Try GOLD - Free
திசைகாட்டி அரசாங்கம் “திக்குத் தெரியாது தடுமாறுகிறது”
Tamil Mirror
|March 24, 2025
நாட்டை ஆளும் மக்கள் விடுதலை முன்னணியினர் வரலாறு முழுவதும் பாட்டாளி வர்க்கத்தையே பிரதிநிதித்துவப்படுத்தி வந்தனர். நாட்டை அழித்தது முதலாளித்துவ வர்க்கமே என்று இவர்கள் தொடர்ச்சியாகக் கூறி வந்தனர்.
-

ஆனால், முதலாளித்துவ வர்க்கம் என்று சொல்லப்பட்ட அரசாங்கங்கள் மக்களுக்கு நல்லதையே செய்துள்ளன. அவ்வாறு செய்த நல்லனவற்றைக் கூட இவர்கள் குறை கூறித் திரிகின்றனர். தெளிவான அதிகாரம் கிடைத்தும் இன்று இவர்களால் எதையுமே செய்ய முடியாது புலம்பிக் கொண்டிருக்கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
முதலாளித்துவ வர்க்க அரசு நியாயமான விலையில் அரிசியைப் பெற்றுக் கொடுக்கும் போது, உழைக்கும் வகுப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திசைகாட்டி அரசு 100 ரூபாய்க்கு மேலான விலையில் இன்று அரிசியை விற்பனை செய்து வருகிறது.
நாட்டை அழித்ததாக சொல்லப்படும் அரசாங்கங்கள் நியாயமான விலையில் தேங்காயை விற்கும் போது, உழைக்கும் வகுப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக சொல்லப்படும் திசைகாட்டி இன்று 100 ரூபாய்க்கும் அதிகமான விலையில் தேங்காயை விற்பனை செய்து வருகிறது. முதலாளித்துவ வர்க்க அரசாங்கங்கள் அவ்வப்போது உரிய நேரத்துக்கு உர மானியங்களை வழங்கி வந்தன. ஆனால், அறுவடை முடிந்ததுமே இந்த திசைகாட்டி அரசாங்கம் உர மானியத்தை வழங்கி வருகிறது. இந்த அரசாங்கத்தால் உரிய நேரத்துக்கு உரத்தைக் கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர்களுடன் ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
This story is from the March 24, 2025 edition of Tamil Mirror.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Tamil Mirror

Tamil Mirror
மியூனிச்சில் இணையவுள்ள டியஸ்
ஜேர்மனிய பெண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான பயேர்ண் மியூனிச்சில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் முன்களவீரரான லூயிஸ் டியஸ் இணையவுள்ளார்.
1 min
July 29, 2025

Tamil Mirror
வெள்ளத்தில் மீட்கப்பட்ட நீதிகா: மாநிலத்தின் குழந்தையாக அறிவிப்பு
இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் மீட்கப்பட்ட 10 மாதக் நீதிகா என்ற குழந்தையை மாநிலத்தின் குழந்தையாக அரசு அறிவித்து, அவரது வாழ்க்கை, கல்வி என அனைத்துக்கும் அரசே பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.
1 min
July 29, 2025

Tamil Mirror
இந்தியக் குழாமில் பண்டைப் பிரதியிட்ட ஜகதீசன்
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்டுக்கான
1 min
July 29, 2025

Tamil Mirror
இங்கிலாந்து எதிர் இந்தியா: வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த 4ஆவது டெஸ்ட்
இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான மன்செஸ்டரில் புதன்கிழமை (23) ஆரம்பித்து ஞாயிற்றுக்கிழமை (27) அன்று முடிவுக்கு வந்த நான்காவது டெஸ்ட் போட்டியானது வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
1 min
July 29, 2025
Tamil Mirror
ரூ.70,000 கோடி அரசு நிதி முறைகேடு
இந்திய பீகார் மாநிலத்தில் 2016-17 முதல் 2023-24க்குள் பல திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 70,878 கோடி இந்திய ரூபாய் முறைகேடு என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
July 29, 2025

Tamil Mirror
ஐரோப்பிய ஒன்றியத்துடனான 30% வரியை 15% ஆக குறைத்தது அமெரிக்கா
ஐ ரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் இறக்குமதி பொருட்கள் மீதான வரி 15 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
1 min
July 29, 2025
Tamil Mirror
"தோட்டத்தை தருகிறோம் நடத்திக்காட்டுங்கள்”
ரொஷான் ராஜதுரை சவால்
1 min
July 29, 2025
Tamil Mirror
'GovPay' ஊடாக அபராதம் செலுத்தலாம்
மேல் மாகாணத்திலும், அதிவேக நெடுஞ்சாலைகளிலும் 'Govpay' செயலி மூலம் நேரடியாக அபராதம் செலுத்தும் முறை திங்கட்கிழமை (28) முதல் அமல்படுத்தப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
1 min
July 29, 2025
Tamil Mirror
ஜனாதிபதிக்கு மாலைத்தீவில் செங்கம்பள வரவேற்பு
அரசுமுறை பயணத்தை மேற்கொண்டு மாலைத்தீவுக்குச் சென்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
1 min
July 29, 2025
Tamil Mirror
இனிய பாரதியின் சகா ‘தொப்பி மனாப்' கைது
இனிய பாரதியின் சகாவான 'தொப்பி மனாப்' என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினரான சி.விக்கினேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை(27) மாலை குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
1 mins
July 29, 2025