![தனக்குவமை இல்லாத தலைவர் கலைஞர்! தனக்குவமை இல்லாத தலைவர் கலைஞர்!](https://cdn.magzter.com/1342509981/1718100249/articles/oWr5ZjDb81718883051064/1718884339163.jpg)
அண்ணாந்து பார்க்கிற உயரத்தில், ஆகாயம் அளாவ எழுந்து நிற்கும் பல்கலைக்கழகங்களில் இருக்கும் ஆய்ந்தறிந்த பேராசிரியர்களைவிட, அறிவில், ஆற்றலில் கலைஞர் உயரமானவர்.
பாடல் பெற்ற திருமுறைத்தலம் திருக்கோளிலி என்ற திருக்குவளையில் அழுத்தப்பட்ட சமூகத்தில் முத்துவேலர் அஞ்சுகத்தம்மாளுக்கு மகனாக கலைஞர் உதயமானார். அவர் உதித்த அன்று வானவர் யாரும் அவர் மீது மலர்மாரி பொழியவில்லை. அவர் உதயமான அன்று,நாளும் கோளும் இடம் பெயரவில்லை.
அதிசயங்களை நிகழ்த்தப் போகிறவன் உதயமாகி இருக்கிறான். ஆச்சரியங்களை நிகழ்த்தப் போகிற வன் பிறந்திருக்கிறான் என்று யாரும் ஆரூடம் கணிக்கவில்லை.
"சவால்களைச் சந்திக்க வேண்டியது வரும் சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும். அறைகூவல் களுக்கு முகம் கொடுக்க வேண்டியது வரும். ஆபத்தைக் கடக்க நேரிடும். தோளில் தொல்லைகள் வந்து உட்காரும், தர்ப்பைகள் வழிமறிக்கும். களவில் கல் வந்துவிழும்" -என்றெல்லாம் அந்தக் குழந்தை எதிர்பார்த்திருக்காது.
தாலாட்டு கேட்டு, தவழ்ந்து, நடை பயின்று, மரங்களின் பெயரையும் மலர்களின் வண்ணத்தையும் அஞ்சுகத்தாய் சொல்லிக் கொடுக்க, சந்திர பிம்பம் போல் வளர்ந்தார்.
அகரம் முதலான தொடக் கக் கல்வியைத் திருக்குவளையில் கற்ற அருந்தவப் புதல்வனை, உயர்நிலைப் படிப்பிற்காக திருவாரூர் பள்ளிக்கு அழைத் துச் செல்லுகிறார் தந்தை முத்து வேலர். பள்ளியின் தலைமை ஆசிரியர் கஸ்தூரி அய்யங்கார் பள்ளியில் இடமில்லை என்றார். தடம் தெரியாமல் தவிக்கிறார் தந்தை பள்ளியில் சேர்க்காவிட்டால் தெப்பக் குளமான கமலாலயத்தில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்வேன் என்கிறார் கலைஞர். கஸ்தூரி அய்யங் காருக்கு அன்றுதான் முதன் முதவாக வியர்த்தது. போராடித் தான் பள்ளியில் மட்டுமல்ல; தாய்த் தமிழகத்து மக்கள் மத்தியிலும் இடம் பிடித்தார்.
காட்டாற்று வெள்ளத் தில் நீந்திக் கரை சேரவும் அக்கினி ஆற்றில் குளித்தெழ வும் வாழ்க்கை முழுவதும் அவரால் முடிந்தது. உலகின் சிறந்த வரலாற்று வரிகளுக்கு அப்போதே அவர் விலக்கணம் ஆனார்.
Esta historia es de la edición June 2024 de Iniya Udhayam.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición June 2024 de Iniya Udhayam.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
![சொற்கோ கருணாநிதியின் இலக்கணப் பா(டம்)டல்! சொற்கோ கருணாநிதியின் இலக்கணப் பா(டம்)டல்!](https://reseuro.magzter.com/100x125/articles/1078/1729588/sCTRY3NHb1718888068362/1718888560446.jpg)
சொற்கோ கருணாநிதியின் இலக்கணப் பா(டம்)டல்!
உலகின் முதன் முறையாக ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் இலக்கணத்தைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இசைப் பாடல்களாக வெளியிடும் அழகி படப்பாடலாசிரியர் சொற்கோ இரா. கருணாநிதி
![வாழ்வின் குரலாக ஒலிப்பது நாட்டுப்புறப் பாடல்கள் தான்! வாழ்வின் குரலாக ஒலிப்பது நாட்டுப்புறப் பாடல்கள் தான்!](https://reseuro.magzter.com/100x125/articles/1078/1729588/Zjrap2qRk1718887237195/1718888536262.jpg)
வாழ்வின் குரலாக ஒலிப்பது நாட்டுப்புறப் பாடல்கள் தான்!
