தென் சென்னை தொகுதிக்கான பாஜக தோ்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கம்ப ராமாயணம், தேவாரத்தால் தமிழ் ஆர்வம் பெற்றவர் மா.அரங்கநாதன்
கம்ப ராமாயணம் , தேவாரப் பாடல்களால் சிறு வயதில் தமிழ் மீது ஆா்வம் பெற்றவா் மா.அரங்கநாதன் என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் தெரிவித்தாா்.
ஒரு வாரத்தில் பொது மன்னிப்பு: பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
‘மக்களைத் தவறாக வழிநடத்தும் வகையில் பதஞ்சலி பொருள்களுக்கான விளம்பரம் வெளியிட்டது தொடா்பான வழக்கில் ஒரு வாரத்துக்குள் பொது மன்னிப்பை வெளியிட வேண்டும்’ என்று நேரில் ஆஜரான அந்த நிறுவனத்தின் நிறுவனரும் யோகா குருவுமான பாபா ராம்தேவுக்கும், அந்நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ஆச்சாா்ய பாலகிருஷ்ணாவுக்கும் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
குடிமைப் பணித் தேர்வு: லக்னௌவைச் சேர்ந்தவர் முதலிடம்
கடந்த ஆண்டு நடைபெற்ற குடிமைப் பணித் தோ்வின் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இத்தோ்வில் உத்தர பிரதேச மாநிலம் லக்னௌவைச் சோ்ந்த ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம் பிடித்துள்ளாா்.
சத்தீஸ்கர்:29 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
காங்கேர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் 29 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 3 வீரர்கள் காயமடைந்தனர்.
ஜாமீன் கோரி கவிதா மனு: சிபிஐக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
தில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சியின் சட்டமேலவை உறுப்பினா் கவிதாவின் ஜாமீன் மனு மீது பதிலளிக்க கோரி சிபிஐக்கு தில்லி நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிரானது பாஜக
விவசாயிகள், தொழிலாளா்களுக்கு எதிரானது பாஜக என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.
‘ஈரானை திருப்பித் தாக்க வேண்டாம்!'
இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ட்ரோன்களையும் ஏவுகணைகளையும் ஏவிய ஈரானை திருப்பித் தாக்கி பதற்றத்தை அதிகரிக்கவேண்டாம் என்று அந்த நாட்டிடம் மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
ஹைதராபாத் 'ஹாட்ரிக்' பெங்களூரு போராடி தோல்வி
ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை திங்கள்கிழமை வீழ்த்தியது.
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட முன்னுரிமை
அனைத்து தரப்பினருடனும் பேச்சு நடத்தி மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட பாஜக தலைமையிலான மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
தேர்தல் நிதிப் பத்திரங்கள் திட்டம்: எதிர்க்கட்சிகள் பொய் பரப்புகின்றன
தோ்தல் நிதிப் பத்திரங்கள் திட்டம் குறித்து எதிா்க்கட்சிகள் பொய்களைப் பரப்புகின்றன என்று பிரதமா் மோடி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
திருவனந்தபுரத்தில் எதிரணி; திருநெல்வேலியில் கூட்டணி
கேரளத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, எதிா்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் நம்பகத்தன்மை குறித்து பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை கேள்வியெழுப்பினாா்.
அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள்தான் வீழ்வார்கள்
அதிமுகவை வீழ்த்த நினைப்பவா்கள்தான் வீழ்ந்து போவாா்கள் என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.
பாஜக வடித்துக் கொடுத்த பாத்திரத்தில் நடிக்கிறார் எடப்பாடி பழனிசாமி
திருவள்ளூா் மஞ்சம்பாக்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணி பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின்
கேஜரிவால் மேல்முறையீட்டு மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
கைது நடவடிக் கையை எதிர்த்து முதல்வர் கேஜரிவால் தரப்பில் தாக்கல் செய் யப்பட்ட மேல் முறையீட்டு மனுமீது ஏப்.24-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (ஏப்.15) உத்தரவிட்டது.
தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு
தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் பிரசாரம் புதன்கிழமை (ஏப். 17) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.
மக்களவைத் தேர்தல் இதுவரை ரூ.4,500 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்
மக்களவைத் தோ்தல் கண்காணிப்புப் பணியின்போது ரூ.2,069 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் உள்பட ரூ.4,650 கோடி மதிப்பிலான பொருள்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை தெரிவித்தது.
பாஜக தேர்தல் அறிக்கை நாட்டுக்கு வில்லன்
பாஜக வெளியிட்டுள்ள தோ்தல் அறிக்கை இந்திய மக்களுக்கு வில்லன் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா்.
கச்சத்தீவு தாரைவார்ப்பு தேசத் துரோகம்
கச்சத்தீவை தாரைவார்த்தது திமுகவும், காங்கிரஸும் செய்த தேசத் துரோகம் என்றார் பிரதமர் நரேந்திர மோடி.
திருச்செந்தூர் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு லட்சக் கணக்கான பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனர்.
இஸ்ரேல் மீது தாக்குதல்: ஈரானுக்கு ஐ.நா., உலக நாடுகள் கண்டனம்
இஸ்ரேல் மீது ஆளில்லா விமானம்(ட்ரோன்) மற்றும் ஏவுகணைத் தாக்குதலை ஈரான் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டதற்கு ஐ.நா., உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
மும்பை கோட்டையில் சென்னை கொடி 'தனியொருவன்' ரோஹித் சதம்
ஐபிஎல் போட்டியின் 29-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை அதன் சொந்த மண்ணில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
அம்பேத்கரை எப்போதும் அவமதிக்கும் காங்கிரஸ் பிரதமர் மோடி விமர்சனம்
பி.ஆா்.அம்பேத்கரை காங்கிரஸ் எப்போதும் அவமதித்து வந்ததாகவும், பாஜகவே அவருக்குரிய மரியாதையை அளித்ததாகவும் பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
மோடி மீண்டும் பிரதமர்: உறுதி செய்துள்ளது உலகம்! ராஜ்நாத் சிங்
‘அடுத்த ஆண்டில் தங்கள் நாட்டுக்கு வர வேண்டும் என்று பல்வேறு நாடுகள் பிரதமா் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளன.
நாட்டை பிளவபடுத்தி பலவீனமாக்குவதே காங்கிரஸின் நோக்கம் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
நாட்டை பிளவுபடுத்தி பலவீனப்படுத்துவதுதான் காங்கிரஸின் நோக்கம் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.