CATEGORIES
Categorías

முன்னாள் மேலதிக செயலாளருக்கு பிணை
வர்த்தகம் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சகத்தின் மேலதிக செயலாளராக பணியாற்றி பிரியந்த குமார மாயாதுன்ன, குற்றப்புலனாய்வு பிரிவினரால், வியாழக்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளார்.

தடையுத்தரவு கோரிக்கை நிராகரிப்பு
யாழ்ப்பாணத்துக்கு ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள நிலையில் அவருக்கு எதிராகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் எனக் கருதி ஐந்து பேருக்கு எதிராகத் தடை உத்தரவு கோரி யாழ்.

26 நாட்களில் 2 இலட்சம் பயணிகள் வருகை
2025 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து 26 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 2 இலட்சத்து 12 ஆயிரத்து 838 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

புகழுடலுக்கு அணிதிரண்டு அஞ்சலி
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மறைந்த மாவை.

பீற்றர் இளஞ்செழியன் விசாரணைக்கு அழைப்பு
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவையாளருமான அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன், பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

‘77 வது சுதந்திர தினம் எளிமையாய் இருக்கும்”
77வது சுதந்திர தின தேசிய வைபவத்தை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் டாக்டர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தெரிவித்தார்.

குரங்குகள் பார்ட்டி
கண்டியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் குரங்குகள் கூட்டம் புகுந்து, ஒரு அறையில் இருந்து படுக்கை விரிப்பையும், சிற்றுண்டிப் பொருட்களையும், உள்நாட்டு மதுபானம் ஒன்றையும் திருடிச்சென்றுள்ளன.
தேங்காய் உற்பத்திகளை இறக்குமதி செய்ய முடிவு
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள தேங்காய் பற்றாக்குறையை சமாளிக்க, இந்தோனேசியாவில் இருந்து தேங்காய் உற்பத்திகளை இறக்குமதி செய்ய உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அரிசி வர்த்தகர்கள் முஸ்தீபு
அரிசி தொடர்பான பிரச்சினைக்குரிய நிலைமைக்கு தீர்வுகளை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதற்காக அரிசி சந்தையில் இருந்து விலகி போராட்டத்தில் ஈடுபட புறக்கோட்டை அரிசி வியாபாரிகள் தீர்மானித்துள்ளனர்.

மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல்: 15 பேர் உயிரிழப்பு
மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 15 பேர் உயிரிழந்துள்ளனர் 30 பேர் காயமடைந்தனர்.

திரிவேணி சங்கமத்தில் “பக்தர்கள் நீராட வேண்டாம்
திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் நீராட வேண்டாம் என, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

“கனிய மணல் அகழ்வு, காற்றாலை மின் உற்பத்தி தேவையில்லை”
மன்னார் தீவு பகுதியில் முன் னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு குறித்தும் அதனால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தெரிந்து கொள்ள தென்பகுதியில் இருந்து சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையத்தின் பணிப்பாளர் ஹேமந்த விதானகே உள்ளிட்ட குழுவினர் செவ்வாய்க்கிழமை(28) மன்னாரிற்கு வருகை தந்தனர்.

ஜீப்புடன் மூவர் கைது
இரத்தினபுரி அங்கம்மன என்ற இடத்தில் சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட ப்ராடோ ரக ஜீப்புடன் மூன்று பேர் சந்தேகத்தின் பேரில் வலான தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“மனப்பாங்கை மாற்றி கொள்ள வேண்டும்”
பொருளாதார உச்சி மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு

“மக்கள் பக்கம் நாம் நிற்போம்”
பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் குரலை மேலும் மேலோங்கச் செய்து, வலுவான எதிர்க்கட்சியைக் கட்டியெழுப்பும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் பாராளுமன்றத்தில் கூடினர்.
சீமான் மீது வழக்கு பதிவு நாம் தமிழர் கட்சி
தலைமை ஒருங்கிணை ப்பாளர் சீமான் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பஸ்ஸை தாக்கியது காட்டு யானை
திருகோணமலையில் இருந்து கல்முனை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் வண்டி ஒன்றின் மீது யானை தாக்கிய சம்பவம் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகம் அமைந்துள்ள கொழும்பு பிரதான வீதியில் செவ்வாய்க்கிழமை (28) இரவு இடம்பெற்றுள்ளது.

பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு முன்னேறிய ரஷீட
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு இங்கிலாந்தின் அடில் ரஷீட் முன்னேறியுள்ளார்.

மட்டக்களப்பில் வெளிநாட்டு பறவைகள்
மட்டக்களப்பு -கல்முனை பிரதான வீதியோரத்தில் குருக்கள்மடம் ஏத்தாலைக்குத்தில் இயற்கையாகவே அமைந்துள்ள பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகளை சஞ்சரிப்பதை அவதானிக்க முடிகிறது.

11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் ரிட் மனு விசாரணையில் இருந்து நீதியரசர் விலகினார்
கப்பம் கோருவதற்காக, கொட்டாஞ்சேனை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு முன் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரி முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.

மன்னாரில் துப்பாக்கி பிரயோகம்: ஐவருக்கும் விளக்கமறியல்
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக ஜனவரி 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் பெப்ரவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான், புதன்கிழமை (29) உத்தரவிட்டார்.
போதைப்பொருள் விழிப்புணர்வுகள் “விளம்பரமாக மாறுகிறது”
போதைப்பொருள் விழிப்புணர்வுகள் மாணவர்களுக்கு விளம்பரமாக மாறுகிறது என தேசிய அபாயகர ஔடதங்கள் அதிகார சபையின் வட கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான உளவள ஆலோசனை துறை இணைப்பாளர் பஷீர் முஹம்மட் ரஸாட் தெரிவித்தார்.

ஹபரணை விபத்தில் I6 பேர் காயம்
ஹபரணை மின்னேரிய வீதியின் 07வது மைல்கல் பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில், 16 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கண்டி மன்னனின் நினைவு நாள் விழா
இலங்கையின் கடைசி தமிழ் மன்னன் ஸ்ரீவிக்ரம ராஜசிங்கனின் 193வது நினைவு நாள் விழா ஜனவரி-30 ஆம் திகதி தமிழ்நாட்டில் கண்டி மன்னர் கல்லறை அமைந்திருக்கும் நினைவிடமான வேலூர், முத்து மண்டபத்தில் நடைபெறுகிறது.
மைத்திரியின் ரிட் மனு விசாரணைக்கு வருகிறது
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தனக்கு வழங்கப்பட்ட அழைப்பாணையை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனுவை பெப்ரவரி 6ஆம் திகதி முதல் புதிய அமர்வு முன் விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (28) உத்தரவிட்டது.

குளவி கொட்டியதில் மாணவன் மரணம்
கம்பளை புஸ்ஸல்லாவை பிளக்ஃபொரஸ்ட் தோட்டத்தில் வசிக்கும் சஸ்மிதன் திருச்செல்வம் என்ற மாணவன், குளவி கொட்டுக்கு இலக்காகிய மரணமடைந்துள்ளார்.

அர்ச்சுனா எம்.பி கைது
வி.ஐ.பி விளக்குகளை ஒளிரவிட்டு, ஏனைய வாகனங்களின் போக்குவர்த்துக்கு இடையூறு விளைவித்துள்ளார்

“ஜனநாயகத்துக்கும் சட்டத்திற்கும் முரணி"
ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அறிவித்தது ஜனநாயகத்துக்கும் சட்டத்துக்கும் முரணானது என்று நாங்கள் கருதுகிறோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

வடக்கு காசாவுக்குள் பாலஸ்தீனியர்கள் நுழைய அனுமதி
வடக்கு காசாவுக்குள் பாலஸ்தீனியர்கள் நுழைய இஸ்ேரல் அனுமதி அளித்துள்ளது.

சிலுவையின் காலில் இருந்து வடிந்த நீர்
பு.கஜிந்தன் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் காணப்படும் ஆண்டவர் சிலுவையில் இருந்து செவ்வாய்க்கிழமை (28) நீர் கசிந்துள்ளது ஆண்டவர் சிலுவையின் கால் விரல் பகுதியில் இருந்து மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக நீர் கசிந்தது சம்பவம் அறிந்து பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த மக்கள் ஆண்டவரின் காலில் இருந்து வழிந்தோடும் நீரை எடுத்துச் சென்றனர்.