திராவிட இயக்கங்களின் மேடை, இடதுசாரி இயக்கங்களின் மேடை என முற்போக்கு சிந்தனை மேடைகளில் ஏறிப்பாடுகிறவர் மக்களிசைப் பாடகர் சுப்பிரமணியன், மண்ணின் மீதும், மக்கள் மீதும் காதல் கொண்டவர்கள் நடத்தும் நிகழ்வுகளில் கம்பீரமாக ஒரு குரல் ஒலிக்கிறது என்றால் அது திருவண்ணாமலை மாவட்டம் செல்லங்குப்பம் என்கிற குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த சுப்பிரமணியன் என்கிற இளைஞனின் குரல்.
![பாவம்...என் நண்பன் பாவம்...என் நண்பன்](https://reseuro.magzter.com/100x125/articles/1078/1729588/Jiqwc07hC1718886884755/1718888053608.jpg)
பாவம்...என் நண்பன்
வறுமையால் உண்டான கவலையின் முழு வேதனைகளையும் அனுபவித்திருக்கும் என் நண்பன் தீரபாலன் என்றும் எனக்கு வேண்டியவனாக இருந்தான். நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரே இடத்தில் ஒரே பள்ளிக்கூடத்தில் லோயர் ப்ரைமரிஅப்பர் ப்ரைமரி உயர்நிலைப்பள்ளி வகுப்புகளில் ஒரே பெஞ்சில் அமர்ந்து பத்து வருடங்களைக் கடந்தவர்கள்.
![ஆர்மீனிய ஓவியக் கண்காட்சி! ஆர்மீனிய ஓவியக் கண்காட்சி!](https://reseuro.magzter.com/100x125/articles/1078/1729588/Pt5b8KmxB1718886565650/1718887231309.jpg)
ஆர்மீனிய ஓவியக் கண்காட்சி!
ஓவியர் திருமதி மாரிபோகோசியனின் ஆர்மீனிய கலை பண்பாட்டு கண்காட்சி அண்மையில் சென்னை பாரீஸ் பகுதியில் உள்ள ஆர்மீனியன் சர்ச்சில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
![கால்வனிஸம் கால்வனிஸம்](https://reseuro.magzter.com/100x125/articles/1078/1729588/efNf5_9G-1718886242296/1718886852074.jpg)
கால்வனிஸம்
கால்வனி என்ற பெயரைக் கொண்ட, நிறைய படித்த ஒரு இத்தாலிக் காரர் இருந்தார்.
![சங்கப் புதையலை அள்ளித் தரும் யுகபாரதி! சங்கப் புதையலை அள்ளித் தரும் யுகபாரதி!](https://reseuro.magzter.com/100x125/articles/1078/1729588/fpq9cXYGq1718885518745/1718886541031.jpg)
சங்கப் புதையலை அள்ளித் தரும் யுகபாரதி!
பாடலாசிரியர் யுகபாரதியின் மேல்கணக்கு நூல், நம் காலத்தில் தமிழராகிய நமக்குக் கிடைத்த இலக்கிய விடிவெள்ளி.
![சங்க இலக்கியத்தில் ஆவணப் பதிவர்கள்! சங்க இலக்கியத்தில் ஆவணப் பதிவர்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1078/1729588/2-yDvsmJl1718884345929/1718884848508.jpg)
சங்க இலக்கியத்தில் ஆவணப் பதிவர்கள்!
மே மாதம் முதல் வாரத்தில் சென்னை எழும்பூர் ஆவணக் காப்பகத்தில் ஆவண மாக்கள் (ஆவணப் பதிவர்கள்) என்னும் தலைப்பில் வரலாற்று ஆய்வாளரான ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். உரையாற்றினார்.
![தனக்குவமை இல்லாத தலைவர் கலைஞர்! தனக்குவமை இல்லாத தலைவர் கலைஞர்!](https://reseuro.magzter.com/100x125/articles/1078/1729588/oWr5ZjDb81718883051064/1718884339163.jpg)
தனக்குவமை இல்லாத தலைவர் கலைஞர்!
அளக்க முடியாத ஆற்றலால் மூன்று தலைமுறையினரைத் தன் வசமாக்கிக்கொண்ட கலைஞரைப் போல் ஒரு தலைவரை இந்திய அரசியலில் பார்க்கமுடியாது.
![கலைஞர் எனும் தமிழ்க்கடல் கலைஞர் எனும் தமிழ்க்கடல்](https://reseuro.magzter.com/100x125/articles/1078/1729588/P7HQZz4r91718882054761/1718884204291.jpg)
கலைஞர் எனும் தமிழ்க்கடல்
முத்தமிழறிஞர் கலைஞர்,தன் நூற்றாண்டை நிறைவு செய்து, நூற்று ஒன்றைத் தொடுகிறார். இதில் ஒரு சந்தேகம் எழலாம். கலைஞர் மறைந்துவிட்டாரே. ஆனால் வாழ்வதுபோல் சொல்வது சரியா? என நினைக்கலாம்.
![மோடி யின் தியான நாடகம்! மோடி யின் தியான நாடகம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1078/1729588/xWU0_D2ST1718782219541/1718881757751.jpg)
மோடி யின் தியான நாடகம்!
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப்படும்'.