கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 20 லட்சம் மடிக்கணினிகள் 2 ஆண்டுகளில் வழங்கப்படும்
பட்ஜெட்டில் அறிவித்த படி மாணவ, மாணவிகளுக்கு 20 லட்சம் மடிகணினிகள் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் நன்மைக்கும் கொடுக்கும் நிதி நிலை அறிக்கை இது.
பழங்குடியினசமுகத்திற்கும் உரிய உரிமை கொடுக்கும் அரசாக உள்ளது. தமிழகத்திற்கு ரெயில்வே துறைக்கும் மத்திய அரசு 19.68 கோடி ரூபாய் 3 ஆண்டுகளில் கொடுத்துள்ளது.
ஆனால் இதே நிதியை தானே ஒரு ஆண்டுக்கு உ.பிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு செமிகண்டெக்டர் பூங்காக்கள் கோவை, பல்லடத்தில் அமைய உள்ளது.
இந்தியாவில் எலக்ட்ரானிக் பொருள் அதிகம் ஏற்று மதிசெய்யும் மாநிலம் தமிழ் நாடு. 2105 ஆக இருந்த புத்தொழில்நிறுவனங்கள் 5 மடங்கு உயர்ந்து 10649 யாக உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது 32 லட்சத்திற்கும் மேலாக எம்.எஸ்.எம். இன் நிறுவனங்கள் உள்ளன. சிப்காட் மூலம் தொழில்பூங்காவை உருவாக்கியுள்ளோம். இந்த 32 ஆட்சியில் 28 புதிய தொழில் பேட்டை உருவாக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் தமிழகம் முழுவதும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட காலை உணவு திட்டத்தை திமுக அரசு நிறைவேற்று வருகிறது.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் 1.15 கோடி மகளிருக்கு கொடுக்கும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
முதல்வர் ஸ்டாலினுக்கு எர்ணாவூர் நாராயணன் பாராட்டு!
திருச்சியில் 290 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயர் சூட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக எர்ணாவூர் நாராயணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கை: இந்தியா மீதான 100 சதவீத வரி இன்று முதல் அமலுக்கு வருகிறது!
இந்தியாவிற்கு போட்டியாக பரஸ்பர வரி விதிக்கும் அமெரிக்காவின் நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
மதுரவாயலில் 2 ஜே.சி.பி. எந்திரங்களின் பேட்டரிகள் திருட்டு!
மதுரவாயலில் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே நிறுத்தப்பட்ட 2 ஜே.சி.பி. எந்திரங்களின் பேட்டரிகள் இரவில் திருடப்பட்டது.
காஷ்மீருக்குள் ஊடுருவிய 5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொலை!
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவ படையினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மீண்டும் இந்திய நிலைகளை நோக்கி தாக்குதல் நடத்தினர்.
அண்ணாமலை வேண்டும்; அ.தி.மு.க. வேண்டாம்!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அண்ணாமலைக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கச்சத்தீவை தாரை வார்த்த தி.மு.க.வே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது வேடிக்கையானது! டி.டி.வி. தினகரன் அறிக்கை!!
கச்சத்தீவை தாரைவார்த்த திமுகவே, அதனை மீட்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது வேடிக்கையானது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா : 35 பெண்களுக்கு சூரிய மகள் விருது! துர்கா ஸ்டாலின், நடிகர்கள் பிரபு, சத்தியராஜ் வழங்கினர்!!
முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு சாதனை புரிந்த மகளிர் 35 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

பல்லாவரம் அருகே பெண்ணை கல்லால் அடித்துக் கொன்ற கள்ளக்காதலன்!
பல்லாவரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணை கல்லால் அடித்துக் கொன்ற தாம்பரம் மாநகராட்சி லாரி ஓட்டுநர், தானாகவே சென்று காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

திருப்போரூர் அருகே பைக் மீது கார் மோதி 3 பேர் பரிதாப சாவு!
திருப்போரூர் அருகே மோட்டார்சைக்கிள்மீது கார் மோதியது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகிவிட்டார்கள்.

கச்சத்தீவை மத்திய அரசுமீட்கவேண்டும்!
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!!